அரசியல்
3 – வது முறையாக தமிழக அரசின் சா்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் :
நீலகிரி மாவட்டம் உதகை பெத்லகேம் பெண்கள் மேல்நிலை பள்ளியில் இன்று 30/08/25 பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை தமிழக அரசின் சா்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்3 வது முறையாக நடைபெற்றது. முகாமில் ECG, Ultra Sound, X Ray, Echo, Cbc, Urea Creatine, cholesterol இரத்த பரிசோதனை, ஆகிய பரிசோதனைகள் இலவசமாக பார்க்கப்பட்டது, இந்த முகாம் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.சோமசுந்தரம் தலைமையில் நடைெற்றது. இம்முகாமில், வட்டார மருத்துவ அலுவலர்…
ஓரணியில் தமிழ்நாடு !
கோவை : கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பில், கோவை மாநகர் மாவட்டம் 80வது வார்டு கெம்பட்டி பகுதியில் 50 சதவீதம் இலக்கை எட்டியதையொட்டி, பகுதி செயலாளர் என்.ஜே. முருகேசன் வார்டு செயலாளர் நா.தங்கவேல் தலைமையில், பொது சுகாதாரக் குழு தலைவர், 25 பாக கண்காணிப்பாளர், வர்த்தக அணி அமைப்பாளர் பெ.மாரிசெல்வன் முன்னிலையில், செட்டி வீதியில் உள்ள “கொங்கு மஹாலில்” BLA2, BDA, BLC, I.T….
கோவை மாநகராட்சி சுகாதாரக் குழு கூட்டம் !
பொது சுகாதார குழு தலைவர்.பெ.மாரிசெல்வன் தலைமையில், 28-08-2025 மதியம் 12 மணிக்கு மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள சுகாதார குழு தலைவர் அலுவலகத்தில் மாதாந்திர சாதாரண கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், மாநகர் நல உதவி அலுவலர் மரு.பூபதி, கால்நடை மருத்துவர் சரவணன், மத்திய மண்டலம் சுகாதார அலுவலர் குணசேகரன், மாமன்ற உறுப்பினர்கள் சம்பத், அஸ்ஸலாம் பாஷா, வசந்தா மணி, கமலாவதிபோஸ், சுமித்ரா, அம்சவேணி, மற்றும் அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர். கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்
இளைஞர் அணி அமைப்பாளர் தேர்வு பணி :
நேற்று, 26/8/25 காலை 11 மணி.ஈரோடு மத்திய மாவட்டம். பெருந்துறை சட்டமன்ற தொகுதி. ஊத்துக்குளி தெற்கு ஒன்றியம் மற்றும் ஊத்துக்குளி பேருர் கழகம் ,மொரட்டுப்பாளையம் ஆகியவற்றிலுள்ள அனைத்து கிளைகழகங்களுக்கு ஆன இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிப்பதற்கான படிவங்களை வழங்கினேன். உடன் ஒன்றிய செயலாளர் திரு.ஈஸ்வர மூர்த்தி.பேருர் கழக செயலாளர் திரு.மூர்த்தி ஆகியோர்.மற்றும் பூத் கமிட்டி ஒருங்கிணைப்பாளர்கள். மற்றும் ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள். மேற்கு மண்டல பொறுப்பாளர் தேர்தல் சிங்கம் திரு.செந்தில் பாலாஜி அவர்களின்…
விழுப்புரம் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் !
விழுப்புரம் மாவட்டம் விழுப்புரத்தில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர்..திரு.ஷே.ஷேக்.அப்துல் ரஹமான் தலைமையில் நடைபெற்றது நிகழ்வில் காங்கிரஸ் தலைவர்செல்வபெருந்தகை தொடங்கி வைத்தார். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் : அந்தோணிசாமி
பழனி வட்டம், அமரபூண்டி ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பெற்றுக்கொண்டார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், அமரபூண்டி ஊராட்சியில் இன்று(21.08.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் கலந்துகொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இம்முகாமில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்….
தவெக மாநாட்டிற்கு வந்த தொண்டர் உயிரிழப்பு.
சென்னையை சேர்ந்த பிரபாகரன் (வயது 33) மாநாட்டிருக்கு செல்வதற்கு முன்பாக மயக்கமடைந்து உயிரிழந்தார். நேற்று இரவு சென்னையில் இருந்து நண்பர்களுடன் வேனில் புறப்பட்ட பிரபாகரன் சற்று முன்னதாக மதுரை சக்கிமங்கலம் அருகே வேனை நிறுத்தி விட்டு சிறுநீர் கழிக்க சென்றார். சிறுநீர் கழிக்க சென்ற பிரபாகரனை காணவில்லை என நண்பர்கள் தேடிச்சென்ற பொழுது பிரபாகரன் மயக்க நிலையில் காணப்பட்டார். இதனை அடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் பிரபாகரன் அனுமதிக்கப்பட்ட போது அவர்…
சுதந்திர தின விழா நிகழ்ச்சி :
கோவை மாவட்ட செய்தியாளர் :சம்பத்குமார்79வது சுதந்திர தின விழாவில் தேசியக் கொடி ஏற்றிய பொது சுகாதார குழுத் தலைவர் பெ.மாரிசெல்வன் கோவை, ஆகஸ்ட் 15:இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவை மாநகராட்சி 80வது வார்டில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் தேசியக் கொடியேற்றும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் கோவை மாநகராட்சி பொது சுகாதார குழுத் தலைவர் திரு. பெ.மாரிசெல்வன் அவர்கள் கலந்து கொண்டு, கெம்பட்டி பகுதி மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, மற்றும் செல்வபுரம் ஆண்கள்…
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளர் அல். காலித் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை !
ஆக் 18, நாகர்கோவில் இந்திய தேசியக் கொடியை தரையில் வரைந்து, அதன் மையப்பகுதியான அசோக சக்கரம் மீது நடப்பட்ட கம்பத்தால் துளைத்து, அதன் மேல் காவி கொடியை ஏற்றிச் சிதைத்த சம்பவம் மிக ஆத்திரத்தை மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த செயல், தேசிய ஒற்றுமை மற்றும் கொண்டாட்டத்தின் கண்ணியத்திற்கும், இந்திய தேசியக் கொடியின் புனிதத்திற்கும் தெளிவான அவமரியாதை ஆகும். அத்தகைய தேசவிரோத, ஒழுங்குமீறிய செயல்கள் கடுமையாக ஒழிக்கப்பட வேண்டும். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்;…
திருப்பூர் மாவட்டம் கணியூரில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது.
மடத்துக்குளம் அடுத்துள்ள கணியூர் ஓம் முருகா திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாமில் மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இம்முகாமில் காரத்தொழுவு , ஜோத்தம்பட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக வீட்டுமனை பட்டா , மகளிர் உரிமை தொகை , புதிய ரேசன் அட்டை , முதியோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித்தொகை ஆகியவைகளை பெறுவதற்காக மனுக்களை வழங்கினர்….
