திருநெல்வேலி மேலப்பாளையத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்ற, ஐதரூஸ் பூக்கோயா தங்கள் 163-வது ஆண்டு கந்தூரி விழா! திரளான ஆண், பெண் பக்தர்கள் பங்கேற்பு!
திருநெல்வேலி மேலப்பாளையம் ஞானியார் அப்பா பெரிய தெரு-சின்ன தெரு மேற்கே, பாளையங்கால்வாய் மேற்பக்கம் அமைந்துள்ள, “ஞானமாமேதை” செய்யது அப்துற் றஹ்மான் ஐதரூஸ் பூக்கோயா தங்கள் ஒலியுல்லாவின், 163-வது ஆண்டு நினைவு நிகழ்ச்சியான, 2 நாட்கள் “கந்தூரி” பெருவிழா, தர்ஹா வளாகத்தில் இன்று [ஜனவரி.14] இஸ்லாமிய ஆண்டு ஹிஜிரி 1446, ரஜப் பிறை14-வது மாலையில் கொடி ஏற்றத்துடன் , வெகுவிமரிசையாக தொடங்கியது. முன்னதாக காலையில், புனித ரவ்ழாவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றன. மாலையில், மேளதாளங்கள்,…
