திருநெல்வேலி மேலப்பாளையத்தில், மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்த, “நலம் காக்கும் ஸ்டாலின்!” திட்ட, சிறப்பு மருத்துவ முகாம்! நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, பயன் பெற்றனர்!
திருநெல்வேலி,நவ.8:- முதலமைச்சர் முக ஸ்டாலின், இந்த ஆண்டு (2026) ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி, சென்னை மயிலாப்பூரில், அறிமுகம் செய்த “நலம் காக்கும் ஸடாலின்!” திட்ட சிறப்பு மருத்துவ முகாம், ஒவ்வொரு சனிக்கிழமையும், காலை 9 மணி முதல், மாலை 4 மணி வரையிலும், நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், சனிக்கிழமையாகிய இன்று (நவம்பர்.8),நெல்லை மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம், மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் உள்ள, முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில்”நலம் காக்கும் ஸடாலின்!” திட்ட சிறப்பு மருத்துவ முகாம், நடைபெற்றது….
