Headlines
உடுமலை அமராவதி அணைநீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு - உபரி நீர் 11522 கன அடி பிரதான மதகுகள் வழியாக வெளியேற்றம் - கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

உடுமலை அமராவதி அணைநீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு – உபரி நீர் 11522 கன அடி பிரதான மதகுகள் வழியாக வெளியேற்றம் – கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு தூவானம் காந்தளூர் பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு முதல் தற்போது கனமழை பெய்து வருகின்றது இந்த நிலையில் தற்சமயம் இன்று காலை 6 மணி நிலவரப்படி அமராவதி அணைக்கு நீர்வரத்து 11522 கன அடிக்கு மேல் உள்ள நிலையில் தற்பொழுது அணையின் பாதுகாப்பு கருதி அணையின் பிரதான மதகுகள் வழியாக 11375 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. மேலும் கரையோர…

Read More
உடுமலை அருகே 3வது நாளாக தொடர்மழையால் திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது -பூஜைகள் நிறுத்தம்

உடுமலை அருகே3வது நாளாக தொடர்மழையால் திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது -பூஜைகள் நிறுத்தம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க ன அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான குருமலை குழிப்பட்டி ஜல்லிமுத்தான் பாறை பகுதிகளில் பகுதியில் விடிய விடிய கனமழை பெய்து வரும் காரணத்தால் இதனால் அடிவாரம் பகுதியில் உள்ள அமண லிங்கேஸ்வரர் திருக்கோவிலை இன்று கன்னிமார் கோவிலை மூழ்கும் அளவிலும் ,கோவிலில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல் தெரியதாவாறு காட்டாற்று வெள்ளம் சூழ்ந்ததால் கோவில் பகுதியில் இன்று காலையில் பூஜைகள் நிறுத்தபட்டது. மேலும் தொடர்ந்து மழை பெய்து…

Read More
வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு.

வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு.

தென்காசி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் மிகுந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் எல்லா அருவிகளிலும் மழை வெள்ளம் கட்டுக்கடங்காமல் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது மாவட்ட நிர்வாகம் சார்பில் குளிக்க தடை விதித்தும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி ஆர் ஸ்ரீனிவாசன் அறிவுறுத்தலின் பேரில் குற்றாலம் காவல்துறையினர் முழு கட்டுப்பாட்டில் 24 மணி நேரமும் அருவி பகுதியை கண்காணித்து வருகின்றனர் இந்நிலையில் நேற்று மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட 3 வயதுடைய காட்டு…

Read More
திருநெல்வேலி மாவட்டத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, நெல்லை மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு!

திருநெல்வேலி மாவட்டத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, நெல்லை மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு!

திருநெல்வேலி மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி, பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த இடங்களையும், நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தில் தேங்கிநிற்கும் மழை நீரை, இயந்திரத்தின் மூலம் வெளியேற்றும் பணிகளையும், தமிழக சபாநாயகர் மு.அப்பாவு, திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநருமான சந்தீப் நந்தூரி, நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப. கார்த்திகேயன், நெல்லை மாநகராட்சி…

Read More
திண்டுக்கல்லில் லாட்டரி சீட்டு பறிமுதல்!

திண்டுக்கல்லில் லாட்டரி சீட்டு பறிமுதல்!

திண்டுக்கல் 108 விநாயகர் கோயில் அருகே தடை செய்யப்பட்ட 3 லட்சம் மதிப்புள்ள லாட்டரி சீட்டு, ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ரொக்க பணத்தை AB நகர் பாலசுப்பிரமணி மகன் தினேஸ் (31) , பாரதிபுரம் மலையாண்டி மகன் செந்தில்வேல் (53), லைன் தெரு மாதேஸ் ஆகியோரை கைது செய்து தனிப்படை காவலர்கள் நகர் வடக்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

Read More
பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி நிர்வாகம் சார்பாக வரவேற்பு நிகழ்ச்சி.

பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி நிர்வாகம் சார்பாக வரவேற்பு நிகழ்ச்சி.

அகில இந்திய பூப்பந்தாட்ட சம்மேளனம் (BBFI) பெருமையுடன், 8வது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாநிலங்களுக்கு இடையேயான ஃபெடரேஷன் கோப்பை 2024-25, குஷால்நகர், குடகு மாவட்டம்,கர்நாடக மாநிலத்தில் 06.12.2024 – 08.12.2024 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் பெண்கள் பிரிவில் தமிழக பெண்கள் அணி முதலிடத்தையும் ஆண்கள் பிரிவில் ஆண்கள் அணி இரண்டாம் இடத்தை கைப்பற்றியது. பெண்கள் பிரிவில் மற்ற அணிகளை வீழ்த்தி தமிழ்நாடு அணி கேரளா,மகாராஷ்ட்ரா மற்றும் கர்நாடகா அணிகள் சூப்பர் லீகிற்கு தகுதி பெற்ற நிலையில்…

Read More
திமுக நகர செயலாளரும் முன்னாள் நகர் மன்ற தலைவர் ம. பஷீர் அகமது நினைவு தினம்

திமுக நகர செயலாளரும் முன்னாள் நகர் மன்ற தலைவர் ம. பஷீர் அகமது நினைவு தினம்

திண்டுக்கல் முன்னாள் நகர்மன்ற தலைவரும் திமுக நகரச் செயலாளரும், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவருமான ம. பஷீர் அகமது அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி ஆனது திண்டுக்கல் மாவட்ட பஞ்சாலை தொ. மு. ச அலுவலகத்தில் அவர்களின் மகனும் மேற்குப் பகுதி திமுக செயலாளர் ப.பஜுலுல் ஹக் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர், ,பழனி சட்டமன்ற உறுப்பினரும் ஐ.பி. செந்தில்குமார் M.L.A மற்றும் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், மேயர்…

Read More
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், மனித உரிமைகள் தின உறுதிமொழி எடுத்துக்கொண்ட உயர் அதிகாரிகள்!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், மனித உரிமைகள் தின உறுதிமொழி எடுத்துக்கொண்ட உயர் அதிகாரிகள்!

திருநெல்வேலி,டிச.10:- மனித உரிமைகளுக்கான, உலகளாவிய பிரகடனத்தை, “ஐக்கிய நாடுகள் சபை” 1948- ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 10-ஆம் தேதியில், அங்கீகரித்த.து. அதன் அடிப்படையில், ஆண்டுதோறும் இந்த நாள், சர்வதேச மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், “சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி” யினை, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப.கார்த்திகேயன், நெல்லை மாநகராட்சி ஆணையாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான என்.ஓ.சுகபுத்ரா, மாவட்ட…

Read More
உடுமலை அருகே தனியார் உரக்கடை பூச்சி கொல்லி மருந்தால் 300 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் சேதம் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

உடுமலை அருகே தனியார் உரக்கடை பூச்சி கொல்லி மருந்தால் 300 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் சேதம் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மடத்துக்குளம் பகுதியில் கண்ணாடி புத்தூர், நீலம்பூர், குமரலிங்கம், வேடப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆண்டு முழுவதும் அமராவதி அணை புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு உடுமலை பகுதியில் உள்ள தனியார் உரக்கடை ஒன்றில் விவசாயிகள் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கி நெற்பயிர்கள் நடவு செய்தனர் நடவு செய்து 20 நாட்களுக்குள் நன்றாக வளரும் நிலையில்…

Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் மேட்டுப்பாளையத்தில் 4 ஆண்டுகளுக்கு முன் சுவர் விழுந்து 17 பேர் உயிரிழந்த நினைவு நாளை முன்னிட்டு தமிழ் புலிகள் தலைவர் நாகை திருவள்ளுவன் அஞ்சலி செலுத்த வரும் போது கைது செய்ய ப்பட்டார் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து உடுமலையில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் திருப்பதி தலைமையில் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . உடன் வே திருப்பதி மண்டல வழக்கறிஞர் மற்றும் ராமச்சந்திரன் தொகுதி செயலாளர் செல்வராஜ் கலைவாணன் உடுமலை மடத்துக்குளம் நிர்வாகிகள் உட்பட 10 பேர் கைது செய்யட்டனர்.

உடுமலையில் தமிழ் புலிகள் கட்சியினர்10 பேர் கைது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் மேட்டுப்பாளையத்தில் 4 ஆண்டுகளுக்கு முன் சுவர் விழுந்து 17 பேர் உயிரிழந்த நினைவு நாளை முன்னிட்டு தமிழ் புலிகள் தலைவர் நாகை திருவள்ளுவன் அஞ்சலி செலுத்த வரும் போது கைது செய்ய ப்பட்டார் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து உடுமலையில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் திருப்பதி தலைமையில் காவல்துறையைகண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . உடன் வே திருப்பதி மண்டல வழக்கறிஞர் மற்றும் ராமச்சந்திரன் தொகுதி செயலாளர்…

Read More