தமிழ்நாடு
போலீஸ் அக்கா திட்டம் மாணவிகளிடம் சிறப்பான வரவேற்பு.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள எஸ் ஆர் எம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2500 க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் தென்காசி காவல் கண்காணிப்பாளர் V.R ஸ்ரீனிவாசன் அறிவுறுத்தலின்படி செங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் பள்ளி மாணவிகளுக்கு பள்ளி நாட்களில் இரு நேரமும் பாதுகாப்புகளை சிறப்பாக செய்து வரும் காவல் உதவி ஆய்வாளர் செல்வி மற்றும் காவல்துறையினரை மாணவிகளும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர் மாணவிகளின்…
…World Largest Thumb Painting portrait.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரியை சார்ந்த ஓவியர் ஆர்.சிவராமன் 100 ஓவிய மாணவர்களை ஒன்று சேர்த்து உலக சாதனை செய்துள்ளார்.
5000 சதுர அடி கேன்வாஸில் 100 ஓவிய மாணவர்கள் தனது கட்டை விரல் ரேகை பயன்படுத்தி சுமார் 50 லட்சம் thumb print பதிவு செய்து உதயநிதி ஸ்டாலின் ஓவியத்தை உருவாக்கியுள்ளனர் இந்த ஓவியம் உலகிலேயே மிகப்பெரிய ஓவியமாக(Unico) யூனிக்கோ உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது..இந்த ஓவியம் சென்னை கொரட்டூர் தொகுதியில் நடைபெற்றது.இங்கு சிறப்பு அழைப்பாளர்களாக,அம்பத்தூர் எம்எல்ஏ Joseph Samuel,மினிஸ்டர் சேகர் பாபு ஐயா,Priya Rajan Mayor of Madras அவர்கள் கலந்து கொண்டு…
நெல்லை மாணவி 1330 திருக்குறளை கொண்டு 33 அடி உயர கதர்துணியில் ஓவியமாக வரைந்து சாதனை:டிசிபி வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உலக சாதனையாக பதிவு செய்தது….!
நெல்லையில் அக்.21 ம் தேதி நடந்த 5 ம் வகுப்பு பயிலும் நெல்லை மாணவி திருவள்ளுவரின் உருவத்தை 1330 திருக்குறளை எழுதி 33 அடி உயர கதர் துணியில் ஓவியமாக வரைந்து சாதனை படைத்துள்ளார் .நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்த மாரிசெல்வம், திருச்செல்வி ஆகியோரின் மகள் வர்ஷினி 9 வயது ஆகும் இவர் பாளையங்கோட்டை வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் கொரோனா காலத்தில் பொழுதை பயனுள்ளதாக கழிப்பதற்காக நெல்லை சிவராம் கலைக்கூடத்தில் ஓவியம் பயின்றார்.அதைத்தொடர்ந்து…
பி.எஸ்.என்.எ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி 36-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரி மாணவர்களுக்காண 36வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 400 மாணவ மாணவிகள் தங்கள் பட்டங்களைப் பெற்று கொண்டனர். இவர்கள் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை, தகவல் தொழில் நுட்பவியல் ஆகிய துறைகளைச் சார்ந்த மாணவர்கள் பட்டத்தைப் பெற்றனர்.இவ்விழாவில் அண்ணா பல்கலைக்கழகத் தேர்தில் தரவரிசை பட்டிமயில் முதல் மூன்று இடங்களை பெற்ற கணினி அறிவியல் மற்றும் பொறியியல் இளநிலை மாணவர்கள் மூவரும்,…
உடுமலையில் போதைப்பொருள் மற்றும் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி!
உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் ப்ரியா நர்சிங் மற்றும் பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் இணைந்து போதைப்பொருள் மற்றும்புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விழிப்புணர்வு பேரணியை உடுமலைப்பேட்டை கூடுதல் மாவட்ட நீதிபதி சி. ராஜலிங்கம் கொடி அசைத்து துவக்கி வைத்தார், அவருடன் உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான மணிகண்டன், குற்றவியல் நீதித்துறை நடுவர் டி. நித்யகலா, அரசு வழக்கறிஞர் சேதுராமன் மற்றும் வழக்கறிஞர்கள் .மகேஸ்வரன், விஜயகுமார், சட்டம்…
உடுமலை கிளை நூலகம் எண் 2ல் 57வது தேசிய நூலக வார விழா.
57 வது தேசிய நூலக வார விழா உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள கிளை நூலகம் எண் 2ல் கொண்டாடப்பட்டது. நூலக தந்தை எஸ்,ஆர் ரங்கநாதன். திருவுருவப்படத்திற்கு வாசகர் வட்ட ஆலோசகர் உடுமலை செல்வி கேஸ் ஏஜென்சீஸ் உரிமையாளர் எம் பி அய்யப்பன் மாலை அணிவித்தார் . தொடர்ந்து தேசிய நூலக வாரவிழா புத்தக கண்காட்சியை துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் இரண்டாம் நிலை நூலகர்.ரா பூரணி தலைமை வகித்தார். நூலகர்கள் மகேந்திரன் அஷ்ரப் சித்திகா பிரமோத்…
திருநெல்வேலியில், போதை பொருட்களுக்கு எதிராக, மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய, மாநகர காவல் துறையினர்!
திருநெல்வேலி,நவ.21:-திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனாஉத்தரவின்படி, மாநகர காவல் துணை ஆணையர்கள் V.கீதா, G.S.அனிதா (தலைமையிடம்) மற்றும் S.விஜயகுமார் (கிழக்கு) ஆகியோரின் மேற்பார்வையில், திருநெல்வேலி மாநகர எல்லைக்கு உட்பட்ட பள்ளிகளில், தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், இன்று திருநெல்வேலி சந்திப்பு காவல் ஆய்வாளர் பொன்ராஜ், சந்திப்பு ம.தி.தா இந்துககல்லூரி மேல்நிலைப் பள்ளியிலும், தச்சநல்லூர் காவல் ஆய்வாளர் முத்துகணேஷ், தச்சநல்லூர் வேதிக் வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர்…
“திருநெல்வேலி மாவட்ட மக்கள் எப்போதும் காய்ச்சிய தண்ணீரையே, பருக வேண்டும்!”- சீதபற்பநல்லூரில் நடைபெற்ற, மக்கள் தொடர்பு முகாமில் பேசிய, மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள்!
திருநெல்வேலி,நவ.21:- திருநெல்வேலி மாவட்டம், அபிஷேகப்பட்டி அருகேயுள்ள, “சீதபற்பநல்லூர்” கிராமத்தில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப. கார்த்திகேயன், நேரடியாக பங்கேற்ற மக்கள் தொடர்பு முகாம், நடைபெற்றது. இங்குள்ள, “சமத்துவ புரம்” சமுதாயக்கூடத்தில் வைத்து நடைபெற்ற இந்த முகாமில், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை தோட்டக்கலைத்துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், மகளிர் திட்டம்,சமூக பாதுகாப்புத்திட்டம்,வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித்திட்டம்,…
வாணியம்பாடியில் ஆலயத்திற்கு சொந்தமான கடையை காலி செய்யக் கூறியதால் வாடகை தாரார் குடும்பத்தினருடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு.
வாணியம்பாடி,நவ.21- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சி.எல். சாலையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்திற்கு சொந்தமான ஆலய வளாகத்தில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் வாடகைக்கு இருக்கும் ஒரு நபர் தன்னுடைய கடையை நிர்வாகத்தினர் கடந்த ஆறு மாதமாக காலி செய்ய கூறுவதாகவும் தான் தொடர்ந்து வாடகை செலுத்தி வரும் நிலையில் தன்னால் காலி செய்ய இயலாது என்று கூறி குடும்பத்தினருடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த…
பழனியில் 50 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்.
பழனியில் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியிப் குட்கா விற்பனை செய்வதாக பழனி டி.எஸ்.பி தனன்ஜெயன் அவர்களுக்கு கிடைக்கப்பட்ட ரகசிய தகவலின் பெயரில் அவர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் குட்கா மற்றும் விமல் பாக்கு விற்பனை செய்த மூன்று பேர் கைது மேலும் அவர்களிடம் இருந்து 50 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் இதுகுறித்து காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் உத்தரவின் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
