இதழ்கள்
புதிய அலுவலகம் பூமி பூஜை.
கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் புதிதாக அலுவலகம் அமைப்பதற்கான பூமி பூஜை துடியலூர் கமலேஷ் திருமண மண்டபம் எதிரில் இன்று காலை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தனர். உடன் கோவை பாராளுமன்ற உறுப்பினர் திரு கணபதி ராஜ்குமார் அவர்கள் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதி பொறுப்பாளர் மூலனூர் எஸ் கார்த்திக் துடியலூர் கிழக்கு பகுதி செயலாளர் அருள்குமார் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து…
திருநெல்வேலியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில், கோரிக்கை மனு அளித்த விவசாயிகளுக்கு, புல் வெட்டும் இயந்திரங்கள் வழங்கிய, மாவட்ட ஆட்சித்தலைவர்!
திருநெல்வேலி, செப். 26:- திருநெல்வேலி, செப். 26: சென்ற மாதம் (ஆகஸ்ட்) 15-ஆம் தேதி முதல், உங்களுடன் ஸ்டாலின் திட்டம், மாநிலம் முழுவதும் செயலபடுத்தப்பட்டு வருகிறது. இதன்படி மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சிகள் என, அனைத்து இடங்களிலும், சிறப்பு முகாமில் நடத்தப்பட்டு, அந்தந்த பகுதி மக்களிடமிருந்து, துறை வாரியாக கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அந்த மனுக்கள் மீது 45 நாட்களில், சாதகமான தீர்வுகள் காணப்படுகின்றன. ஒருசில மனுக்களுக்கு உடனடியாகவும், தீர்வு காணப்படுகின்றன. அந்த அடிப்படையில், ஓரிரு…
இருசக்கர வாகனம் மோதி முதியவர் விபத்து.
செப் 26. உடுமலை திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் திருப்பூர் ரோட்டில் சேரன் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முதியோர் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள் இந்த சாலையில் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் பொதுமக்களும் முதியவர்களும் பாதிப்புள்ளாகின்றனர் சம்பவ இடத்துக்கு காவல்துறை பொதுமக்களை சமாதானப்படுத்தி இப்பகுதியில் வேகத்தடை அமைத்து தர பொதுமக்கள் உறவினர்கள் கோரிக்கை வைக்கப்பட்டது மற்றும் இரண்டு சக்கர வாகனம் காவல்துறைக்கு…
திருநெல்வேலியில், புலிகள் அமைப்பின் முதன்மை தளபதி திலீபனின், 37- ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி அனுசரிப்பு..!
தமிழீழ விடுதலைப் போர் 1987-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில், மிக உச்சத்தில் இருந்த நிலையில், திடுமென இந்திய அப்போதைய பிரதமர் மறைந்த ராஜீவ்காந்தி அதில் தலையிட்டு, இலங்கையின் அப்போதைய குடியரசு தலைவர் ஜெயவர்த்தனாவோடு ஓர் ஒப்பந்தம் போட்டு, “இரு தரப்பாருக்கும் இடையே, அமைதியை நிலைநாட்ட போகிறோம்!” என அறிவித்து, இந்திய படையை அங்கே அனுப்பி வைத்தார். ஆனால், ஒப்பந்தப்படி இலங்கை அரசு நடக்காமல், ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும், அப்பாவி பொதுமக்கள் மீதும், ராணுவ…
மு.க.ஸ்டாலின் விருது பெற்ற மூத்த தலைவரரை, சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்க்ள்…
இன்று (26.09.25) கடந்த வாரம்,கரூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் மு. க. ஸ்டாலின் விருதுபெற்ற ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் முன்னாள் செயலாளரும், திமுக சொத்துப் பாதுகாப்பு குழுத்துணைத்தலைவருமான திரு.பொங்கலூர் ந. பழனிசாமி, அவர்களை, மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளரும், மாநகராட்சி கல்விக்குழு தலைவருமான திருமதி, மாலதி அவர்கள், தலைமையில் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள். கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்
மதுரையில் விசாரணைக்கு அழைத்து சொல்லப்பட்ட சிறுவன் கொலை வழக்கில் தீர்ப்பு…
மதுரை, எஸ்.எஸ் காலனி காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன் உயிரிழந்த வழக்கு காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 4 காவலர்களுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை. மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு உடற் கூராய்வின்போது காயங்களை மறைத்த அரசு மருத்துவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவு தனது மகன் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிறுவனின் தாய் தொடர்ந்த வழக்கில் உத்தரவு மதுரை மாவட்ட செய்தியாளர் – சின்னத்தம்பி
அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களை செல்போனில் வீடியோ எடுத்த – மின் வாரிய வணிக பிரிவு ஆய்வாளர் கைது..!
மதுரை: சமயநல்லூர் மின் கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களை கழிப்பறை ஜன்னல் வழியே செல்போனில் வீடியோ எடுத்த மின் வாரிய வணிக பிரிவு ஆய்வாளர் ராஜராஜேஸ்வரன்(33) கைது. அவரது செல்போனை வாங்கி பார்த்தபோது அலுவலகத்தில் பணிபுரியும் பல பெண் ஊழியர்களின் வீடியோக்கள் இருந்தது கண்டறியப்பட்டது அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை. மதுரை மாவட்ட செய்தியாளர் – சின்னத்தம்பி
குடிகார தந்தையை கொன்ற மகன்..!
மதுரையை சேர்ந்த கண்ணன் என்பவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார். கண்ணன் தினசரி மது அருந்திவிட்டு மனைவியிடம் சண்டையிட்டு வந்துள்ளார். இதே போன்று மது போதையில் தனது மனைவியிடம் சண்டையிட்ட நிலையில் 9 வயது சிறுவனான கண்ணனின் மகன் வீட்டில் இருந்த கத்தரிக்கோலை தூக்கி வீசியபோது எதிர்பாராத விதமாக கண்ணன் உடலில் பட்டு கண்ணன் உயிரிழந்தார். மதுரை மாவட்ட செய்தியாளர் – சின்னத்தம்பி
காளிகேசம் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை – வனத்துறை அறிவிப்பு..!
செப் 26 கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் காளி கேசம் பகுதியில் கடந்த சில நாட்களாக இடையறாத மழை பெய்து வருவதால் ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் ஆற்றின் ஓட்டம் வேகமாக இருந்து, சுற்றுலா பயணிகளின் உயிர் பாதுகாப்பு தரப்பில் அதிக ஆபத்து நிலவுகிறது. இதனை முன்னிட்டு, இன்று காளி கேசம் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என வனத்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக விதிகளை மதித்து…
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில் ஹரி பிரியாணி நிறுவனத்தாரின் மூன்று அவசரகால ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா…
தென்காசி : செப் – 26 – தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பிரபல ஹரிபிரியாணி நிறுவனத்தாரின் அவசரகால ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா மற்றும் ஹரிபிரியாணி நிறுவனத்தின் ஒன்பதாம் ஆண்டு துவக்க விழா என இருபெரும் விழா சாம்பவர் வடகரை அருள்மிகு ஸ்ரீ இராமசாமி திருக்கோவில் வளாகத்தில் வைத்து மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இந்து நாடார் உறவின்முறை கமிட்டி நிர்வாகிகள் தலைமை வகித்தனர். சாம்பவர் வடகரை முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் வி .பி…
