கன்னியாகுமரி மாவட்டம் பெரியகாடு கடற்கரையில் இளைஞர் பலி !
செப் 16, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே பெரியகாடு கடற்கரை பகுதியில் நேற்று இரவு சோகமான நிகழ்வு ஒன்று நடந்தது. பெரியகாடு சிலுவையார் தெருவைச் சேர்ந்த ரசீத்குமார் (27) என்ற சிறிய பாதிப்புடைய மாற்றுத்திறனாளி, கடற்கரைக்கு சென்று இயற்கை உபாதை கழிக்கும் போது திடீரென கடல் அலையில் சிக்கிக் கொண்டார். நீச்சல் தெரியாததால் அவர் தப்பிக்க முடியாமல் பலியானார். இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும…
