தமிழ்நாடு
சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்தியதால் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை : சாம்சங் ஊழியர்கள் போராட்டம் அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா கூறினர். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஏ.சி, வாஷிங் மெஷின், டி.வி., குளிர்சாதனப்பெட்டி உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு 1500க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். சாம்சங் தொழிற்சாலையில் சிஐடியு சங்கம் தொடங்க அனுமதி மறுக்கப்பட்டது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிர்வாகம்…
பழனியில் கீதா கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ரேடியன் பின்சர்வ் கோல்டு லோன் ,கீதா கண் மருத்துவமனை மற்றும் லயன்ஸ் கிளப் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் கீதா கண் மருத்துவமனை சிறப்பு கண் மருத்துவர் ராஜ் கணேஷ் தலைமையில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.மேலும் இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர் . முன்னதாக இல்லம் தேடி இலவச கண் பரிசோதனை என்ற நோக்கத்தின் அடிப்படையில் கீதா கண்…
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு…காலை 11 மணிக்கு மேல் அனுமதி கிடையாது..!பழனி கோயில் நிர்வாகம் அறிவிப்பு.!
நவராத்திரி விழாவையொட்டி காப்புக் கட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அக்டோபர் 11 ஆம் தேதி ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையும், 12 ஆம் தேதி விஜயதசமி அன்று பழனி கோயிலில் அம்பு வில் போடுதல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன. இதனையொட்டி, பெரியநாயகியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக பூஜை, அலங்காரம், ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. நவராத்திரி விழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய புதிய கட்டுப்பாடுகள் விதித்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது….
பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் எச்ஐவி எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றன…
திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு மாநில எச்.ஜ.வி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் பழனி அரசு மருத்துவமனை மற்றும் பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி ஆகியவை இணைந்து எச்ஜ.வி.எய்ட்ஸ் தீவிர விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றன. தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் கல்லூரி மாணவிகள் எச்.ஐ.வி எய்ட்ஸ் நோய் பற்றிய விபரங்கள் மற்றும் பரவும் விதம் கட்டுப்படுத்தும் விதம் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் ஆகியவற்றை பாடல்கள் மூலமாகவும் நடனத்தின் மூலமாகவும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்….
ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் சார்பாக அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் ஜில்லா பகுதியில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் சார்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் படி திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளரின் பிரதிப் IPS அவர்களின் பலத்த பாதுகாப்புடன் ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் ரவுண்டானா பகுதியில் இருந்து ஸ்ரீ செல்லமுத்து கொடியசைத்து அணிவகுப்பை தொடங்கி வைத்தார் ஊர்வலம் முக்கிய பகுதிகளில் சென்று தாராபுரம் ரோட்டில் உள்ள கார்த்திகேயன் மகாலுக்கு எதிரே பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் பாடலுடன் இசை இசைத்து கொடியேற்றத்துடன் தொடங்கியது…
திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கம் சார்பில் பாராட்டு விழா…
திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கம் சார்பில் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரை சிறப்பாக நடத்திய தமிழ்நாடு ஆத்லெட்டிக் அசோசியேசன் செயலாளர் லதாவுக்கும், இதே போட்டியில் நீளம் தாண்டுதல் தங்கம் வென்ற தடகள வீரர் சித்தின் அர்ஜுனுக்கும் பாராட்டு விழா நடந்தது. இதில் திண்டுக்கல் மாவட்ட தடகள சங்க தலைவர் துரை தலைமை உரையாற்றினார். பொருளாளர் துரைராஜ் வரவேற்றார். தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லதா பரிசளித்தார். திண்டுக்கல் ஜி. டி. என் கல்லூரியினுடைய முதன்மை செயல்…
தமிழ் இனியன் அறக்கட்டளை சார்பாக இரத்ததான முகாம்.
திண்டுக்கல் மாவட்டம் தமிழ் இனியன் அறக்கட்டளை சார்பாக அக்டோபர் 2 ஆம் நாள் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தெய்வம் ஏ டி எஸ் பி தலைமையில் இரத்ததான விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைத்தார் பேரணி மகளிர் காவல் நிலையத்தில் துவங்கி திண்டுக்கல் அரசு கல்லூரி மருத்துமனையில் நிறைவு பெற்றது. தமிழ் இனியன் அறக்கட்டளை சார்பாக அறக்கட்டளையின் தலைவர் அருண்குமார் முன்னிலையில், மருத்துவர்.பிரியா ,குருதி வங்கி பொருப்பாளர் தலைமையில் ரத்ததான முகாம் மருத்துவ மனை குருதிதான வங்கி மையத்தில்…
பழனியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் காந்தி ஜெயந்தி விழா மற்றும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மது இல்லா வாழ்வு என்ற நோக்கத்தின் அடிப்படையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மது ஒழிப்போம், தீண்டாமை ஒழிப்போம் போன்ற உறுதிமொழிகள் எடுக்கப்பட்டது. மேலும் மது அருந்துபவர்கள் கழகத்தின் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், மாவட்ட செயலாளர் வின்னர் மணி ,மாவட்டம் மகளிர் அணி பொறுப்பாளர் ஈஸ்வரி ,மாவட்ட வழக்கறிஞர் அணி பொறுப்பாளர் பாஸ்கரன்…
இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி.
இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு ரூ 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பரிசு வழங்கப் படுகிறது.எழுதுவதின் மகிழ்வு: டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம்’ என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய ஏதாவது ஒரு மொழியில் கடிதத்தை எழுதலாம்.கடிதங்கள் 18 வயதுக்குட்பட்ட நபர்கள் , 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும்….
பழங்குடியின பெண்ணை தாக்கிய நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது நடவடிக்கை எடுத்ததாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை வாழகிரி மல்லிகா நகரில் சுமார் 15க்கும் மேற்பட்ட ஆதிவாசி பழங்குடியின மக்கள் பல வருடமாக வாழ்ந்து வருகின்றனர் இப்பகுதியைச் சேர்ந்த மல்லிகா மற்றும் அவரது கணவர் ரமேஷ் ஆகியோர் இதே பகுதியில் உள்ள உதயசூரியன் என்பவர் எஸ்டேட்டில் வாஜ்பாயனாக வேலை பார்த்து வருகின்றனர் இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி அன்று இரவு 8 மணிக்கு மதுரையைச் சேர்ந்த பிரபு மற்றும் வெங்கடேஷ் மற்றும் 10க்கும் மேற்பட்ட நபர்கள் தோட்டத்திற்குள் வந்து…
