தமிழ்நாடு
பள்ளி மாணவர்களுக்கு மழைநீரில் நடந்து செல்லும் அவல நிலை.
நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட எமரால்டு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மழை பெய்யும் காலத்தில் மழை நீரானது பள்ளி வளாகத்திற்கு அருகில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பள்ளி மாணவ மாணவிகள் கழிவறைக்கு செல்லும் பொழுதும் பள்ளி விட்டு வீட்டிற்கு செல்லும்போதும் மழை நீரில் நடந்து செல்லும் அவல நிலை ஏற்படுகிறது. இதனால் பள்ளி மாணவ மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஏற்படுகிறார்கள் இதற்கு…
அகில உலக கூட்டுறவு ஆண்டு – இலவச கண் பரிசோதனை முகாம்.
ஐக்கிய நாடுகள் சபையானது நடப்பு ஆண்டான 2025னை அகில உலக கூட்டுறவு ஆண்டாக அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து உலகம் முழுவதும் கூட்டுறவு இயக்கங்கள் வாயிலாக பல்வேறு சமூக செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி வட்டத்தில் அமைந்துள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்க திருமண மண்டபத்தில் இன்று ஜூன் 13-ம் தேதி நீலகிரி மாவட்ட கூட்டுறவுத்துறை மற்றும் தி ஐ ஃபவுண்டேஷன் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது….
நீலகிரி மாவட்ட உதகை மாதர்சங்க ஏரியா கமிட்டி மாநாடு District committe அலுவலகத்தில் நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட உதகை மாதர்சங்க … ஏரியா கமிட்டி மாநாடு 13.6.25 அன்று District committe அலுவலகத்தில் நடைபெற்றது இதில் தலைவர் தமிழ் மணி செயலாளர் W..பிரமிளா பொருளாளர் S. சுந்தரி துணைத்தலைவர் ப. ஆமினா துணை செயலாளர் H. ஜீனத் உள்ளிட்ட 15 பேர் கொண்டஉதகை ஏரியா கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. A.R.A நீலகிரி மாவட்டம்
பழனி அருகே ஆயக்குடியில் மாங்காயை சாலையில் கொட்டி போராட்டம்.
பழைய ஆயக்குடி கொய்யா மார்க்கெட் அருகே மாங்காய் விவசாயிகள் சங்கம் சார்பாக மாங்காய்க்கு உரிய விலை இல்லாததால் மாங்காயை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் கவுன்சிலர் மருதமுத்து மற்றும் விவசாயி இரமணி பாஸ் உள்ளிட்டோர் தலைமையில் மத்திய மாநில அரசுகளுக்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.. இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்…
தேமுதிக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
மதுரையில் புதிதாக தேமுதிக சார்பில் தெற்கு தொகுதி பொறுப்பாளராக ஆனந்த குமாரை தேர்வு செய்துள்ளது. அவரை தேர்வு செய்ததற்க்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும் மற்றும் உயர் மட்டக்குழு திரு.பாலன் மற்றும் மதுரை மாநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் திரு. பாண்டியராஜ் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார். மேலும் இந்த சந்திப்பு கூட்டத்திற்கு தெப்பக்குளம் பகுதி செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். தேமுதிக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர்…
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியில் புதிய பள்ளி கட்டிடங்கள் திறப்புவிழா நடைபெற்றது.
பெத்தலகம் நகராட்சி நடுநிலைப் பள்ளி, சானாங்குப்பம் நடேசன் நடுநிலைப்பள்ளி, B. கஸ்பா நகராட்சி நடுநிலைப்பள்ளி, புது கோவிந்தாபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் புதியதாக கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறைகளை தமிழக துணை முதல்வர் திரு.உதயநிதி ஸ்டாலின் காணொளி மூலமாக திறந்து வைத்தார். அதை அடுத்து ஆம்பூர் நகர மன்ற தலைவர் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். விழாவில், நகராட்சி அலுவலர்களும்,நகர மன்ற உறுப்பினர்களும், காவல்துறையினர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில் இளைஞர் ஈர்ப்பு முகாம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில் இன்று 11.06.2025 தும்மனட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் இளைஞர் ஈர்ப்பு முகாம் நிகழ்ச்சி மண்டல இணைப்பதிவாளர் திரு. இரா. தயாளன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தனது தலைமையுரையில் கூட்டுறவு இயக்க வரலாறு குறித்தும், கூட்டுறவு இயக்கத்தில் உறுப்பினராக இணைவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் கூட்டுறவானது தனியார் மற்றும் பொதுத்துறைக்கு இடையேயான இணைப்பு பாலமாக செயல்பட்டு பல்வேறு மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு உதவி புரிந்து வருகிறது…
வாணியம்பாடியில் ஏடிஎம் மையங்களில் பொதுமக்களிடம் நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்து இருவர் கைது.
வாணியம்பாடி,ஜூன்.11- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஏடிஎம் (ATM) மையங்களுக்கு வரக்கூடிய பொதுமக்களிடம் பணம் எடுத்து தருவதாக கூறி நூதன முறையில் ஏடிஎம் கார்டுகளை மாற்றி கொடுத்து பணத்தை எடுத்து ஏமாற்றி வந்த நபர் குறித்து காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அதன் அடிப்படையில் ஜனதாபுரம் பகுதியைச் சேர்ந்த தனராணி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சி.எல் சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம்…
வாணியம்பாடி அருகே நிம்மியம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அமுதா, சிங்காரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம்.
அரசின் திட்டங்களுக்கு எதிராக சாடும் ஆடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியதால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணியக்கோடி நடவடிக்கை. வாணியம்பாடி,ஜூன்.11-திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் அமுதா. இவர் சக ஆசிரியை ஒருவரிடம் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் கல்லூரி கனவு திட்டம் அந்த திட்டம் இந்த திட்டம் என கூறி கோடை விடுமுறையிலும் இந்த அரசின் கீழ்…
பழனி அருகே நெய்க்காரபட்டி கே.வேலூர் சுயம்பு ஸ்ரீ மண்டு காளியம்மன், உச்சி காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.
பழனி, அருகே நெய்க்காரப்பட்டி பேரூராட்சி, கே.வேலூர் சுயம்பு ஸ்ரீ மண்டு காளியம்மன் கோயில், உச்சி காளியம்மன் கோயில் திருவிழா 27.5.2025 ( செவ்வாய்க்கிழமை ) ஆம் தேதி அன்று சாமி சாட்டுதலுடன் துவங்கியது. சண்முக நதியில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி, தீர்த்தம் எடுத்து வந்தனர். பூக்குழி இறங்குதல் நிகழ்வு நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கினர். அதனை தொடர்ந்து பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், முடியிறக்குதல், பூச்சட்டி எடுத்தல் போன்ற…
