தமிழ்நாடு
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் ‘குமரி காவலன்’ – காவல்துறையின் அதிரடி முன்னெடுப்பு!
கன்னியாகுமரி, டிசம்பர் 6: கன்னியாகுமரி மாவட்டக் காவல்துறை சார்பில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் ‘குமரி காவலன்’ (Kumari Kavalan) எனப்படும் அதிநவீன SOS கியோஸ்க் (SOS Kiosk) கருவிகளை நிறுவும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின், ஐ.பி.எஸ். (Dr. Stalin IPS) அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக, கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் பகுதியில் இந்த நவீன இயந்திரம் நிறுவப்பட…
ஔவையார் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்கும் மகளிருக்கு சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8- ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரால் ஔவையார் விருது வழங்கப்பட்டு வருகிறது, இவ்விருதுக்கு ரூ.1.50 இலட்சத்திற்கான காசோலை, பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. 2026-ஆம் ஆண்டிற்கான இவ்விருதுக்கு தகுதியுடையவர் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயது மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்….
நடப்பு பிசானம் பருவ சாகுபடிக்காக, திருநெல்வேலி கோட்டைக்கருங்குளம், நம்பி ஆறு அணையில் இருந்து, தண்ணீர் திறந்து வைத்த சபாநாயகர்! 40 பாசன குளங்கள் மூலம், 1744 ஏக்கர் நிலங்கள், பாசனவசதி பெறும்!
திருநெல்வேலி,டிச.5:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், திசையன் விளை தாலுகா, கோட்டைக்கருங்குளம் பகுதியில் அமைந்துள்ள, “நம்பி ஆறு” அணையில் இருந்து, நடப்பு “பிசானம்” (PISANAM) பருவ சாகுபடிக்காக, தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் ( சபாநாயகர்) மு. அப்பாவு, இன்று ( டிசம்பர்.5) காலையில், சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், தண்ணீர் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், “அடுத்த ஆண்டு (2026) மார்ச் மாதம் 31- ஆம் தேதி முடிய மொத்தம் 117 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு வினாடிக்கு…
குமரி துவாரகாபதி கடற்கரையில் உலக மண் தின விழா.
குமரி துவாரகாபதி கடற்கரையில் உலக மண் தினம் விழா மாணவர்கள் இணைந்து தூய்மை பணி – மரக்கன்று நடுதல் கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலய மாவட்ட வன அலுவலரும் வன உயிரின காப்பாளருமான முனைவர் அன்பு இ.வ.ப. அவர்கள் உத்தரவின்பேரில், பூதப்பாண்டி வனச்சரக அலுவலர்ந.அன்பழகன் தலைமையில் 05.12.2025 அன்று உலக மண் தினம் 2025 நிகழ்ச்சி துவாரகாபதி கடற்கரையில் நடத்தப்பட்டது. வன உயிரின ஆய்வாளர் பேராசிரியர் செ. சுதாமதி அவர்களின் ஒருங்கிணைப்பில், ஒற்றையால் விளை அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சூழல்…
அம்பேத்கர் வழியில் நாம் : நாகர்கோவில் விடுதலை சிறுத்தைகள் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.
நாகர்கோவில், திச. 04 நமது சமூக நீதிப் பயணத்தை வலுப்படுத்தும் “அம்பேத்கர் வழியில் நாம்” என்ற கருத்தரங்கம் இன்று மாலை நாகர்கோவில் மாநகர மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளர் அல் காலித் தலைமையும், மைய மாவட்ட செயலாளர் மேசியா முன்னிலையும் வகித்தனர். கருத்தரங்கத்தில் தென் மண்டல துணை செயலாளர் பகலவன், மேலடு பொறுப்பாளர் தமிழினேன், கன்னியாகுமரி தொகுதி செயலாளர் சிறுத்தை தாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு…
திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து; உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு.
மனுதாரர் (இந்து மக்கள் கட்சித் தலைவர்) திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும்; காவல் ஆணையர் முழு பாதுகாப்பை வழங்க வேண்டும் உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை நாளை காலை 10:30 மணிக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் -தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
மதுரையில் நெல் பேட்டை பகுதியில் உள்ள தயிர் மார்கெட்டில் கம்யூனிஸ்ட் கட்சி சங்க பொருளாளர் வசூல் ராணி ஜெய பாரதி பிடியில் மாநகராட்சி துணை ஆணையர் ஜெயினுலாபுதின் மற்றும் பணச் செல்வம்!?
மதுரை தயிர் மார்கெட்டில் ஒதுக்கு புறத்தில் வாழ்வாதாரத்துக்கா காய்கறி கடைகள் நடந்தி வரும் அப்பாவி வியாபாரிகள் பல போராட்டங்கள் நடத்திய பிறகு மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் நேரில் சென்று அவர்களுக்கு ஒதுக்கு புறத்தில் கடைகளை போட அனுமதி அளித்து வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காப்பற்றினார். தற்போது இவர் எப்படி இங்க கடை நடத்த முடியும் இவர்களை இங்கு கடை போட விடமாட்டேன் என்று சபதம் எடுத்து இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி சங்க பொருளாளர் வசூல் ராணி…
கோவை மாவட்டம் பிரபலமான பள்ளியில் காதலுக்காக மாணவர்கள் அடிதடி.
கோவை மாவட்டம் (04.12.25) கணுவாய் அருகில் உள்ள பிரபலமான பள்ளியில் நேற்று(03.12.25) பள்ளி நேரத்தில் பள்ளிக்குள், இரண்டு மாணவர்கள் காதலுக்காக சண்டையிட்டுக் கொண்டதாக தகவல். இதில ஒரு மாணவனின் மூக்குடைப்பு. மற்றொரு மாணவனை பள்ளி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது, இதுபோன்று கைகலப்பு ஏற்பட்ட பின், சம்பவத்தை கவனிக்காமல், தூங்கிக் கொண்டிருக்கும் பள்ளி நிர்வாகம், மற்றும், பெற்றோர் ஆசிரியர் சங்கம் இணைந்து மாணவர்களுக்கு முறையான கவுன்சிலிங் கொடுத்து மேற்கொண்டு இது போல் எந்த ஒரு கைகலப்பும்,ஏற்படாமல் பள்ளி மாணவர்களின்…
நீலகிரி கூட்டுறவு இயக்கத்தின் தந்தை ராவ் பகதூர் எச்.பி. ஆரிகவுடர் – 132வது பிறந்தநாள் விழா.
நீலகிரி : டிசம்பர், 04. நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க வளாகம் உதகமண்டலத்தில் நீலகிரி மாவட்ட கூட்டுறவு இயக்கத்தின் தந்தை திரு. H. B. ராவ்பகதூர் ஆரிகவுடர் அவர்களின் 132 வது பிறந்தநாள் விழா கூட்டுறவுத்துறையின் சார்பாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆரிகவுடர் சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்க மேலாண்மை இயக்குநர் திரு. முத்துக்குமார், துணைப்பதிவாளர்கள் திரு.அஜித்குமார், திரு….
நாகர்கோவிலில் அரசு ஊழியர்கள் அதிரடி சாலை மறியல் : 63 பேர் கைது – வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி முழக்கம்!
நாகர்கோவில், டிசம்பர் 04, 2025: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் இன்று (வியாழக்கிழமை) மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 63 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். போராட்டத்தின் பின்னணி:திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டி, மாநிலம் தழுவிய அளவில் அரசு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு…
