இதழ்கள்
15 நபர்கள் சேர்ந்து கொடுரமாக அருவால் மற்றும் மரக்கட்டைகலாள் தாக்குதல் !
திருவாரூர் மாவட்டம் : குடவாசல் பருத்திச் சேரி தெற்குத் தெருவை 1.முருகானந்தன் மகன் புகணேசன். 2.முருகேசன் மகன் நந்தகுமார் .3.முருகையன் மகன் ரன்ஜித் கூலி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது மாலை 7.30 மணி அளவில் 15 நபர்கள் சேர்ந்து கொடுரமாக அருவால் மற்றும் மரக்கட்டை கலாள் தாக்கப்பட்டு குடவாசல் G.H யில் அனுமதிக்க பட்டு உள்ளார்கள் குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்து விசாரனை நடைபெறுகின்றது.
உறுப்பினர் கல்வித் திட்டம் !
நீலகிரி மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பாக ஆலட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல் எல்லையில் அமைந்துள்ள ஆலட்டி கிராமத்தில் உறுப்பினர் கல்வி திட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நீலகிரி மண்டல இணைப்பதிவாளர் திரு. இரா. தயாளன் அவர்கள் தலைமை தாங்கினார். தனது தலைமையுரையில் கூட்டுறவு இயக்க வரலாறு குறித்தும், கூட்டுறவு இயக்கத்தின் பொன்னான ஏழு கொள்கைகள் குறித்தும், கூட்டுறவு இயக்கத்தின் அடையாளமாக உள்ள ஏழு வண்ண வானவில் கொடி குறித்தும், கூட்டுறவு இலச்சினையான இணைந்த…
கோவை மாநகராட்சி சுகாதாரக் குழு கூட்டம் !
பொது சுகாதார குழு தலைவர்.பெ.மாரிசெல்வன் தலைமையில், 28-08-2025 மதியம் 12 மணிக்கு மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள சுகாதார குழு தலைவர் அலுவலகத்தில் மாதாந்திர சாதாரண கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், மாநகர் நல உதவி அலுவலர் மரு.பூபதி, கால்நடை மருத்துவர் சரவணன், மத்திய மண்டலம் சுகாதார அலுவலர் குணசேகரன், மாமன்ற உறுப்பினர்கள் சம்பத், அஸ்ஸலாம் பாஷா, வசந்தா மணி, கமலாவதிபோஸ், சுமித்ரா, அம்சவேணி, மற்றும் அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர். கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்
முன்னாள் எம்.பி. ஹச்.வசந்தகுமார் 5 – ஆம் ஆண்டு நினைவு தினம் !
ஆக் 28, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள மணிமண்டப சமாதியில், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வசந்த் & கோ நிறுவனருமான ஹச்.வசந்தகுமார் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், அவரது மகனும் கன்னியாகுமரி தொகுதி எம்.பியுமான விஜய்வசந்த், தாயாருடன் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். குமரி தாலுக்கா செய்தியாளர் : செலிஸ்
குளச்சலில் தண்ணீர் வாளியில் விழுந்த 1½ வயது குழந்தை பலி !
ஆக் 28, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் லியோன் நகரைச் சேர்ந்த ஆரோக்கிய ஜெனோ என்பவரின் ஒன்றரை வயது மகள் ரியானா, வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென தண்ணீர் வாளியில் தலைகீழாக விழுந்தார். இதனால் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்தார். தாயார் டயானா உடனே குழந்தையை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் மருத்துவர்கள் பரிசோதித்து குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த குளச்சல் போலீசார் சம்பவ இடத்திற்கு…
டெம்போ மீது பைக் மோதிய விபத்தில் மெக்கானிக் உயிரிழப்பு !
ஆக் 28, கன்னியாகுமரி : குமரி மாவட்டம், நித்திரவிளை அருகே கிராத்தூர் பகுதியை சேர்ந்த சுனில் ராஜ்குமார் (45) என்பவர் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். கடந்த 18ஆம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த டெம்போ மோதியதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்தார். காயமடைந்த அவர் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நேற்று (புதன்கிழமை) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், நித்திரவிளை போலீசார் வழக்கு…
மீலாது நபியை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் முகாம் திறப்பு !
அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) நமது உயிரிலும் மேலான கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த மீலாதுநபியை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் முகாம் தொடங்கிவைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் எங்களை உங்கள் சகோதரனாக கருதி அரசாங்கம் நடத்தும் இம்முகாமில் வந்து கலந்துகொண்டு நற்பயன்பெறுங்கள். இங்ஙனம், அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி முஸ்லிம் பரிபாலன ஜமாஅத்சபை.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி எஸ்கே பாளையத்தில் கரும்பு தோட்டத்தில் தீ வைப்பு : கதறி அழுத விவசாயி !
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எஸ்கே பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி சக்திவேல். இவர் 4 ஏக்கர் கரும்பு பயிரிட்டு பராமரித்து வந்தார். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த அவரது உறவினர் முன்விரோத காரணமாக கரும்பு தொட்டத்திற்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அங்கு வந்த சக்திவேல் கரும்பு தோட்டம் முழுவதும் எரிந்ததை பார்த்து கதறி அழுதார். இதனால் அப்பகுதியில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. பண்ருட்டி செய்தியாளர்Vignesh
கோவையில் காலை சிற்றுண்டி திட்டம் துவக்கம்.
அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளுக்கும் இன்று தமிழக முதல்வரால் yதுவக்கி வைக்கப்பட்ட காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் தன் பொற்கரங்களால் துவக்கிவைத்தபின் கோவையில் இன்று காலை 8:30 மணிக்கு சிங்காநல்லூர் காந்தி நூற்றாண்டு மாநகராட்சி பள்ளியில் மரியாதைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி.ராஜ்குமார் மற்றும், மாவட்ட ஆட்சியாளர் திரு.பவன்குமார் IAS மாநகராட்சி ஆணையாளர் திரு.சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி மேயர் திருமிகு ரங்கநாயகி, மற்றும் கிழக்கு மண்டலத்தலைவர் திருமிகு லட்சுமி இளஞ்செல்வி,மற்றும் அந்த வார்டின் மாமன்ற உறுப்பினர் திருமிகு பாக்கியம்…
கண்காட்சி பொருளாக காட்சி அளிக்கும் பொது கழிப்பறை !
மதுரையில் நெல் பேட்டை தயிர் மார்கெட்டில் கண்காட்சி பொருளாக காட்சி அளிக்கும் பொது கழிப்பறை மார்க்கெட்டில் 150 க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது இதில் பெண்கள் அதிக அளவில் கடைகள் நடத்தி வருகிறார்கள். வேலை செய்யும் பெண்கள் இயற்கை உபாதைகள் கழிக்க 3 கிலோ மீட்டர் நடந்து சென்று வருகிறார்கள். இதனால், மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள் மேலும் திறக்க படாமல் இருக்கும் பொது கழிப்பறை அருகே திறந்தவெளியில் இயற்கை உபாதைகள் கழிப்பதால் நோய் பரவும்…
