“காவேரி டெல்டா மாவட்டங்களில், மழை வெள்ளச் சேதங்களை பார்வையிடும் மத்திய குழுவினர், மாநில அரசு கோரும் தொகையை, ஒன்றிய அரசிடமிருந்து பெற்றுத்தர வேண்டும்!”- எம்.பி.கனிமொழி திருநெல்வேலியில் பேட்டி!
திருநெல்வேலி,அக்.26:- திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத்தலைவரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, திருநெல்வேலி பாளையங் கோட்டையில், புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள, தனியார் மருத்துவமனையினை, இன்று (அக்டோபர். 26) காலையில், திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”காவேரி—டெல்டா மண்டலத்தில், மழை வெள்ள பயிர்ச்சேதங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்து வரும் மத்திய குழுவினர், தமிழ்நாடு அரசு கோரும் நிவாரணத் தொகையினை, ஒன்றிய அரசிடமிருந்து, அப்படியே பெற்றுத்தர வேண்டும்!” என்று வலியுறுத்தினார். “தமிழ்நாடு…
