தமிழ்நாடு
திருநெல்வேலி பாளையங் கோட்டையில் உள்ள, மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவல் துறையினருக்காக நடைபெற்ற, கட்டணமில்லா மருத்துவ பரிசோதனை முகாம்!
திருநெல்வேலி,டிச.13:-திருநெல்வேலி பாளையங் கோட்டையில் உள்ள, மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மற்றும் திருநெல்வேலி தனியார் மருத்துவமனை இணைந்து நடத்திய, கட்டணமில்லா மருத்துவ பரிசோதனை முகாம், இன்று (டிசம்பர். 13) நடைபெற்றது. காவலர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்குமாக, காலை 9 மணி முதல், பிற்பகல் 2 மணிவரையிலும், நடைபெற்ற, இந்த இலவச முகாம், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் உத்தரவின்படி, நடைபெற்றது. இந்த முகாமில், உடல் பரிசோதனை, இரத்த சர்க்கரை அளவு (RBS), இரத்த அழுத்த…
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் SQI பெந்தகோஸ்தே பேராயத்தின்கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
மதுரை மாவட்டத்தில் SQI பெந்தகோஸ்தே பேராயத்தின் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது இவ்விழாவில் SQI பேராயத்தின் தமிழ்நாடு பேராயர் எம் .மாசிலாமணி தலைமையில், SQIநேஷனல் ஒருங்கிணைப்பாளர் பேராயர்.எம் ஜான் ஜெயராமன்,மதுரை மாவட்டபேராயர் கே.சி. டேனியல் இருவரது முன்னிலை தாங்கி நடத்தினார்கள். கிறிஸ்துமஸ் சிறப்பு செய்தியை SQI யின் ஆசிய பேராயர். B.ரமேஷ்பாலன் அவர்கள் கொடுத்தார்கள் இந்த விழாவில் அனைத்து தலைமை பேராயர்கள் , மண்டல பேராயர்கள் ,மாவட்ட பேராயர்கள், ரெவரன்ட்,…
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.
மதுரை, எஸ்.எஸ் காலனியில் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அல்-நூர் பார்வையற்றோர் மதரசா மற்றும் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வு மையத்தின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் நிறுவனர் முஸ்தபா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தொடர்ந்து சேவைகள் செய்து வரும் ஆசிரியரும் சமூக ஆர்வலருமான நூருல்லாஹ் கலந்து கொண்டு 200 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் உணவும் வழங்கினார். அறக்கட்டளை பயனாளர் நன்றி கூறினார். மேலும் நிகழ்வில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்….
பொது அமைதியை நிலைநாட்டுவதே அரசின் முக்கியப் பணி.
தீபம் எங்கே ஏற்ற வேண்டும் என்பதை கோவில் நிர்வாகம்தான் முடிவு செய்ய முடியும்அரசுத் தரப்பு வாதம் தர்கா அருகில் உள்ளது தீபத்தூண் என்பதற்கான எந்த ஆவணங்களையும் மனுதாரர்கள் தாக்கல் செய்யவில்லை எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யாத நிலையில், எப்படி தீபத்தூண் என முடிவு செய்யப்பட்டது?* தனி நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவுகளில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி அரசுத் தரப்பு வாதங்களை முன்வைக்கிறது இந்த வழக்கு முழுவதும் ஒரு புதிய பழக்கத்தை கொண்டு வருவதற்காக தொடரப்பட்டது கோயில் சொத்துகள் தொடர்பாக…
திண்டுக்கல் 250 மாணவர்கள் ஒரே நேரத்தில் பாலின சமத்துவம் குறித்த ஓவியத்தினை வரைந்து நத்தம் ரோடு தனியார் கல்லூரியில் உலக சாதனை
கல்லூரி மாணவ மாணவியர் 250க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு 15 நிமிடத்தில் கலர் அட்டையில் பென்சில்கள் கொண்டு பாலின சமத்துவம் குறித்த லோகோவை ஓவியமாக வரைந்து உலக சாதனை படைத்தனர். தமிழகத்தில் இதுவரை பாலின சமத்துவம் குறித்த உலக சாதனை நிகழ்ச்சி 15 நிமிடத்தில் இதுவரை யாரும் செய்திடாத நிலையில் 250 மாணவர்கள் ஒரே இடத்தில் கூடி பாலின சமத்துவம் குறித்த லோகோ வரைந்து சாதனை படைத்தது இதுவே முதன்முறை குறிப்பிட்டு வேர்ல்ட் ஒன்டேர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்…
கன்னியாகுமரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் — முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் தீவிரம்!
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் திருமதி ஆர். அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) முதல்நிலை பரிசோதனை பணிகளை இன்று (11.12.2025) நேரில் ஆய்வு செய்தார். நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தொகுதியில் அமைந்துள்ள EVM கிட்டங்கியிலேயே இந்த பரிசோதனைகள் நடைபெற்றன. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, மாவட்டத்தில் மொத்தம் 5594 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4040 கட்டுப்பாட்டு கருவிகள், 2802 VVPAT கருவிகள்…
தமிழ் நாடு அமைச்சு பணி விதிகளின் விதி 38(b)(iii) படி ஒரு கிராம நிருவாக அலுவலர், அவர் பணியாற்றும் கிராமத்திலேயே வசிக்க வேண்டும்…
கிராம நிர்வாக அலுவலர், அவர் பணி புரியும் கிராமத்தில் தங்கி இருக்க வேண்டும் ! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு !! “எந்த கிராமத்திற்கு ஒருவர் கிராம நிருவாக அலுவலராக நியமனம் செய்யப்படுகிறாரோ அந்தக் கிராமத்திலேயே அவர் வசிக்க வேண்டும். அங்கு அவர் அப்பதவியை வகிக்கும் காலம் வரை அப்படியே தொடர்ந்து வசிக்க வேண்டும். இது குறித்து அரசு பிறப்பித்துள்ள குறிப்புரை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். கிராம நிருவாக அலுவலர்கள் தங்கள் பதவி இடத்திலேயே வசிக்கிறார்களா என்பதை அவர்களது…
சுகாதாரச் சீர்கேடு: உயிருக்கு உலை வைக்கும் உணவகம்? நாகர்கோவிலில் பரபரப்பு!
நாகர்கோவில், டிசம்பர் 11: குமரி மாவட்டம், வெட்டூர்ணிமடம் – கிறிஸ்து நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ‘ஹோட்டல் அஸ்பி’ (Hotel Asbie) உணவகம், பொதுமக்களின் உயிருடன் விளையாடும் வகையில் செயல்பட்டு வருவது அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு பொதுமக்களின் உடல்நலனைப் பாதிக்கும் வகையில் தரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதாகவும்; குடிநீர் கேன்கள், உணவு பரிமாறும் பாத்திரங்கள் மற்றும் கைகழுவும் இடங்கள் ஆகியவை மிகவும் சுகாதாரமற்ற நிலையில் பராமரிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் உணவருந்த வரும்…
கோவையில் நடைபெறவுள்ள BSNL, DOT ஓய்வூதியர் சங்கத்தின் 5-வது அகில இந்திய மாநாடு – நாகர்கோவிலில் விளக்க வாயிற்கூட்டம்!
நாகர்கோவில், டிசம்பர் 11: அகில இந்திய BSNL மற்றும் DOT ஓய்வூதியர் சங்கத்தின் (AIBDPA) 5-வது அகில இந்திய மாநாடு, கோயம்புத்தூர் மாதம்பட்டியில் உள்ள லோட்டஸ் மஹாலில் வரும் 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் முதல் நாளான டிசம்பர் 17 அன்று காலை 8.00 மணிக்குக் கொடி மற்றும் ஜோதி பயணங்களுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. காலை 9.00 மணிக்குக் கொடியேற்றத்தைத் தொடர்ந்து, 9.15 மணியளவில் தேசிய ஓய்வூதியர்…
அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக்கல்லூரியில் இலவச கட்டணமில்லா கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
அருள்மிகு தண்டாயுதபானி சுவாமி திருக்கோயிலின் கட்டுப்பாட்டில் செயல்படும் அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக்கல்லூரியில் தமிழக அரசின் சட்டமன்ற அறிவிப்பின் படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மான்புமிகு திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் துவங்கி வைத்த திட்டத்தின் கீழ் பாலிடெக்னிக்கல்லுாரியின் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் இலவச கட்டணமில்லா கண்சிகிச்சை முகாம் வாசன் ஐ கேர் நிறுவனத்தால் 09.12.2025 அன்று கல்லுாரியில் நடைபெற்றது. இம்முகாமில் திருக்கோயில் இணை ஆணையர் மற்றும் துணை ஆணையர் அனுமதியின் பேரில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) திரு.அ.ரமேஷ், அவர்கள்…
