பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் எச்ஐவி எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றன…
திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு மாநில எச்.ஜ.வி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் பழனி அரசு மருத்துவமனை மற்றும் பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி ஆகியவை இணைந்து எச்ஜ.வி.எய்ட்ஸ் தீவிர விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றன. தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் கல்லூரி மாணவிகள் எச்.ஐ.வி எய்ட்ஸ் நோய் பற்றிய விபரங்கள் மற்றும் பரவும் விதம் கட்டுப்படுத்தும் விதம் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் ஆகியவற்றை பாடல்கள் மூலமாகவும் நடனத்தின் மூலமாகவும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்….
