Headlines

முதல் பட்டத்தில் கரும்பு நடவு.

முதல் பட்டத்தில் கரும்பு நடவு.

உடுமலை அக்டோபர் 31.

மழை நன்றாக பெய்வதால் முதல் பட்டத்தில் கரும்பு சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
உடுமலை ஏழு குளங்கள்பாசனப்பகுதியில் கரும்பு பிரதான பயிராக இருந்தது. ஓராண்டு பயிராக இருப்பதால் சாகுபடிக்கு நீர வளம்‌உள்ள விளை நிலங்களே தேர்வு செய்யப்படுகிறது. அவ்கையில் பள்ளபாளையம் சுற்றுப் பகுதியில் வெல்லம் உற்பத்திக்காக கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.

இப்பகுதியில் நவம்பர், டிசம்பர் ,ஜனவரி மாதங்களில் முதல் பட்டமாகவும் பிப்ரவரி மார்ச் மாதத்தில் நடுபட்டமாகவும் சாகுபடி செய்யப்படுகிறது. பழைய தொழில்நுட்பத்தின் படி நடவுக்கு கரணையே பயன்படுத்தப்படுகிறது. வடகிழக்கு பருவ மழை நன்றாக பெய்து வருவதால் நடப்பு சீசனில் முதல் பட்டத்திலேயே கரும்பு சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *