தமிழ்நாடு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை தூய்மை பணி…
செப் 21 கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சார்பில், மாவட்டத்தில் உள்ள பல கடற்கரைகள் தூய்மைப்படுத்தும் பணி சிறப்பாக நடைபெற்றது. கோவளம், துவாராக, பதி, சொத்த விளை, கணபதிபுரம் லெமூரியா பீச், மணவாளக்குறிச்சி பீச், மண்டைக்காடு, குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த முறையில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள், ஆர்எஸ்எஸ் தொண்டர்கள், முன்னாள் ராணுவத்தினர் உட்பட 400க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்று கடற்கரை பகுதிகளைச் சுத்தம்…
மதுரையில் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது…
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் 2025 கான பொதுக்குழு கூட்டம் மதுரையில் கமல்ஹாசன் தலைமையேற்று நடந்த அனைத்து நிர்வாகிகள் முன்மொழிவை கடிதமாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனிடன் வழங்கப்பட்டது. இந்த செயற்குழு கூட்டம் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் R.சொக்கர் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர்…
கோவை மாநகராட்சியில் சத்தமில்லாமல் நடக்கும் பணிகள்..
கோவை பகுதியில், விறுவிறுப்பாக நடக்கும் பணிகள் . கோவை மாநகராட்சியை பொறுத்தவரை தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாநகராட்சியாகும். மக்கள் தொகை அடிப்படையிலும் சரி, பரப்பளவு அடிப்படையிலும் சரி, சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரமாக உள்ளது. கோவை மிக வேகமாக வளர்ந்து வரும் நகரமாக இருக்கிறது. இங்கு மாநகராட்சி பகுதியில் மட்டும் சுமார் 7 ஆயிரம் சாலைகள் உள்ளன. தற்போது சாலைகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. தற்போது 277 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை பணிகள்…
ஸ்டார் குரு அவர்களுக்கு மஞ்சப்பை வழங்குதல்…!
மதுரை, சேதுபதி மேல்நிலைப் பள்ளியில், மதுரை இலக்கிய பேரவையின் சார்பாக நடைபெற்ற முப்பெரும் விழாவில் நட்சத்திர அறக்கட்டளையின் நிறுவனர் ஸ்டார் குரு அவர்களுக்கு தொடர்ந்து மஞ்சப்பை விழிப்புணர்வு செய்து வரும் சமூக ஆர்வலர்கள் ஷேக் மஸ்தான் மற்றும் நூருல்லாஹ் மஞ்சப்பை வழங்கி வாழ்த்து பெற்றனர். மதுரை மாவட்ட செய்தியாளர் – சின்னத்தம்பி.
கடலூர் – பிரதமரை விமர்சித்த தாவாக தலைவர்…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி எம்எல்ஏ மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பிரதமர் மோடியே!இந்திய பெறுநிலத்தில் வாழும் அனைத்து மொழிவழித் தேசிய இணங்களையும் மதியுங்கள் என விமர்சித்துள்ளார். மேலும் குஜராத்தில் நடைபெற்ற நிகழ்வில்,குஜராத்தி மொழியில் பேசாமல் இந்தியில் பேசியற்க்காக, அங்குள்ள பொதுமக்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார். பண்ருட்டி செய்தியாளர் – R. விக்னேஷ்
தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் திருத்தல 363 வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது…
தென்காசி : செப் – 21 –தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும்,அனைத்து மதத்தினராலும் சர்வேஸ்வரன் ஆலயம் என அழைக்கப்படும் இவ் ஆலயத்தின் ஒவ்வொரு ஆண்டு பெருவிழாவானது செப்டம்பர் 20 ல் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான மிக்கேல் அதிதூதர் திருத்தலத்தின் 363 வது ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த கொடியேற்று நிகழ்ச்சியில் அகரக்கட்டு இறை மக்கள் பங்கு தந்தை அருட்பணி அலாசியஸ் துரைராஜ் அடிகளார் தலைமையில் ஊர்…
கோத்தகிரியில் – திமுக WAR ROOM திறப்பு.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் நீலகிரி மாவட்ட திமுக.,விற்கான “அண்ணா அறிவாகம்” எனும், WAR ROOM-ஐ கழக துணை பொதுச்செயலாளர் – நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஆ.இராசா அவர்கள், தேர்தல் பணி செயலாளர் – அரசு கொறடா மாண்புமிகு கா.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் முன்னிலையில் திறந்து வைத்தார்.
பெண்கள் அதிகாரமளிப்பு கார் ராலி – உலகச் சாதனை படைத்த ஜேசிஐ தூத்துக்குடி பெம் ஸ்டார்ஸ்..!
செப் 21, கன்னியாகுமரி – பெண்கள் அதிகாரமளிப்பை முன்னெடுக்கும் வகையில், ஜேசிஐ தூத்துக்குடி பெம் ஸ்டார்ஸ், சார்பில் நடைபெற்ற கார் ராலி உலகச் சாதனையாகப் பதிந்தது. இந்த முயற்சியின் மூலம், ராலி தூத்துக்குடியில் தொடங்கி கன்னியாகுமரியில் நிறைவடைந்தது. இடையே பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, கோவா, மங்களூர், காளிக்கட், கொச்சி உள்ளிட்ட பல நகரங்களை கடந்து மொத்தம் 4600 கி.மீ. தூரம் பெண்கள் விழிப்புணர்வு செய்தியுடன் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி, குளோபல் வேர்ல்ட் ரெகார்ட் எனும் பெருமையைப் பெற்றது. இந்த…
ஓரணியில் தமிழ்நாடு..!
கோவை மாநகர மாவட்ட திமுக சார்பில். ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம்.முன்னாள் அமைச்சர்மேற்கு மண்டல பொறுப்பாளர் அவர்கள்.வி.செந்தில்பாலாஜி. தலைமையில் கோவையில் தீர்மான ஏற்பு பொதுக் கூட்டத்தில். திரு. சூர்யா வெற்றி கொண்டான். தலைமை கழக பேச்சாளர். மாநில சட்டத்துறை இணைச் செயலாளர் அவர்களும். கோவை மாவட்ட செயலாளர். Ex. M.L.A.நா. கார்த்திக். அவர்களும். திரு. கோவை சம்பத். தலைமை கழக பேச்சாளர். அவர்களும் மற்றும் கோவை மாவட்ட திமுக. கழக நிர்வாகிகளும் கழக உடன்பிறப்புகளும் திரளான…
தக்கலை அரசு பள்ளியில் கட்டிய புதிய கழிப்பறை பூட்டப்பட்டு பயன்பாடின்றி !
செப் 21 கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் கல்வி கற்கின்றனர். ஆனால், பள்ளியில் போதுமான கழிப்பறை வசதி இல்லாததால் மாணவிகள் பல சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். இந்த நிலையில், ரோட்டரி கிளப் சார்பில் அனைத்து வசதிகளுடனும் புதிய கழிப்பறை கட்டி, கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும், அந்த கழிப்பறை மாணவிகளுக்கு பயன்படுத்த முடியாமல் பூட்டப்பட்டு காலியாக உள்ளது….
