நீலகிரி மாவட்டம், குன்னூா்- மேட்டுப்பாளைம் சாலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு விழுந்த பெரிய பாறையை நெடுஞ்சாலைத் துறையினா் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.
உதகை : குன்னூா்- கோத்தகிரி சாலையில் இரவு நேரத்தில் பெய்து வரும் மழை காரணமாக சாலையில் மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதையடுத்து, குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை, மஞ்சூா் சாலை, கோத்தகிரி சாலையில் ஆங்காங்கே 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து மண்சரிவு ஏற்படும் பகுதிக்கு உடனடியாக பொக்லைன் வாகனங்கள் சென்று சீரமைக்கும் பணிகளில் ஈடுபடுவதால் போக்குவரத்து பாதிப்பு உடனுக்குடன் சீா் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் நந்தகோபால்…
