தமிழ்நாடு
புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தல்.
கோவை மாநகராட்சி கோவை வடக்கு தொகுதிக்குட்பட்ட மத்திய மண்டலம் வார்டு எண் 31க்கு உட்பட்ட தேவபுரம் பகுதியில் அதிக மின்பளு காரணமாக அடிக்கடி ஏற்படும் மின்தடையை சரி செய்யும் பொருட்டு பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. அதனை மக்கள் பயன்பாட்டுக்கு பாராளுமன்ற உறுப்பினர் திரு கணபதி ராஜ்குமார் அவர்கள் மக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்த போது உடன் ஆம் என்ற உறுப்பினர் திரு.வைர முருகன் மற்றும் மேற்பார்வை பொறியாளர் திரு.சதீஷ்குமார் மற்றும் செயற்பொறியாளர் திரு.பசுபதீஸ்வரன்…
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நேரடி பணி நியமனம்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் துறையில் சார்பில் நேரடி நியமனம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள பணி ஆய்வாளர்களுக்கு பார்க் இன்ஸ்பெக்டர் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் நிறைவு விழா நிகழ்ச்சி ஆர் எஸ் புரம் கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் திரு கணபதி ராஜ்குமார் அவர்கள் கலந்துகொண்டு பயிற்சி நிறைவு பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்த போது உடன் வணக்கத்திற்குரிய கோவை மாநகராட்சி மேயர் திருமதி.ரங்கநாயகி ராமச்சந்திரன் மாநகராட்சி ஆணையாளர் திரு.சிவகுரு பிரபாகரன் மற்றும்…
தூய்மை இயக்கம் 2.0 பணியினை துவக்கி வைத்தல்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் தூய்மை இயக்கம் 2.0 பணியினை துவக்கி வைத்து தூய்மை இயக்கம் குறித்து என உறுதிமொழி ஆட்சியர் அலுவலக உறுப்பினர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்களும் மற்றும் கோவை மாவட்ட கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி சங்கத் பல்வந்த்வாகே. மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஷர்மிளா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர். தமிழக விடியல் கோவை செய்தியாளர் – ல. ஏழுமலை
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் – நீலகிரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் (#DISHA) இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றபோது. உடன் மாண்புமிகு அரசு தலைமை கொறடா திரு க.இராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., உதகை சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.கணேஷ் மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு மாபெரும் பொதுக்கூட்டம் ஆ.இராசா எம்.பி., சிறப்புரையாற்றினார்.
கழக தலைவர் – மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவிப்பின்படி, நீலகிரி மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு மாபெரும் பொதுக்கூட்டம், உதகை ஏ.டி.சி., ஜீப் நிறுத்தம் முன்பு மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட அவை தலைவர் போஜன் அனைவரையும் வரவேற்றார். கழக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு ஆ.இராசா அவர்கள் சிறப்புரையாற்றினார். கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பா.மு.முபாரக் , தேர்தல் பணி செயலாளர், அரசு கொறடா…
மார்த்தாண்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கான அரசியல் பயிலரங்கு.
செப் 20, கன்னியாகுமரி மார்த்தாண்டம் அருகே கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கான அரசியல் பயிலரங்கு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்து உரையாற்றிய கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு. விஜய் வசந்த், தொண்டர்களின் பங்களிப்பு தான் கட்சியின் வலிமை என்றும், அடிப்படை நிலைகளில் அரசியல் விழிப்புணர்வு அவசியம் என்றும் வலியுறுத்தினார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சசிகாந்த் செந்தில், இளைஞர்கள் அரசியலில் ஈடுபட வேண்டிய அவசியம் குறித்து உரையாற்றினார்….
இந்திய கூட்டுறவு இயக்கத்தின் தந்தை சர் பிரடெரிக் நிக்கல்சன் 179வது பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாட்டம்.
இந்திய கூட்டுறவு இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படும் சர் பிரடெரிக் நிக்கல்சன் அவர்களது பிறந்த நாள் தினம் இன்று (20.09.2025) குன்னூரில் உள்ள அவரது கல்லரையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. நீலகிரி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மரு. தே. சித்ரா, நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் திரு. தா. முத்துக்குமார் ஆகியோர் நிக்கல்சன் கல்லறைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நாட்டில் ஏழை எளிய மக்கள் விவசாயிகள் நலனுக்காக…
வரிச்சியூர் செல்வம் கைது.
மதுரை, செப் : 20 2012் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாததால் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் வரிச்சியூர் செல்வம்(57) -ஐ வத்தலகுண்டு-ல் வைத்து கைது செய்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர் திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்ட ரவுடி வரிச்சியூர் செல்வத்தை அக்.3 வரை சிறையிலடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த வரிச்சியூர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர். வரிச்சியூர்…
குளச்சலில் கார் மோதி சிறுமி படுகாயம்.
செப் 19 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் ஆசாத்நகரைச் சேர்ந்த முகமது சுதீரின் 6 வயது மகள், நேற்று டியூஷன் வகுப்பு முடித்து வீடு திரும்பியபோது சாலை விபத்துக்குள்ளானார். அர்ஷிப் (23) என்பவர் ஓட்டி வந்த கார் அந்த சிறுமியை மோதி கடுமையாக காயமடையச் செய்தது. உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிகழ்ச்சி தொடர்பாக காயமடைந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், குளச்சல் போலீசார் கார்…
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே விபத்து.
செப் 20 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலையம் அருகே இன்று காலை பரபரப்பு விபத்து ஏற்பட்டது. சாலையில் சென்றுகொண்டிருந்த டாறஸ் லாரியின் டயர் திடீரென வெடித்து சட்டென நின்றது. அந்த சமயம் பின்னால் வந்த கேரள அரசு பேருந்து லாரியை மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து நடத்துனர் மற்றும் இரு சிறுவர்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக தக்கலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை…
