Headlines
தென்னந்தோப்பில் முதியவர் சடலம் மீட்பு:எஸ்.டி.பி.ஐ மருத்துவக் சேவை குழு உதவியுடன் ஆசாரிப்பள்ளத்திற்கு மாற்றம்.

தென்னந்தோப்பில் முதியவர் சடலம் மீட்பு:எஸ்.டி.பி.ஐ மருத்துவக் சேவை குழு உதவியுடன் ஆசாரிப்பள்ளத்திற்கு மாற்றம்.

கன்னியாகுமரி, ஏப் 10, கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட புளியடி சுடுகாட்டுப் பகுதியிலுள்ள தென்னந்தோப்பு ஒன்றில், முதியவர் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் வெட்டூர்ணிமடம் அடுத்த கட்டையன்விளையைச் சேர்ந்த அந்தோணிமுத்து என்பவரின் மகன் தாசன் (76) என்பது உறுதி செய்யப்பட்டது. அவர் இறந்து சுமார் மூன்று நாட்கள் ஆகியிருக்கலாம் எனத் தெரிகிறது.சடலம் துர்நாற்றம் வீசும் அளவிற்கு மிகவும்…

Read More
விதிமீறல்: 6 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் திண்டுக்கல் ஏபிஆர்ஓ – சமூக ஆர்வலர்கள் கண்டனம்!

விதிமீறல்: 6 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் திண்டுக்கல் ஏபிஆர்ஓ – சமூக ஆர்வலர்கள் கண்டனம்!

திண்டுக்கல், ஏப்ரல் 9:திண்டுக்கல் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் (PRO office) உதவி மக்கள் தொடர்பு அலுவலராக (APRO) பணியாற்றி வரும் இளையேந்திரன் என்பவர், அரசு விதிகளுக்குப் புறம்பாக கடந்த 6 ஆண்டுகளாக ஒரே இடத்திலேயே பணியாற்றி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பணி இடமாற்ற விவகாரம்:பொதுவாக அரசு ஊழியர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பணி இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது அடிப்படை விதியாகும். அந்த வகையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இளையேந்திரன் திண்டுக்கல்லில்…

Read More
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்: கூட்டணிக் கட்சியினர் உற்சாக வரவேற்பு.

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்: கூட்டணிக் கட்சியினர் உற்சாக வரவேற்பு.

கோவை, ஏப். 08:கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இடையர்பாளையம் பகுதியில் நேற்று மாலை (06.03.2026) மதச்சார்பற்ற கூட்டணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இப்பகுதிச் செயலாளர் திரு. மதியழகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மதச்சார்பற்ற கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் திரு. சூரிய பிரகாஷ் அவர்கள் கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் முறைப்படி அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியில், கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள், வார்டு வாரியாகப் பொறுப்பு…

Read More
கன்னியாகுமரியில் தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கை

கன்னியாகுமரியில் தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கை

ஊர் கோவில் 14 சென்ட் நிலத்திற்கு முறைகேடாக பட்டா வழங்கியதாக குற்றச்சாட்டு; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட புதூர் பொதுமக்கள் நாகர்கோவில், ஏப். 8: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள புதூர் பகுதியில், ஊர் கோவிலுக்கு சொந்தமானதாக கூறப்படும் 14 சென்ட் நிலத்திற்கு, பொன்சந்திரன் மற்றும் அசோகன் ஆகிய இருவரின் பெயரில் பட்டா வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு காரணமாகக் கூறப்படும் கிராம நிர்வாக அதிகாரி ராகுல் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

Read More
நாகர்கோவில் நகைக்கடன் நிறுவனத்தில் மின்கசிவால் தீ விபத்து: கணினிகள், குளிரூட்டிகள் எரிந்து நாசம்

நாகர்கோவில் நகைக்கடன் நிறுவனத்தில் மின்கசிவால் தீ விபத்து: கணினிகள், குளிரூட்டிகள் எரிந்து நாசம்

நாகர்கோவில், ஏப். 8: நாகர்கோவில் அருகே ராஜாக்கமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தங்க நகைக் கடன் நிறுவனத்தில், இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த மின்னணு சாதனங்கள் முழுமையாக எரிந்து நாசமாகின.இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. நிறுவனத்தின் அருகே சென்ற உயர் மின்னழுத்த மின்கம்பி (High tension wire) எதிர்பாராதவிதமாக அறுந்து விழுந்துள்ளது.அந்த அறுந்த கம்பியானது, நிறுவனக் கட்டிடத்திற்குள் செல்லும் மின்கம்பியின் மீது உரசியதில் கடுமையான மின்கசிவு ஏற்பட்டு…

Read More
திருப்பூர் தெற்கில் அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்.

திருப்பூர் தெற்கில் அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்.

ஏப்ரல் 06, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி கணியூர் பேரூர் கழக அதிமுக முன்னாள் செயலாளர் காஜாமைதீன் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மடத்துக்குளம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட கழக பொருளாளர் கே.எம்.முபாரக் அலி, ஒன்றிய கழக செயலாளர் சாகுல் அமீது, செயற்குழு உறுப்பினர் மகாலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, கணியூர்…

Read More
நாகர்கோவில் திமுகவில் ஒரே கட்சி, இரு வேட்பாளர்கள் : பின்னணி என்ன?

நாகர்கோவில் திமுகவில் ஒரே கட்சி, இரு வேட்பாளர்கள் : பின்னணி என்ன?

நாகர்கோவில் தொகுதியில் ஆளும் திமுக கட்சி சார்பில் ஒரே நேரத்தில் இரண்டு பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ வேட்பாளராக எஸ். ஆஸ்டின் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் தரப்பில் மட்டும் மூன்று வேட்புமனுக்களும், அதே கட்சியின் எம். சிவராஜ் தரப்பில் ஒரு வேட்புமனுவும் தாக்கல் செய்யப்பட்டிருப்பது தொகுதி மக்களிடையேயும் அரசியல் களத்திலும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே தொகுதியில் ஒரு கட்சிக்கு ஏன் இத்தனை மனுக்கள் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழலாம். இது எந்தவித உள்கட்சிப்…

Read More
மடத்துக்குளம் தொகுதி: திமுக வேட்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் உற்சாகத்துடன் வேட்புமனு தாக்கல்!

மடத்துக்குளம் தொகுதி: திமுக வேட்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் உற்சாகத்துடன் வேட்புமனு தாக்கல்!

மடத்துக்குளம், ஏப்ரல் 4: மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுத்தாக்கல் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு இன்று காலை தனது ஆதரவாளர்களுடன் வந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை முறையாக வழங்கினார். முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு ;வேட்புமனு தாக்கலின் போது, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி உடனிருந்தார். மேலும்,…

Read More
தோல்வி பயத்தில் திணறும் விளவங்கோடு காங்கிரஸ்! கேரளா வேட்பாளர் அறிவிப்புக்கு எதிராகவே காங்கிரஸ் தொண்டர்கள் சாலை இறங்கினர்

தோல்வி பயத்தில் திணறும் விளவங்கோடு காங்கிரஸ்! கேரளா வேட்பாளர் அறிவிப்புக்கு எதிராகவே காங்கிரஸ் தொண்டர்கள் சாலை இறங்கினர்.

விளவங்கோடு, ஏப். 4: கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட, கேரளாவைச் சேர்ந்த டி.டி. பிரவீன் என்பவரை வேட்பாளராக அறிவித்ததை எதிர்த்து, அந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறக் கோரி இன்று விளவங்கோட்டில் காங்கிரஸ் கட்சி தொண்டர்களே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “விளவங்கோட்டில் காங்கிரஸுக்கு உள்ளூர் முகங்கள் இல்லையா?”, “கட்சிக்காக பல ஆண்டுகள் உழைத்த தொண்டர்களின் தியாகத்திற்கு இதுவே பரிசா?” என்ற கேள்விகளை எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள்,…

Read More
ஸ்டாலின் பிரச்சாரம்: ஸ்காட் வளாகம் மக்கள் வெள்ளம்..

ஸ்டாலின் பிரச்சாரம்: ஸ்காட் வளாகம் மக்கள் வெள்ளம்..

நாகர்கோவில், ஏப் 04: நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, அவர்களுக்கு ஆதரவாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சுரேஷ் ராஜன், மனோ தங்கராஜ் மற்றும் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமோகமான திரள் மக்கள் பங்கேற்றதால், ஸ்காட் வளாகம் முழுவதும் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது.உற்சாக கோஷங்களும், ஆதரவு முழக்கங்களும்…

Read More