தமிழ்நாடு
வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
வாணியம்பாடி,செப்.25- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இசுலாமிய கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடுதல், முதலாம் ஆண்டு நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கான புத்தொளிப் பயிற்சி மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட 7 நாள் சிறப்பு முகாமில் கலந்து கொண்ட 150 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் உள்ள கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் தி.அப்சர்பாஷா தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார். கல்லூரி துணை முதல்வர் முனைவர்…
சாலை பணிகளை ஆய்வு மேற்கொண்ட நகரமன்ற தலைவர் ஏஜாஸ் அகமத்!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட 1 வது பகுதிஜட்ஜ்மனை மெயின் ரோட்டில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் சிமெண்ட் சாலை மற்றும் கால்வாய் அமைக்கும் பணிகளை நகரமன்ற தலைவர் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது 1 வது வார்டு நகரமன்ற உறுப்பினர் டி.ரஜியாவின் கணவர் முனாப், 2 வது வார்டு நகரமன்ற உறுப்பினர் ஷாஹெதாவின் கணவர் பாரூக் ஆகியோர் உடன் இருந்தனர்.
மயான பூமி பகுதியில் வளர்ந்துள்ள மரங்கள், செடிகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றம்
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் – 03, 24வது வார்டில் அமைந்துள்ள புழல் மயான பூமி பகுதியில் சுத்தம் செய்யும் பணிகள் இன்று காலை நடைபெற்றது. புழல் மயான பூமி பகுதியில் வளர்ந்துள்ள மரங்கள், செடிகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றி சுத்தம் செய்தனர். இந்நிகழ்வில் 24 வது வார்டு மாமன்ற உறுப்பினர் புழல் சேட்டு நேரில் சென்று ஆய்வு செய்து மாநகராட்சி ஊழியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
உடுமலை நாராயண கவிராயர் 125-வது பிறந்தநாள் விழா.!
தமிழக அரசு சார்பில் மாவட்ட வருவாய் அதிகாரி கார்த்திகேயன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.! திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயண கவிராயரின் 125 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று குட்டைதிடல் பகுதியில் உடுமலை நாராயண கவிராயரின் மணிமண்டபத்தில் அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன் கலந்து கொண்டு திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில்பொள்ளாச்சி எம்.பி.ஈஸ்வரசாமி , மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன்…
நிதி நிர்வாக செயல்பாட்டில் குறைபாடு என குற்றச்சாட்டு.!
போடிபட்டி ஊராட்சியில் தாசில்தார்தலைமையில் சிறப்பு கூட்டம் – தனித்தனியாக கருத்துப் பதிவு.! உடுமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட போடிபட்டி ஊராட்சியில் நிதி நிர்வாக செயல்பாட்டில் குறைபாடுகள் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் முடிவில் 6.1.2020 முதல் 31.3.2022 வரையிலான காலகட்டத்தில் செலவு சீட்டுகளை ஆய்வு செய்து குறைபாடுகள் இருப்பதாக அந்த குழு அறிக்கை அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உள்ளாட்சிகள் சட்டப்படி நடவடிக்கை…
BREAKING | தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 6ம் தேதி வரை நீட்டிப்பு
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 6ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விடைத்தாள் திருத்த கூடுதல் அவகாசம் வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே வேன் மரத்தில் மோதியதால் விபத்து.!
6 பேர் சம்பவ இடத்தில் பலி.! கள்ளக்குறிச்சி மாவட்டம், சென்னை – திருச்சி நெடுஞ்சாலை சித்தனுர் கிராமத்தில் வந்து கொண்டிருந்த போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியதில் வேனில் சென்ற 13 பேரில் சம்பவ இடத்திலேயே டிரைவர் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த திருநாவலூர் காவல்துறையினர் விபத்து நடந்த இடத்தில்…
உடுமலை அடுத்துள்ள மாவடப்பு மலை கிராமத்தில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம் மாவடப்பு மலை கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு விழா ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டபணிகள் துறை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து நடத்தினர். விழாவில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ச.தீபா தலைமை தாங்கி துவக்கி வைத்தார். விழாவில் கண்காட்சி அமைக்கப்பட்டு இரும்பு சத்து உணவுகளை உண்ண வேண்டும் மற்றும் வீட்டு தோட்டம் அமைத்து அதன் மூலம் வரும் இயற்கையான ஆரோக்கியமான காய்கறிகள்,…
திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிரடி பணியிடமாற்றம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் நாட்றம்பள்ளி ஆகிய நான்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் துணை வட்டாட்சியர்களாக பணியாற்றி வந்த 16 அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அதிரடி பிறப்புத்துள்ளார். மேற்படி இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் உடனுக்குடன் உரிய இடங்களில் உடனடியாக பணியில் சேர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது…
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி .வெ. கணேசனை சந்தித்து முன்னாள் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் கோரிக்கை
தென்காசி மாவட்டம் தென்காசியில் இயங்கி வருகிற ஐடிஐ தொழில்நுட்பக் கல்லூரியை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்க வேண்டி கோரிக்கை மனு வழங்கினார்.தென்காசியில் ரயில்வே மேம்பாலம் மேல் புறம் ஐடிஐ அமைந்துள்ளது அந்த ஐடிஐ தென் புறம் ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது இதனால் அந்தப் பகுதியில் இருக்கிற ஆடு மாடுகள் நாய்கள் ஐடிஐ வளாகத்திற்குள் வந்து விடுகிறது இதனால் மாணவர்களுக்கு பாதுகாப்பு பெற்ற தன்மை ஏற்படுகிறது அதேபோல் சமூக விரோதிகளும் இரவு நேரங்களில் கல்லூரி வளாகத்திற்குள்க் வர…
