செப் 07 : உடுமலை
உடுமலை அருகே உள்ள மடத்துக்குளத்தில் நடந்த தேங்காய் ஏலத்தில் கிலோ ரூ 67. 50 விற்பனையானது.
மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ- நாம் திட்டத்தின் கீழ் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் தேங்காய் மற்றும் கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.
நேற்று நடந்த ஏலத்தில் 1.00852.50 கிலோ எடை உள்ள 4,107 தேங்காய்களை 19 வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர். ஏழு விவசாயிகள் பங்கேற்ற நிலையில் ஒரு கிலோ தேங்காய் அதிகபட்சமாக ரூபாய் 67 50க்கும் குறைந்தபட்சமாக 64 என சராசரியாக ரூபாய் 26க்கு விற்பனையானது இதன் மதிப்பு ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 520 ஆகும்.
அதேபோல் தேங்காய் பருப்பு ஏழத்திற்கு 12 விவசாயிகள் 12 மூட்டைகள் அளவுள்ள கிலோ கொப்பரை கொண்டு வந்திருந்தனர். இதில் ஏழு வியாபாரிகள் பங்கேற்று தரத்திற்கு ஏற்ற அதிகபட்சமாக கிலோ ₹220 க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ 180 என பேராசிரியராக 210க்கு விற்பனையானது இதன் மதிப்பு ரூ 26 ஆயிரத்து 321 என ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.
