Headlines
மாவேலி வேஷம் – ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு ஊர்வலம்

மாவேலி வேஷம் – ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு ஊர்வலம்.

செப் 5 கன்னியாகுமரி கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலை, இராமன்பறம்பு பகுதியில் மின்மினி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 24-வது ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இவ்விழாவின் ஒரு பகுதியாக, கேரளா பாரம்பரியத்தை நினைவு கூரும் வகையிலும், இருசக்கர வாகன விபத்தில் உயிரிழப்புகளை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மாவேலி வேஷமிட்டு தலையில் ஹெல்மெட் அணிந்து ஜெண்டை மேளத்துடன் ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் வரவேற்று பாராட்டினர். கேமராமேன் ஜெனீருடன் குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர்…

Read More
நாகர்கோவில் சுபிசன் நரம்பியல் மருத்துவமனை திறப்பு

நாகர்கோவில் சுபிசன் நரம்பியல் மருத்துவமனை திறப்பு.

செப் 5 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கீழ கோணம் பகுதியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள சுபிசன் நரம்பியல் மருத்துவமனை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு சட்ட பேரவை தலைவர் திரு. அப்பாவு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் அவர்கள் கலந்துகொண்டு மருத்துவமனையை திறந்து வைத்தார். இத்துடன் கழக நிர்வாகிகள், மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும்…

Read More
செக்கிழுத்த செம்மல் வ உ சி சிதம்பரனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல் :

செக்கிழுத்த செம்மல் வ உ சி சிதம்பரனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல் :

செக்கிழுத்த செம்மல் சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பரம் பிள்ளை 154 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவை அவிநாசி சாலையில் உள்ள வ உ சி பூங்கா மைதானத்தில் அமைந்துள்ள செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் திருவருவ சிலைக்கு மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நான் கார்த்திக் இ எக்ஸ் எம்எல்ஏ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் திமுக தீர்மானகுழு உறுப்பினர் மு இரா செல்வராஜ் கலை இலக்கிய பகுத்தறிவு…

Read More
அமெரிக்க அரசின் அடாவடி வரி தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் :

அமெரிக்க அரசின் அடாவடி வரி தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் :

கோவையில் உக்கடம் வள்ளியம்மை பேக்கரி அருகில் இடதுசாரிகள் மற்றும் விசிக சார்பில் 05/09/2025. மாலை 5 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை. தோழர் எம் ஆறுமுகம். CPI. EX. MLA. மற்றும் மற்றும் தோழர் எஸ் கிருஷ்ணமூர்த்தி. CPIM. மாவட்ட செயற்குழு அவர்கள் தலைமையில் திரளான தோழர்கள் கலந்து கொண்டு நடைபெற்றது. செய்தியாளர் : தினேஷ்.P

Read More
நாகர்கோவில் அருகே ஜஸ் கேஸ் நிறுவனத்தில் பரபரப்பு – தீயணைப்பு படையினர் அவசர நடவடிக்கை

நாகர்கோவில் அருகே ஜஸ் கேஸ் நிறுவனத்தில் பரபரப்பு – தீயணைப்பு படையினர் அவசர நடவடிக்கை.

செப் 5, கன்னியாகுமரி நாகர்கோவில் அருகே ஜஸ் கேஸ் நிறுவனத்தில் பரபரப்பு – தீயணைப்பு படையினர் அவசர நடவடிக்கை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பாலாஸ் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் ஜஸ் கேஸ் நிறுவனத்தில் இன்று அதிகாலை திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டது. துர்நாற்றம் பரவியதால் அருகிலுள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மக்கள் பீதி அடைந்தனர். தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர், கேஸ் கசிவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில்…

Read More
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் காவல் நிலையத்தில் ஓணம் கொண்டாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் காவல் நிலையத்தில் ஓணம் கொண்டாட்டம்.

செப் 5 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் காவல் நிலைய வளாகத்தில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. காவல் நிலைய வளாகத்தில் பாரம்பரிய முறையில் அழகிய அத்தப் பூ கோலம் இடப்பட்டு விழா அலங்கரிக்கப்பட்டது. காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார் அனைவரும் இணைந்து கொண்டாடிய இந்நிகழ்வில், ஒற்றுமை, சகோதரத்துவம், மதச்சார்பற்ற தன்மை ஆகியவற்றை வலியுறுத்தி அனைவருக்கும் இனிய ஓணம் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.

Read More
கேரளாவில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்த நபர் கைது, 496 கிலோ புகையிலை பறிமுதல் :

கேரளாவில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்த நபர் கைது, 496 கிலோ புகையிலை பறிமுதல் :

தென்காசி : தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகவதிபுரம் விளக்கு அருகே சார்பு ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கேரளாவில் இருந்து வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக புகையிலை பொருட்களை கடத்தி வந்த ஆலங்குளம் பூலாங்குளம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த சூரன் மணி…

Read More
திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத் நிலம் மோசடி – மக்களின் கடும் கண்டனம்

திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத் நிலம் மோசடி – மக்களின் கடும் கண்டனம்.

செப் 4, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத்திற்கு சொந்தமான பூவங்கோடு பகுதியில் உள்ள சுமார் 4.55 ஏக்கர் (சர்வே எண் 171/4) நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்துள்ள லேண்ட் மாஃபியா கும்பல் குறித்த அதிர்ச்சிகரமான மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த 21.08.2025 அன்று திருவிதாங்கோடு பகுதியில் வசித்து வரும் புரோக்கர் ஷேக் முகமது என்பவன், மேற்படி 4.55 ஏக்கர் நிலத்தை தன்னுடைய தாயாரின் சொத்து எனக் காட்டி, போலியாக ஆவணங்கள் தயாரித்து, பூவங்கோடு…

Read More
நாகர்கோவில்: தொழிலதிபரை ஏமாற்றிய வழக்கில் மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை !

நாகர்கோவில்: தொழிலதிபரை ஏமாற்றிய வழக்கில் மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை !

செப் 4 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரிடம் ரூ.10 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நாகர்கோவில் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் பாரதி நகரைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் சுப்பிரமணியம் என்பவர், அந்த தொழிலதிபரை பெரும் தொகை முதலீடு செய்வதாகக் கூறி ரூ.10 கோடி பணத்தை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட தொழிலதிபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் விசாரணை பல மாதங்களாக நடைபெற்றது. ஆதாரங்கள்…

Read More
குமரி எம்.பி. விஜய் வசந்த் மீது அவதூறு – காங்கிரஸ் கண்டனம் :

குமரி எம்.பி. விஜய் வசந்த் மீது அவதூறு – காங்கிரஸ் கண்டனம் :

செப் 4 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் காப்பிகாடு பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் என்பவர், குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வாட்ஸப் குழுவில் இழிவாக பேசி, அவதூறு பரப்பியுள்ளார். இதை கண்டித்து, நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில், மாவட்டத் தலைவர் நவீன் குமார் தலைமையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.

Read More