நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளுக்கு முன்னுரிமை மற்றும் லஞ்சப் புகார்: மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு செய்ய சிறு விவசாயிகள் கோரிக்கை..!
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டத்தில் கும்பப்பூ நெல் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் (DPC) சிறு விவசாயிகள் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். செண்பகராமன்புதூர், திட்டுவிளை, அந்தரபுரம், கடுக்கரை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையங்களில், ஒவ்வொரு மூடை நெல்லுக்கும் அளவு கூலியாக ரூ. 30 மற்றும் லஞ்சமாக ரூ. 32 என விவசாயிகளிடம் கட்டாய வசூல் செய்யப்படுகிறது. இந்தத் தொகையைக் கொடுக்க விவசாயிகள் தயாராக இருந்தாலும்,…
