திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 தென் மாவட்டங்களில், கல்வி நிறுவனங்களின் அருகில் உள்ள 476 கடைகளில், காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனை! 31 கிலோ புகையிலை பறிமுதல்! 30 வழக்குகள் பதிவு!
திருநெல்வேலி,ஜன.13:- நெல்லை,தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 தென் மாவட்டங்களை உள்ளடக்கியுள்ள, “திருநெல்வேலி சரக காவல் துறை துணைத்தலைவர்” ( DIG OF POLICE, TIRUNELVELI RSNGE) ப. சரவணன் உத்தரவுப்படி, திருநெல்வேலி சரகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களிலும், பள்ளி கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களின் அருகில் உள்ள 476 கடைகளில், திங்கள் கிழமை {ஜனவரி.12}காலையில் ஒரே நேரத்தில், அதிரடியாக காவல்துறையினர் போதைப் பொருள்கள் தொடர்பாக, தீவிர சோதனைகளை நடத்தினர். இந்த அதிரடி சோதனையின் போது,…
