தமிழ்நாடு
கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு.
ஆக் 22, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் கடற்கரை மீனவ கிராமத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் இன்று (ஆகஸ்ட் 22) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதி மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லாமல் தங்களின் குடும்பத்தினருடன் பேரணியாக வந்து கடற்கரை வளாகத்தில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. மீனவர்களின் நலனை…
பழனி வட்டம், அமரபூண்டி ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பெற்றுக்கொண்டார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், அமரபூண்டி ஊராட்சியில் இன்று(21.08.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் கலந்துகொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இம்முகாமில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்….
உங்களுடன் ஸ்டாலின் முகாம்.
மாநகர் மாவட்ட திமுக, சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி, நந்தா நகர் பகுதி,கோத்தாரி நகர் விநாயகர் கோவில் திருமணமண்டபத்தில் நடைபெற்ற, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், வார்டு எண் 58 க்கான, மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின், “எல்லோர்க்கும் எல்லாம்” 13+ அரசுத் துறைகள்,43+ சேவைகள், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்கள்,மருத்துவ முகாம்களுடன், “உங்களுடன் ஸ்டாலின் முகாமில்” மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ., அவர்கள் பங்கேற்று,பார்வையிட்டார். கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர்…
தவெக மாநாட்டிற்கு வந்த தொண்டர் உயிரிழப்பு.
சென்னையை சேர்ந்த பிரபாகரன் (வயது 33) மாநாட்டிருக்கு செல்வதற்கு முன்பாக மயக்கமடைந்து உயிரிழந்தார். நேற்று இரவு சென்னையில் இருந்து நண்பர்களுடன் வேனில் புறப்பட்ட பிரபாகரன் சற்று முன்னதாக மதுரை சக்கிமங்கலம் அருகே வேனை நிறுத்தி விட்டு சிறுநீர் கழிக்க சென்றார். சிறுநீர் கழிக்க சென்ற பிரபாகரனை காணவில்லை என நண்பர்கள் தேடிச்சென்ற பொழுது பிரபாகரன் மயக்க நிலையில் காணப்பட்டார். இதனை அடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் பிரபாகரன் அனுமதிக்கப்பட்ட போது அவர்…
நாகர்கோவிலில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம்.
ஆக் 21, கன்னியாகுமரி நாகர்கோவில் மாநகராட்சி சார்பில், பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காணும் நோக்கில் மாண்புமிகு தமிழக முதல்வர், கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி நடத்தப்பட்ட “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம், வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் எதிர்புறத்தில் உள்ள S.K.M. மஹாலில் நடைபெற்றது. இம்முகாமில் நாகர்கோவில் மாநகராட்சி 14 மற்றும் 15–வது வார்டு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது மனுக்களை சமர்ப்பித்தனர். குமரி கிழக்கு மாவட்ட செயலகரும், மாநகராட்சி…
கோவை வடவள்ளி பகுதி கல்வீரம்பாளையம். 37, 38 வது வார்டு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.
வடவள்ளி பகுதி கல்வீரம்பாளையம். 37, 38 வது வார்டு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 13 அரசு துறைகளின் சார்பில் 43 சேவைகள் வழங்கப்பட்டன. நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிறப்பு முகாமிற்கு வ. ம. சண்முகசுந்தரம் மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்துகொண்டு இந்த முகாமை சிறப்பாக துவக்கி வைத்ததோடு மக்களோடு சேர்ந்து கழக உடன்பிறப்புகள் அனைவரும் மக்களுக்கு சேவைகள் செய்து வருகின்றன. வடவள்ளி 37, 38 வது பகுதி மக்கள் மிகவும் ஆர்வத்துடன்…
கன்னியாகுமரி அருகே போலீஸாரின் மனைவி விஷம் குடித்து தற்கொலை; திருமணமாகி 2 ஆண்டுகள் புகுந்த நிலையில் பலத்த அதிர்ச்சி.
ஆக் 21, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே, காவல்துறையில் பணியாற்றும் ஒருவரது மனைவி, திருமணமான 2 ஆண்டுகளில், வீட்டில் உள்ள ஆதிக்கத்தும், விமர்சனத்தும் காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். மகளை தொடர்ச்சியாக கொடுமைப்படுத்தியதாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில், போலீஸ்காரர் கணவர் உட்பட 3 பேர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
நாகர்கோவில் மாநகர வர்த்தக காங்கிரஸ் தலைவராக அன்றனி அலெக்ஸ் பொறுப்பேற்றார்.
ஆகஸ்ட் 21, நாகர்கோவில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாகர்கோவில் மாநகர மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவராக தேர்வான அன்றனி அலெக்ஸுக்கு, மாநில வர்த்தக காங்கிரஸ் தலைவர் மற்றும் குமரி பாராளுமன்ற உறுப்பினரான விஜய்வசந்த் எம்.பி நியமனச் சான்றிதழை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநில வர்த்தக காங்கிரஸ் செயல் தலைவர் மற்றும் மாநில காங்கிரஸ் செயலாளர் எம்.ஜி. ராமசாமி, குமரி கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டாக்டர் சிவகுமார், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் அமைப்பாளர் மற்றும் ஏஐசிசி உறுப்பினர்…
வாணியம்பாடி அருகே வளையம்பட்டு ஊராட்சியில் மக்களுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம். ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி தொடங்கி வைத்தார்.
வாணியம்பாடி, ஆக.20- திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் வளையம்பட்டு ஊராட்சியில் மக்களுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வளையம்பட்டு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. முகாமுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூரவேல், மகராசி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் வசந்தி அருள், எம்.கங்காதரன், ஊராட்சி மன்ற தலைவர் திருப்தி கவுண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி, ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவர் சங்கீதாபாரி ஆகியோர் கலந்து கொண்டு முகாமை…
குளச்சல் விசைப்படகில் சிக்கிய புலி இறால் ரூ.8000க்கு ஏலம்.
ஆக் 21, கன்னியாகுமரி குளச்சல் கொட்டில்பாட்டை சேர்ந்த அகிலன் என்பவர் ஆக.19-ல் ஆழ்கடலில் மீன்பிடித்து குளச்சல் துறைமுகத்திற்கு திரும்பியிருந்தார். அவரது வலையில் கணவாய், நாக்கண்டம் மீன்களுடன் அரியவகை புலி இறால் ஒன்று சிக்கியது. 2.800 கிலோ எடை கொண்ட இந்த புலி இறாலுக்கு வெளிநாட்டில் அதிக மவுசு உள்ளதால் மீனை தனியாக உயிருடன் கடல் நீர் கலந்த பெட்டியில் போட்டு ஏலம் விட்டனர். இந்த மீனை வாங்க பலர் போட்டி போட்ட நிலையில் ரூ.8000க்கு ஏலம் போனது….
