திருநெல்வேலி, ஜூன்.18:-
தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் [டிஜிபி] உத்தரவுப்படி, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம், வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும், தமிழகம் முழுவதிலும் அந்தந்த மாநகர காவல் ஆணையாளர் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திலும், இன்று புதன்கிழமை [ஜூன்.18] “மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்” நடைபெற்றது.
பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற இந்த முகாமில், “மாநகர காவல் ஆணையாளர்” சந்தோஷ் ஹாதிமணி பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்றார். “பெறப்பட்ட மனுக்கள் மீது, சரியான நடவடிக்கை மேற்கொண்டு, உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும்!” என்று, மனுதாரர்களிடம், மாநகர காவல் ஆணையாளர், உறுதி அளித்தார்.
இம்முகாமில், காவல் துணை ஆணையர்கள் டாக்டர் வி.பிரசன்னகுமார், கிழக்கு வி.வினோத் சாந்தாராம், தலைமையிடம் எஸ்.விஜயகுமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.**
