தமிழ்நாடு
கன்னியாகுமரியில் சுற்றுலா வெள்ளம்.
ஆக் 19, கன்னியாகுமரி சுதந்திர தின தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் மூன்று நாட்களில் மட்டும் சுமார் 40 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். கடல் நடுவே உள்ள கண்ணாடி கூண்டு பாலம், திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் ஆகியவற்றை படகில் சென்று கண்டு ரசித்துள்ளனர். ஒரு நாளுக்கு சராசரியாக 3,500 டிக்கெட்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டுள்ளது என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. கேமராமேன் : ஜெனீருடன், குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர்…
தக்கலை பேருந்து நிலைய பகுதியில் போக்குவரத்து காவலர்கள் வாகன சோதனை.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பேருந்து நிலைய பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை நள்ளிரவு தக்கலை போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் அசோக் தலைமையிலான போக்குவரத்து காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக நாகர்கோவில் பகுதியை சேர்ந்த அருள்சுந்தர் என்பவர் ஓட்டி வந்த ஈச்சர் டெம்போவை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர். டிரைவர் அருள்சுந்தர் குடி போதையில் டெம்போவை ஓட்டி வந்தது தெரியவந்ததால் காவலர் பெல்ஜின் ஜோஸ் ஆல்ஹகால் பிரீத்திங் அனலைஸர்…
பதிவு பெறாத மனநல காப்பகங்கள் உடனடியாக பதிவு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்.
குமரி மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்:குமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து தனியார் மற்றும் அரசு மனநல நிறுவனங்களும், ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு மாநில மனநல ஆணையத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தற்போதைய நிலைக்கு பதிவு பெறவில்லை எனக் கண்டறியப்பட்ட அனைத்து மனநல மையங்களும் உரிய முறையில் முதன்மை செயலர், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், சென்னை அவர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பங்கள் tnamhe@gmail.com என்ற மின்னஞ்சல்…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் பட்டா நிலங்களில் கிறிஸ்தவ ஆலயம் கட்டுவதில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அருட்தந்தை அருண் தெரிவித்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “இந்தியா முழுவதும் சிறுபான்மை இன மக்கள் மீது துன்புறுத்தல் இருக்கிறது என்ற தரவுகள் உள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் பாதுகாப்பாகவும், அவர்களுடைய உரிமைகளை முழுமையாகவும் பெறுகின்றனர். மேலும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்களை அதிக அளவில் வழங்கி வருகிறார்” எனக் கூறினார். குமரி மாவட்ட செய்தியாளர்பாவலர்…
கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் கடல்பகுதியில் பாதுகாக்கப்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் பட்டியலில் முதலிடத்தில் வகைப்படுத்தப்பட்ட ராட்சத யானை திருக்கை மற்றும் பெல்ட் சுறா போன்ற மீன்கள் டண்களுக்குத் டன் அளவில் வேட்டையாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வனத்துறை அதிகாரிகள் வழங்கிய தகவலின்படி, சுமார் 20 டன் எடையில் மதிப்பில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட கடல் உயிரினங்கள் மூன்று லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்டு கேரளா மாநிலத்திற்கு கடத்த முயற்சிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் வனத்துறை குழுவினர் திடீர் சோதனை நடத்தி, அந்த வாகனங்களை மடக்கிப்பிடித்துள்ளனர். எனினும், பாதுகாக்கப்பட்ட கடல் உயிரினங்களை டண் கணக்கில் வேட்டையாடியவர்களை அடையாளம் காணும் பணியில் சிக்கல் ஏற்பட்டிருப்பதால், வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்தச் சம்பவம்,…
விழுப்புரம் மாவட்டம் வானூர் ஊராட்சி ஒன்றியம் நல்லாவூர் ஊராட்சியில் மேல்நிலைப்பள்ளியில் நீர்த்தேக்க தொட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் ஊராட்சி ஒன்றியம் நல்லாவூர் ஊராட்சியில் மேல்நிலைப்பள்ளி நீர்த்தேக்க தொட்டியினை மாவட்ட ஆட்சியை தலைவர்.. திரு .ஷே.ஷேக் அப்துல் ரஹமான் நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கான குடிநீர் சரியான அளவில் குளோரிளைஷன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வு மேற்கொண்டார் விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அந்தோணிசாமி
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அப்பா மகன் மகள் தூக்கு.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி யில் ராஜா என்பவர் அவரது நண்பருக்கு நான் சாக போகிறேன் என்று ராஜா மகன் மகள் ராஜா நண்பரிடம் நாங்கள் தூக்கு போட்டு சாக போகிறோம் என்று தகவல் சொல்லிணர்கள் ராஜா என்பவர் அவர் மனைவியை திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அனுப்பி விட்டு ராஜா மற்றும் அவரது மகன் மகள் மூன்று பேரும் சாக முடிவு எடுத்துள்ளனர். ராஜா என்பவர் அவரது மகளை முதலில் தூக்கில் தொங்கவிட்டு இரண்டாவதாக மகனை தோங்கவிட்டு கடைசியில்…
விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் பத்திரிகையாளர் நல சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை குறித்து மனு அளித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர். திரு.ஷே.ஷே அப்துல் ரஹமான்.இ..ஆ.ப. அவர்களிடம் விழுப்புரம் பத்திரிக்கையாளர் நலச் சங்கம் சார்பில் நல சங்க மாவட்ட தலைவர் சீதாராமன் தலைமையில் செயலாளர் சிவசந்திரன் பொருளாளர் பரணிதரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை நேரில் சந்தித்து பத்திரிக்கையாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அந்தோணிசாமி
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி முதல்வருக்கு “சிறந்த முதல்வர்” விருது !
கன்னியாகுமரி, ஆகஸ்ட் 18: அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியின் முதல்வர் டாக்டர் டி.சி. மகேஷ் அவர்களுக்கு, கல்விச் சேவையும் ஆளுமைத் திறமையும் பாராட்டி “சிறந்த முதல்வர்” விருது வழங்கப்பட்டது. இந்த விருது, கன்னியாகுமரியில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் வழங்கப்பட்டது. விழாவில் ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஏ. பிலிப்டன் விருதை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் ஆர். தர்மரஜினி, டாக்டர் ஜோசப் ரூபட் உள்ளிட்ட பலரும் பங்கேற்று வாழ்த்துத் தெரிவித்தனர். — பாவலர் ரியாஸ்குமரி மாவட்ட செய்தியாளர்
நாகர்கோவில் கோர்டில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆஜர் :
, ஆக.17 –கூட்டுறவு இணைப் பதிவாளராக பணியாற்றிய நடுக்காட்டு ராஜா, பணியை செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறி அமைச்சர் மனோ தங்கராஜ், எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ. பிரின்ஸ் உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நாகர்கோவில் ஜூன்-2 நீதிமன்றத்தில் நீதிபதி முன் நடைபெற்றது. விசாரணைக்காக அமைச்சர் மனோ தங்கராஜ், எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் உட்பட 11 பேர் நேரில் ஆஜராகினர். எனினும், எம்.எல்.ஏ. பிரின்ஸ் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவர்…
