திருநெல்வேலி மாவட்டம், கொடுமுடியாறு அணையிலிருந்து, நடப்பு பிசானப்பருவ சாகுபடிக்காக, தண்ணீர் திறந்து வைத்த சபாநாயகர் அப்பாவு!
திருநெல்வேலி புறநகர் மாவட்டம், களக்காடு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள, கொடுமுடியாறு அணையிலிருந்து, நடப்பு பிசானப்பருவ சாகுபடிக்காக, தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் [சபாநாயகர்] மு.அப்பாவு, தண்ணீர் திறந்து விட்டார். இன்று [டிச.18] முதல், அடுத்த ஆண்டு [2025] மார்ச் மாதம் 31-ஆம் தேதி முடிய, மொத்தம் 104 நாட்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ள இந்த தண்ணீரால், நாங்குநேரி மற்றும் ராதாபுரம் வட்டங்களில் உள்ள, வள்ளியூரான் கால்வாய், படலையார் கால்வாய், ஆத்துக்கால் மற்றும் வடமலையான் கால் ஆகியவற்றின் மூலம்,…
