Headlines
பண்பொழி திருமலை குமாரசாமி திருக்கோயில் ஏழாம் திருநாள் சண்முகர் எதிர் சேவை சிறப்பாக கொண்டாடப்பட்டது

பண்பொழி திருமலை குமாரசாமி திருக்கோயில் ஏழாம் திருநாள் சண்முகர் எதிர் சேவை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தென்காசி ஜனவரி 29 தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலை கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகனின் திருத்தலமாகும் இந்த கோயிலானது மலையின் மீது அமைந்துள்ளது இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூசத் திருநாள் 10 தினங்களாக கொண்டாடப்படுவது மிகச் சிறப்பு வாய்ந்ததாகும் இந்நிலையில் பண்பொழி திருமலை குமாரசாமி திருக்கோயில் கோயில் தைப்பூசத் திருவிழா 23 1 2026 முதல் 1 2 2026 வரை பத்து தினங்களாக திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் இன்று ஏழாவது நாளாக முருகர்…

Read More
அமராவதி நகர் சைனிக் பள்ளியில் பாஸ்சிங் அவுட் அணிவகுப்பு... விமானப் படை துணை மார்ஷல் ஹர்ஜீத் சிங் சிதானா(VSM) பங்கேற்பு

அமராவதி நகர் சைனிக் பள்ளியில் பாஸ்சிங் அவுட் அணிவகுப்பு… விமானப் படை துணை மார்ஷல் ஹர்ஜீத் சிங் சிதானா (VSM) பங்கேற்பு.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த அமராவதிநகர் சைனிக் பள்ளியில் 12ஆம் வகுப்பு கேடட்களின் (64வது பிரீமியர்ஸ்) பாஸ்சிங் அவுட் அணிவகுப்பு நிகழ்ச்சி 28.01.2026 அன்று பள்ளி அணிவகுப்பு மைதானத்தில் (மேஜர் ஸ்ரீ ராம் அணிவகுப்பு சதுக்கம்) சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மொத்தம் 159 கேடட்ககள் பங்கேற்றனர். இதில் 12 ஆம் வகுப்பைச் சேர்ந்த 93 கேடட்கள் பாஸ்சிங் அவுட் அணிவகுப்பில் பங்கேற்று, பள்ளியில் தாங்கள் பெற்ற 7…

Read More
பதினெட்டாம் படி கருப்பசாமி கோயிலில் விலக்குகள் பலியிடும் விவகாரம்

பதினெட்டாம் படி கருப்பசாமி கோயிலில் விலக்குகள் பலியிடும் விவகாரம்.

மதுரை அழகர் கோயிலின் கீழ் உள்ள பதினெட்டாம்படி கருப்பசாமி கோயிலில் விலங்கு பலியிடுவது வழிபாட்டின் ஒரு பகுதியாக நீண்ட காலமாக இருப்பதாலும், பக்தர்களின் நம்பிக்கையை தொடும் ஒரு அம்சம் என்பதாலும் நீதிமன்றம் அதில் தலையிட விரும்பவில்லை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவில் தெரிவிப்பு. மதுரை மாவட்டம் செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
செங்கோட்டை அருகே மகள் வழிப்பேரனுக்கு மட்டும் பணம் கொடுப்பதாக கூறி 65 வயது பாட்டியை அடித்துக் கொலை செய்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை தென்காசி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

செங்கோட்டை அருகே மகள் வழிப்பேரனுக்கு மட்டும் பணம் கொடுப்பதாக கூறி 65 வயது பாட்டியை அடித்துக் கொலை செய்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை தென்காசி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

தென்காசி, ஜன – 27 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் கிராமத்தை சேர்ந்த முகம்மது யூசுப் என்பவரது மனைவி மும்தாஜ் (வயது 65) இவர் தனது மகள் வழி பேரனுக்கு மட்டும் அடிக்கடி பணம் கொடுப்பதாக கூறி அவரது உறவினர்கள் ஐந்து பேர் சேர்ந்து கைகளால் அடித்தும் கால்களால் வயிற்றில் எட்டி உதைத்தும், மேலும் கம்பி மற்றும் குக்கரால் அடித்து கொடுங்காயம் ஏற்படுத்திக் கொலை செய்துள்ளனர். இது பற்றி விஸ்வநாதபுரம் புதுமனை தெரு, பிச்சை…

Read More
காங்கிரஸ் கட்சிக்கு பூத் கமிட்டி போடக்கூட ஆளில்லை: மதுரை திமுக எம்எல்ஏ தளபதி விமர்சனம்

காங்கிரஸ் கட்சிக்கு பூத் கமிட்டி போடக்கூட ஆளில்லை: மதுரை திமுக எம்எல்ஏ தளபதி விமர்சனம்.

மதுரையில் நடந்த நிகழ்ச்சியில், திமுக வடக்கு எம்எல்ஏ கோ.தளபதி பேசியதாவது: “காங்கிரஸ் நண்பர்கள் ஒரு சில பேர் இருக்கிறார்கள். மாணிக்கம் தாகூர், ஜோதிமணி இருக்கிறார்கள். அவர்கள் எம்பி ஆகிவிட்டார்கள். இனி வருபவர்கள் எம்எல்ஏ ஆனா என்ன? ஆகவில்லை என்றால் எனச் சொல்லி, அதில் பங்கு வேண்டும்? இதில் பங்கு வேண்டும் என்று சொல்கிறார்கள். இதையெல்லாம் தலைமை புரிந்து, அடுத்து இவர்களுக்கு சீட் கொடுக்கக் கூடாது. நம்ம கொடுக்க விடக்கூடாது. எதற்காக இதை சொல்கிறேன் என்றால், நம்ம உணர்வோடு,…

Read More
மதுரை அரசரடி பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து தினசரி ஆயிரம் லிட்டருக்கு மேல் வீணாகும் குடிநீர்

மதுரை அரசரடி பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து தினசரி ஆயிரம் லிட்டருக்கு மேல் வீணாகும் குடிநீர்.

மதுரை அரசரடி பகுதியில் தேவகி ஸ்கேன் எதிர்புறத்தில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மதுரை டு தேனி மெயின் ரோட்டில் உள்ள குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தினசரி ஆயிரக்கணக்கான லிட்டர் குடிதண்ணீர் வீணாகி வெளியேறி வருகிறது . குடிநீர் வீணாகி வெளியேறி வருவதால் ரோடு முற்றிலும் சேதம் அடைந்து காணப்பட்டு வருகிறது ரோடு சேதம் அடைந்தது காணப்படுவதால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் குண்டு, குளியுமாக உள்ள ரோட்டில் விபத்தில் சிக்கி காயங்கள் ஏற்படுகிறது . மதுரை…

Read More
நாகர்கோவில்: அரசு பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி ஓட்டுநர்கள்–நடத்துனர்கள் திடீர் போராட்டம் பயணிகள் கடும் அவதி – நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல்..

நாகர்கோவில்: அரசு பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி ஓட்டுநர்கள்–நடத்துனர்கள் திடீர் போராட்டம்பயணிகள் கடும் அவதி – நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல்..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், அரசு பேருந்து விபத்து தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்ய உள்ளதாக வந்த தகவலை கண்டித்து, அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவு நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், அந்த அரசு பேருந்தின் ஓட்டுநருக்கு தவறு இல்லை என கூறப்பட்ட போதிலும், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படலாம் என்ற தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நகரின் முக்கிய…

Read More
77வது குடியரசு தினம் – மனிதநேய ஜனநாயக கட்சி விழா.. இளங்கடையில் தேசியக்கொடி ஏற்றம்...

77வது குடியரசு தினம் – மனிதநேய ஜனநாயக கட்சி விழா..இளங்கடையில் தேசியக்கொடி ஏற்றம்…

கன்னியாகுமரி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் 77வது குடியரசு தின விழா இன்று இளங்கடை பகுதியில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளர் முஜீப் ரகுமான் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் சாதிக் அலி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில செயலாளர் பிஜுருல் ஹபீஸ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். இஸ்லாமிய கலாச்சார பேரவை மாநில துணைச் செயலாளர் மிஸ்பா ஆலிம் குடியரசு தின உரையாற்றினார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அமீர்கான் குடியரசு தின…

Read More
அருள்மிகு ஸ்ரீ தண்டுமாரியம்மன்திருக்கோவிலில் நடைபெற்ற யாகசாலை பூஜை

அருள்மிகு ஸ்ரீ தண்டுமாரியம்மன்திருக்கோவிலில் நடைபெற்ற யாகசாலை பூஜை.

கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி பீளமேடு பகுதிக்கு உட்பட்ட வார்டு எண் 26 -ல் பயனீர் மில் சாலையில் அமைந்துள்ள அன்னை அருள்மிகு ஸ்ரீ தண்டு மாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற யாக சாலை பூஜையில், கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை. செந்தமிழ் செல்வன் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் பீளமேடு பகுதி பொறுப்பாளர் A.S.நடராஜ், வட்ட கழக பொறுப்பாளர் மாடசாமி, தகடூர் செல்வம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் க.மணிகண்டன்,மாவட்ட பிரதிநிதி பூ.வெ.துரைசாமி,…

Read More
நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி : புதிய திருப்பம்

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி : புதிய திருப்பம்.

மதுரையை தலைமையிடமாக கொண்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் தமிழகம் முழுவதிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். அந்த நிறுவனம் பணத்தை திரும்ப வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதால் முதலீடு செய்தவர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் நியோமேக்ஸ் நிர்வாகிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதுடன் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்கள் கார்கள், தங்கம், ஆவணங்கள், பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது…

Read More