அரசியல்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் தலைமையில் இன்று (21.11.2024) நடைபெற்றது. அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் ச.காந்திராஜன், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் ஜோ.இளமதி ஜோதிபிரகாஷ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் சே.ஹா.சேக் முகையதீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.திலகவதி, தமிழ்நாடு மாநில…
அங்கன்வாடி புதிய கட்டணங்களை திறந்து வைத்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி.
திண்டுக்கல் மாவட்டம், பொன்னிமாந்துரை ஊராட்சி, குட்டியபட்டியில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அருகில் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ப.க.சிவகுருசாமி, துணைத்தலைவர் ராஜேஸ்வரி தமிழ்செல்வன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர்சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்ட நிருபர் : பாலசிந்தன்
திருநெல்வேலி வள்ளியூரில், நாட்டின் முதலாவது பெண் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாளில், தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்ட காங்கிரஸ் கட்சியினர்!
திருநெல்வேலி,நவ.19:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் வள்ளியூரில், முன்னாள் பாரதப்பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாள், சிறப்பாக கொண்டாடப்பட்டது. இங்குள்ள புதிய பேருந்து நிலையத்தில் வைத்து இந்த விழா நடைபெற்றது. வள்ளியூர் நகர காங்கிரஸ் தலைவர் எஸ். பொன் பாண்டியன் தலைமையில், வள்ளியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் “லயன்” அருள்தாஸ் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், “சிறப்பு அழைப்பாளர்களாக” “திசையன்விளை” விவேக் முருகன், “தணக்கர்குளம்” பஞ்சாயத்து தலைவர் சுயம்புலிங்க துரை ஆகியோர், கலந்து கொண்டனர். இவர்களுடன், வள்ளியூர் நகர…
திருநெல்வேலியில் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய மருத்துவ கட்டிடங்கள் மற்றும் மருத்துவ பிரிவுகளை துவக்கி வைத்த, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்!…
திருநெல்வேலி,நவ.17:- தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 1 கோடியே 10 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள, 23 படுக்கைகள் கொண்ட கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் பிரிவு [PAY WARDS] கட்டிடத்தையும், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள, அரசு மருத்துவ மனையில் பணிபுரியும் பெண்களுக்கான, அனைத்து வசதிகளும் கொண்ட, சிறப்பு அறைகள் கொண்ட கட்டிடத்தையும், பாளையங்கோட்டையை அடுத்துள்ள ரெட்டியார் பட்டியில், 50 லட்சம்…
உளுந்தூர்பேட்டையில் மத்திய அரசு கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அகில இந்திய அளவில் பிரச்சார இயக்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பூவராகவன், ஆனந்தன் தலைமையேற்று கண்டன உரையாற்றினார்கள். இதில் ஒரே தேசம் ஒரே தேர்தல் வாபஸ் பெற வலியுறுத்தியும், விலைவாசி உயர்வை கண்டித்தும்,ரயில்வே உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உள்ள காலிப் பணிகளை நிரப்ப கோரியும்,அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம்…
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், சரியாக செயல்படவில்லை! “புரட்சி பாரதம்” கட்சி குற்றச்சாட்டு!
திருநெல்வேலி,நவ.15:-“புரட்சி பாரதம்” கட்சியின், திருநெல்வேலி மாவட்ட செயலாளர் ஏ.கே.நெல்சன், இன்று [நவ.15] திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியிலுள்ள, நெல்லை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை, சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:- “திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், சரியாக செயல்படவில்லை. பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில், இந்த நிர்வாகம் அடிப்படை வசதிகள் எதனையும் செய்து தரவில்லை. இது குறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை மூலம், ஆய்வு மேற்கொள்ள வேண்டும்! நஞ்சை நிலங்களில், வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ள, சேரன்மகாதேவி பேரூராட்சி செயல் அலுவலர்…
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் தென்காசி மாவட்டத்தில் ஆய்வு.
தென்காசி நவம்பர் 14- தென்காசி மாவட்டம் தென்காசி அடுத்துள்ள கடையம் கடனாநதி நீர்தேக்கத்தில் மாண்புமிகு சுற்றுலாதுறை அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் கமல் கிஷோர் மாவட்ட கழக செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் ஆய்வுகளை மேற்கொண்டனர் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் நடந்து முடிந்த பணிகளை பார்வையிட்டோம் இனி தேவையான பணிகளை விரைவில் நடத்தி முடிக்கவும் தேவையான அறிவுரைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் பின்னர் அங்கிருந்து பழைய குற்றாலம் குற்றாலம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர்…
உடுமலை கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கணக்கம்பாளையம் ஊராட்சியில் 1.38 லட்சம் மதிப்பீட்டு தார் சாலை மற்றும் மழை நீர் வடிகால் போன்ற பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கணக்கம் பாளையம் ஊராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கு 15-வது மானிய குழு நிதி, ஊராட்சி குழு உறுப்பினர் நிதி மற்றும் ஊராட்சி நிதியில் இருந்து ரூ 1 கோடி 38 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜெய் சக்தி நகர், ராயல் லட்சுமி நகர், மாதா லே-அவுட்,சாரதாமணி லே-அவுட்,எம்.ஜி.ஆர் நகர், முத்துகோபால் லே-அவுட், வி.கே.பி.லே-அவுட், அருண் நகர், ஆர்.ஜி நகர், காந்திபுரம், வெங்கடேசா லே-அவுட் பகுதியில்…
பாளையங்கோட்டை கதீட்ரல் மேல்நிலைப்பள்ளியில் 230 மாணவர்களுக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய, எம்.எல்.ஏ.அப்துல் வகாப்!
தென்னிந்திய திருச்சபையின் [டயோசீசன்] கீழ்,பாளையங்கோட்டை முருகன் குறிச்சியில் அமைந்துள்ள, பழைமைவாய்ந்த பள்ளிகளுள் ஒன்றான, “கதீட்ரல்” ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, தமிழக அரசின் “விலையில்லா” மிதிவண்டிகள் வழங்கும் விழா குழந்தைகள் தினமான, இன்று [நவ.14] காலையில், நடைபெற்றது. இவ்விழாவில், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வகாப், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மொத்தம் 230 மாணவர்களுக்கு, இலவச சைக்கிளை வழங்கி, வாழ்த்திப் பேசினார். அப்போது அவர், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின்…
லக்கிநாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்த 100- க்கும் மேற்பட்ட அதிமுகவை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர், தளபதியார் தலைமையிலான திராவிட மாடல் நல்லாட்சியை ஏற்று,கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும்,மாண்புமிகு ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் வசந்தம் க.கார்த்திகேயன், B.Sc.,M.L.A. தலைமையில், சங்கராபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு.அசோக்குமார் முன்னிலையில், இன்று ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, சங்கராபுரம் வடக்கு ஒன்றியம், லக்கிநாயக்கன்பட்டி ஊராட்சி கழக செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான பீர்முகமது ஏற்பாட்டில் லக்கிநாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்த 100- க்கும் மேற்பட்ட அதிமுகவை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் திராவிட…
