கைக்குழந்தையுடன், காலிக்குடங்களோடு, நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆதிதிராவிட மக்கள்!சீரான குடிநீர் வழங்கக்கோரி, கண்டன ஆர்ப்பாட்டம்!
திருநெல்வேலி, ஜூன்.25:-திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், நாங்குநேரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரிய கிராமம் “கூந்தங்குளம்” ஆகும்.மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பறவைகள் சரணாலயம், இங்கு தான் உள்ளது. முழுமையாக ஆதிதிராவிட மக்கள் வசித்து வரும், இங்குள்ள 2-வது வார்டு பகுதியில் கடந்த இரண்டு வாரகாலமாக சீரான குடிநீர் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால், இந்த பகுதியில் வசிக்கும் மக்கள், குடிதண்ணீருக்காக சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணித்து, குதண்ணீர் கொண்டுவர வேண்டியதுள்ளது. முறையான குடிநீர் பலநாட்களாக…
