சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்தியதால் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை : சாம்சங் ஊழியர்கள் போராட்டம் அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா கூறினர். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஏ.சி, வாஷிங் மெஷின், டி.வி., குளிர்சாதனப்பெட்டி உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு 1500க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். சாம்சங் தொழிற்சாலையில் சிஐடியு சங்கம் தொடங்க அனுமதி மறுக்கப்பட்டது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிர்வாகம்…
