Headlines

பழனி அருகே நெய்க்காரபட்டி கே.வேலூர் சுயம்பு ஸ்ரீ மண்டு காளியம்மன், உச்சி காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.

பழனியை அருகே நெய்க்காரபட்டி கே.வேலூர் சுயம்பு ஸ்ரீ மண்டு காளியம்மன், உச்சி காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.

பழனி, அருகே நெய்க்காரப்பட்டி பேரூராட்சி, கே.வேலூர் சுயம்பு ஸ்ரீ மண்டு காளியம்மன் கோயில், உச்சி காளியம்மன் கோயில் திருவிழா 27.5.2025 ( செவ்வாய்க்கிழமை ) ஆம் தேதி அன்று சாமி சாட்டுதலுடன் துவங்கியது.

சண்முக நதியில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி, தீர்த்தம் எடுத்து வந்தனர். பூக்குழி இறங்குதல் நிகழ்வு நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கினர். அதனை தொடர்ந்து பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், முடியிறக்குதல், பூச்சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை செய்தனர்.

முளைப்பாரி உடன் அம்மன் கரகம் கங்கையில் விடுதல் நிகழ்வு நடைபெறும். திருவிழாவில் நெய்க்காரப்பட்டி R.வாடிப்பட்டி அ.கலையம்புத்தூர், பாப்பம்பட்டி சின்ன கலையம்புத்தூர், காவலப்பட்டி, பெருமாள்புத்தூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பகுதியில் இருந்து பக்தர்கள் திரளாக அம்மனை வழிபட்டனர் பழனி தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பழனி செய்தியாளர் : பிரேம்குமார்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *