குமரியில் விழிப்புணர்வு மாரத்தான்: 5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
தலைக்கவசம் அணிவோம்; போதைப்பொருளை ஒழிப்போம் என்ற விழிப்புணர்வுடன் காவல்துறை–பொதுமக்கள் இணைந்து ஓட்டம் கன்னியாகுமரி, செப். 4:கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட 10 கி.மீ. விழிப்புணர்வு மாரத்தானில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கன்னியாகுமரி அய்யன் திருவள்ளுவர் வளைவு பகுதியில் இருந்து இன்று (செப். 4) அதிகாலை 5 மணிக்கு மாரத்தான் தொடங்கியது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS, தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. “தலைக்கவசம்…
