Headlines
முதல்வர் கோப்பை விளையாட்டில் காவலர்களை ஊக்குவித்த குமரி எஸ்.பி. ஸ்டாலின் :

முதல்வர் கோப்பை விளையாட்டில் காவலர்களை ஊக்குவித்த குமரி எஸ்.பி. ஸ்டாலின் :

செப் 10 கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் அரசு ஊழியர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்நிலையில், போட்டிகளில் பங்கேற்கும் காவல்துறையினரை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இன்று நடைபெற்ற கிரிக்கெட், கபடி, இறகுப்பந்து உள்ளிட்ட போட்டிகளில் காவல்துறை ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பல்வேறு வெற்றிகளை பெற்றனர். “எங்கள் வெற்றிக்கு காரணம், எஸ்.பி. மருத்துவர்…

Read More
கன்னியாகுமரி மாவட்டம் பூவன்கோடு – வக்ஃப் நிலம் அபகரிப்பு கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் !

கன்னியாகுமரி மாவட்டம் பூவன்கோடு – வக்ஃப் நிலம் அபகரிப்பு கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் !

செப் 10 கன்னியாகுமரி – இன்று காலை குமரி மாவட்டம் பூவன்கோடு சந்திப்பில், வக்ஃப் சொத்தை போலி பத்திரம் மூலம் அபகரித்த புரோக்கர் ஷேக் முகமது மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பத்திர பதிவு அலுவலகர் கௌரிசங்கர் ஆகியோரை கண்டித்து மாபெரும் மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத்திற்கு சொந்தமான பூவங்கோடு பகுதியில் உள்ள 4.55 ஏக்கர் வக்ஃப் நிலம் (சர்வே எண் 171/4), லேண்ட் மாஃபியா கும்பல் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டது உறுதி…

Read More
சின்னத்திரை நடிகர்கள் சங்கம் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது :

சின்னத்திரை நடிகர்கள் சங்கம் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது :

கலையுலக முன்னணியினர் மற்றும் பல்துறை பிரமுகர்களின் முன்னிலையில் நடைபெற்றது சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் (2025-2028) அறிமுக விழா சென்னை மதுரவாயிலில் உள்ள பாக்கியலட்சுமி கல்யாண மண்டபத்தில் இன்று (செப்டம்பர் 7) நடைபெற்றது. கலையுலக முன்னணியினர் மற்றும் பல்துறை பிரமுகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பரத்,செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நவிந்தர், பொருளாளரக தேர்ந்தெடுக்கப்பட்ட கற்பகவல்லி மற்றும் இதர நிர்வாகிகளான வசந்த், சிவக்கவிதா, ஆதித்யா, தேவானந்த்,…

Read More
பழம்பெரும் கவிஞர் பூவை செங்குட்டுவன் சென்னையில் காலமானார் !

பழம்பெரும் கவிஞர் பூவை செங்குட்டுவன் சென்னையில் காலமானார் !

அவர் எழுதிய புத்தகம் கடந்த வாரம் வெளியான நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக மறைந்தார். பூவை செங்குட்டுவன் இல்லத்திற்கு சென்று அவரது திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் அஞ்சலி.! தமிழ் இலக்கிய மற்றும் திரையுலகினரால் பெரிதும் மதிக்கப்படும் கவிஞரும் பாடலாசிரியருமான பூவை செங்குட்டுவன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் செப்டம்பர் 5 மாலை காலமானார். அவருக்கு வயது 90. அவரது இறுதி சடங்குகள் சனிக்கிழமை அன்று நடைபெற்ற நிலையில், பூவை செங்குட்டுவனின் இல்லத்திற்கு சென்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,…

Read More
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் திமுக சார்பில் உறுதிமொழி கூட்டம்…

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் திமுக சார்பில் உறுதிமொழி கூட்டம்…

செப்டம்பர் 20 மாவட்ட வாரியாக ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டங்கள் நடத்த திமுக தலைவர் மு‌.க‌.ஸ்டாலின் உத்தரவு! திமுகழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று (09-09-2025) காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. அதில், திமுகழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு: கடந்த பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில்,படுபாதாளத்துக்குப் போன தமிழ்நாட்டின் வளர்ச்சியை மீட்டெடுத்து, 11.19 விழுக்காட்டு வளர்ச்சியோடு, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக நம் திராவிட மாடல் ஆட்சியில் உயர்த்தியிருக்கிறோம். இதன் அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு…

Read More
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்கிட ஆராய குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்கிட ஆராய குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !

திருப்பூர் : செப்டம்பர்.10 அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என ஆராய குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது. அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 1962 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் தொடங்கப்பட்டது. இந்த ஆலை தினசரி 1,250 மேற்பட்ட டன் மற்றும் ஆண்டுக்கு சுமார் 2.14 லட்சம் மெட்ரிக் டன் அரவை செய்யும் திறனுடன் தொடங்கப்பட்டது. இந்த ஆளை வளாகத்தில் தினசரி 55 ஆயிரம் லிட்டர்…

Read More
கொடைக்கானல் சுற்றுலா வந்த கேரளா பயணிகள் 5 பேரை ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் அறையில் அடைத்து வைத்து அடித்ததாக சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டு .!

கொடைக்கானல் சுற்றுலா வந்த கேரளா பயணிகள் 5 பேரை ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் அறையில் அடைத்து வைத்து அடித்ததாக சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டு .!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியிலிருந்து 5 சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து மேல்மலை கிராமமான போலூர் கிராமத்திற்கு சென்றுள்ளனர். அங்கு தங்கும் விடுதி தேடியதாக கூறப்படுகிறது. கேரளா சுற்றுலா பயணிகள் வனப்பகுதியை ஒட்டி உள்ள வருவாய் நிலத்திற்கு சென்று புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, ஆனைமலை புலிகள் வனப்பகுதிக்கு உட்பட்ட வனப்பகுதியில் பணியாற்றும் வனத்துறையினர் 2 பேர் நீங்கள் வனப்பகுதிக்குள் சென்று உள்ளீர்கள் எனவே 25 ஆயிரம் அபராதம் பிடிக்கப்படும் என்று சுற்றுலா…

Read More
நாகர்கோவில் வடசேரி அரசு தொடக்கப்பள்ளி அருகே சாக்கடை சீர்கேடு – பொதுமக்கள் கவலை !

நாகர்கோவில் வடசேரி அரசு தொடக்கப்பள்ளி அருகே சாக்கடை சீர்கேடு – பொதுமக்கள் கவலை !

செப் 10, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி அரசு தொடக்கப்பள்ளி முன்பு கழிவுநீர் செல்லும் சாக்கடை மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் பள்ளியில் படிக்கும் சிறார்களும், அப்பகுதி பொதுமக்களும் நோய்தொற்று ஏற்படும் ஆபத்து அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார சீர்கேட்டை கருத்தில் கொண்டு, மாநகராட்சி உடனடியாக சாக்கடையை சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர். குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.

Read More
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் கல்விக் கடன் முகாமில் கலந்து உரையாற்றினார் :

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் கல்விக் கடன் முகாமில் கலந்து உரையாற்றினார் :

செப் 10, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். அழகுமீனா அவர்கள் இன்று (10.09.2025) கோணம் அரசு பொறியியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற மாபெரும் கல்விக் கடன் முகாமில் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களிடம் உரையாற்றினார். இம்முகாமில் வங்கிகள் மூலம் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், கல்விக் கடன் பெறும் முறைகள் குறித்து மாணவர்களுக்கு விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பல்வேறு துறை அதிகாரிகள், வங்கி மேலாளர்கள், பேராசிரியர்கள் மற்றும்…

Read More
உங்களுடன் ஸ்டாலின் முகாம்சுமை தீருந்தபுரம் பஞ்சாயத்தில் துவக்கி வைப்பு :

உங்களுடன் ஸ்டாலின் முகாம்சுமை தீருந்தபுரம் பஞ்சாயத்தில் துவக்கி வைப்பு :

தென்காசி செப்டம்பர் 10- தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் சுமை தீர்ந்தபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகம் சுமை தீர்ந்தபுரம் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சுமை தீர்ந்த புரம் பஞ்சாயத்து தலைவர் குட்டி என்ற அருணாச்சலம் தலைமை தாங்கினார் தென்காசி ஒன்றிய கவுன்சிலர் செல்வ விநாயகம் மாவட்ட திமுக தொண்டரணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன் கோமதிநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர்…

Read More