திருநெல்வேலி,நவ.26:-
பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரஙகம் அருகேயுள்ள, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி தலைமையில்,”இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவான தினம்” உறுதிமொழி,இன்று (நவம்பர்.26) காலையில். ஏற்றுக்கொள்ளப்பட்டது.

“இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டின் இறையாண்மையும்- சமநலச் சமுதாயமும், சமய சார்பின்மையும், மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசாக, இந்திய திருநாட்டை நிறுவவும், அதன் குடிமக்கள் அனைவரும் சமுதாய பொருளியல், அரசியல் நீதி எண்ணம், அதன் வெளியீடு, கோட்பாடு, சமய நம்பிக்கை, வழிபாடு இவற்றில் தன்னுரிமை,சமுதாய படிநிலை, வாய்ப்பு நலம் இவற்றில் சமன்மை எய்திட செய்யவும், அனைவரிடையேயும் தனிமனிதனின் மாண்பு, மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவற்றை உறுதிப்படுத்தும், உடன் பிறப்புரிமையினை வளர்க்கவும், உள்ளார்ந்த உறுதியுடையவராய், நம்முடைய அரசமைப்பு பேரவையில்,1949- ஆண்டு, நவம்பர் 26- ஆம் நாளாகிய இன்று ஈங்கிதனால், இந்த அரசமைப்பினை ஏற்று, இயற்றி, நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்!”- என்று “உறுதிமொழி” ஏற்றனர்.

இந்த நிகழ்வில், காவல் துணை ஆணையர் டாக்டர் V.பிரசண்ண குமார், அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் பங்கேற்று, “உறுதிமொழி” ஏற்றுக்கொண்டனர்.

இதுபோல, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார் தலைமையிலும், நெல்லை மாநகராட்சியில், துணை மேயர் ஆர். ராஜூ தலைமையிலும், அனைத்துத்துறை அலுவலர்களும், பணியாளர்களும் “உறுதிமொழி” எடுத்துக் கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
