திருநெல்வேலியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் நடத்தப்பட்ட, பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம்!
திருநெல்வேலி,அக்.29:-“தமிழக காவல்துறை தலைமை இயக்குனர்” (DGP) உத்தரவுப்படி, “பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்” வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும், அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண் காணிப்பாளர்களால், நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, இன்று (அக்டோபர்.29) காலையில்,பாளையங்கோட்டை “மிலிட்டரி லைன்” பகுதியில் உள்ள,திருநெல்வேலி மாவட்ட காவல் கண்கணிப்பாளர் அலுவலகத்தில், “மாவட்ட காவல் கண்காணிப்பாளர்” நை.சிலம்பரசன் தலைமையில், “பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்” நடைபெற்றது. கூட்டத்தில், மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் இருந்து, மாவட்ட…
