Headlines
அம்பேத்கர் 135: கன்னியாகுமரியில் விசிக மரியாதை நிகழ்வு

அம்பேத்கர் 135: கன்னியாகுமரியில் விசிக மரியாதை நிகழ்வு.

வடசேரியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி; கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில், பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 135-வது பிறந்தநாளை முன்னிட்டு விசிக சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. வடசேரியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வை கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் கோபிபேரறாவாளன் தலைமையேற்றார். சமூக நீதி, சமத்துவம் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்து அம்பேத்கர் முன்வைத்த கொள்கைகள் குறித்து சுருக்கமாக பேசப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்….

Read More
நாகர்கோவில் திமுகவில் ஒரே கட்சி, இரு வேட்பாளர்கள் : பின்னணி என்ன?

நாகர்கோவில் திமுகவில் ஒரே கட்சி, இரு வேட்பாளர்கள் : பின்னணி என்ன?

நாகர்கோவில் தொகுதியில் ஆளும் திமுக கட்சி சார்பில் ஒரே நேரத்தில் இரண்டு பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ வேட்பாளராக எஸ். ஆஸ்டின் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் தரப்பில் மட்டும் மூன்று வேட்புமனுக்களும், அதே கட்சியின் எம். சிவராஜ் தரப்பில் ஒரு வேட்புமனுவும் தாக்கல் செய்யப்பட்டிருப்பது தொகுதி மக்களிடையேயும் அரசியல் களத்திலும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே தொகுதியில் ஒரு கட்சிக்கு ஏன் இத்தனை மனுக்கள் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழலாம். இது எந்தவித உள்கட்சிப்…

Read More
தோல்வி பயத்தில் திணறும் விளவங்கோடு காங்கிரஸ்! கேரளா வேட்பாளர் அறிவிப்புக்கு எதிராகவே காங்கிரஸ் தொண்டர்கள் சாலை இறங்கினர்

தோல்வி பயத்தில் திணறும் விளவங்கோடு காங்கிரஸ்! கேரளா வேட்பாளர் அறிவிப்புக்கு எதிராகவே காங்கிரஸ் தொண்டர்கள் சாலை இறங்கினர்.

விளவங்கோடு, ஏப். 4: கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட, கேரளாவைச் சேர்ந்த டி.டி. பிரவீன் என்பவரை வேட்பாளராக அறிவித்ததை எதிர்த்து, அந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறக் கோரி இன்று விளவங்கோட்டில் காங்கிரஸ் கட்சி தொண்டர்களே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “விளவங்கோட்டில் காங்கிரஸுக்கு உள்ளூர் முகங்கள் இல்லையா?”, “கட்சிக்காக பல ஆண்டுகள் உழைத்த தொண்டர்களின் தியாகத்திற்கு இதுவே பரிசா?” என்ற கேள்விகளை எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள்,…

Read More
தேவாலய பாதுகாப்பில் காவல் துறை வெற்றி “மன அமைதியுடன் வழிபாடு செய்தோம்” – மாணவி பாராட்டு

தேவாலய பாதுகாப்பில் காவல் துறை வெற்றி “மன அமைதியுடன் வழிபாடு செய்தோம்” – மாணவி பாராட்டு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையின் செயல்திறன் பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிறது. குறிப்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.பி. ஸ்டாலின் தலைமையில் 2025 கிறிஸ்துமஸ் திருவிழா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செயல்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், நாகர்கோவில் சேர்ந்த மாணவி என். நேத்ரா தேவி, “இந்த ஆண்டு மன அமைதியுடன் தேவாலயத்திற்கு சென்று வர முடிந்தது” எனக் கூறி, நேரில் சந்தித்து பாராட்டு பத்திரம் வழங்கினார். காவல் துறையின் விழிப்புணர்வு…

Read More
"நாங்கலாம் விசில் அடிக்கிறப்ப..." - நேரலை விவாதத்தில் பொறுமையிழந்து அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவேசம்!

“நாங்கலாம் விசில் அடிக்கிறப்ப…” – நேரலை விவாதத்தில் பொறுமையிழந்து அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவேசம்!

நாகர்கோவில், மார்ச் 20 : தனியார் தொலைக்காட்சியில் நாகர்கோவில் நாகராஜா கோவில் பகுதியில் இன்று (மார்ச் 19) நடைபெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக இளைஞர்கள், அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர். விவாதத்தின் போது அமைச்சர் பேசத் தொடங்கியதும், கூட்டத்தில் இருந்த சில இளைஞர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகத் தொடர்ந்து விசில் அடித்தும், கிண்டல் செய்தும் இடையூறு…

Read More
ஜெட் காற்றில் ஏற்பட்ட மாற்றம்: மார்ச் 20 வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு

ஜெட் காற்றில் ஏற்பட்ட மாற்றம்: மார்ச் 20 வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு.

பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள அடிவளிமண்டலத்தில், அழுத்த வேறுபாடுகளின் காரணமாக மிக வேகமாக வீசும் குறுகிய காற்றோட்டம் ‘ஜெட் காற்று’ எனப்படுகிறது. இந்த மேலடுக்கு அதிவேகக் காற்றில் தற்போது ஒரு சிறிய வளைவு அல்லது திசை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வளிமண்டல மேலடுக்கில் காற்று விரிவடைந்து, செங்குத்தான மேகங்கள் உருவாவதற்குச் சாதகமான சூழல் உருவாகியுள்ளது. இந்த வானிலை மாற்றத்தின் விளைவாக, வருகிற மார்ச் 20-ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு…

Read More
சட்டமன்றத் தேர்தல் 2026: மண்டல அளவிலான 2 நாள் பயிற்சி தொடக்கம்

சட்டமன்றத் தேர்தல் 2026: மண்டல அளவிலான 2 நாள் பயிற்சி தொடக்கம்.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்–2026 முன்னிட்டு, மண்டல அளவிலான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான இரு நாள் பயிற்சி வகுப்பு இன்று தொடங்கியது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்தப் பயிற்சியை, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான மரு. இரா. சுகுமார், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். 7 மண்டலங்களில் ஒரே நேரத்தில் பயிற்சி தமிழ்நாடு முழுவதும் சென்னை, விழுப்புரம், திருச்சி, கோயம்புத்தூர், சேலம், மதுரை மற்றும்…

Read More
நாகர்கோவில் : காயமடைந்த அரிய வகை 'கூகை' ஆந்தை மீட்பு, இரவிலும் விரைந்தோடிய வனத்துறையினர்!

நாகர்கோவில் : காயமடைந்த அரிய வகை ‘கூகை’ ஆந்தை மீட்பு, இரவிலும் விரைந்தோடிய வனத்துறையினர்!

கன்னியாகுமரி, பிப் 25 : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார், சின்ன அரிப்புத் தெரு பகுதியில் காயமடைந்து பறக்க முடியாமல் தவித்த அரிய வகை கூகை (Barn Owl) ஆந்தையை பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். இப்பகுதியில் இரவு 11 மணி அளவில் அடிபட்டு சோர்வாகக் கிடந்த இந்தப் பறவையைப் பார்த்த பொதுமக்கள், உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். பூதப்பாண்டி வன சரக அலுவலர் அன்பழகன் தலைமையில் வேட்டை தடுப்பு காவலர் ராஜன் மற்றும்…

Read More
முதல்வர் வருகையும் முக்காடு போடும் காலி மனைகளும்: குமரியில் ‘மோடி மாடலை’ கையில் எடுத்த திராவிட மாடல்!

முதல்வர் வருகையும் முக்காடு போடும் காலி மனைகளும்: குமரியில் ‘மோடி மாடலை’ கையில் எடுத்த திராவிட மாடல்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகை தரவுள்ள நிலையில், அவரை வரவேற்க நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் செய்துள்ள ஒரு ‘பிரம்மாண்ட’ ஏற்பாடே தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. முதல்வரின் பயண வழித்தடங்களில் உள்ள தனியார் காலி மனைகளைத் தேடிப்பிடித்து, ஆளுயரத் திரைகளால் மூடும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குஜராத் மாநிலத்துக்கு வந்தபோதும், 2023…

Read More
கோட்டார்–மணக்குடி சாலை அவசர திருத்தம் : மாவட்ட நிர்வாகத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் முஜீப் ரஹ்மான் கண்டனம்.

கோட்டார்–மணக்குடி சாலை அவசர திருத்தம் : மாவட்ட நிர்வாகத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் முஜீப் ரஹ்மான் கண்டனம்.

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பல சாலைகள் குண்டும் குழியுமாக இருந்து, கடுமையாக சேதமடைந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தினமும் அவதியுறுகின்றனர். இந்த நிலைமை குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், குறிப்பாக மாவட்ட ஆட்சியருக்கும் தெரியாதா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் அலட்சியம் காட்டப்படுகிறதா? என மனிதநேய ஜனநாயக கட்சி கேள்வி எழுப்புகிறது. தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, முதலமைச்சர் பயணம்…

Read More