Headlines
ஸ்பா

ஸ்பா என்கிற பெயரில் பாலியல் தொழில் செய்தவர் கைது.!

இரண்டு பெண்கள் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஸ்பா என்கிற பெயரில் பாலியல் தொழில் செய்து வருவதாகரகசிய தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவிற்கு கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் கடந்த இரண்டு தினங்களாக திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதி முழுவதும் உள்ள ஸ்பாக்களை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் திருப்பத்தூர் வாணியம்பாடி சாலை அருகே தூய…

Read More
வாணியம்பாடி

வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

வாணியம்பாடி,செப்.25- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இசுலாமிய கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடுதல், முதலாம் ஆண்டு நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கான புத்தொளிப் பயிற்சி மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட 7 நாள் சிறப்பு முகாமில் கலந்து கொண்ட 150 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் உள்ள கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் தி.அப்சர்பாஷா தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார். கல்லூரி துணை முதல்வர் முனைவர்…

Read More
சாலை பணிகளை ஆய்வு மேற்கொண்ட

சாலை பணிகளை ஆய்வு மேற்கொண்ட நகரமன்ற தலைவர் ஏஜாஸ் அகமத்!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட 1 வது பகுதிஜட்ஜ்மனை மெயின் ரோட்டில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் சிமெண்ட் சாலை மற்றும் கால்வாய் அமைக்கும் பணிகளை நகரமன்ற தலைவர் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது 1 வது வார்டு நகரமன்ற உறுப்பினர் டி.ரஜியாவின் கணவர் முனாப், 2 வது வார்டு நகரமன்ற உறுப்பினர் ஷாஹெதாவின் கணவர் பாரூக் ஆகியோர் உடன் இருந்தனர்.

Read More

மயான பூமி பகுதியில் வளர்ந்துள்ள மரங்கள், செடிகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றம்

பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் – 03, 24வது வார்டில் அமைந்துள்ள புழல் மயான பூமி பகுதியில் சுத்தம் செய்யும் பணிகள் இன்று காலை நடைபெற்றது. புழல் மயான பூமி பகுதியில் வளர்ந்துள்ள மரங்கள், செடிகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றி சுத்தம் செய்தனர்‌. இந்நிகழ்வில் 24 வது வார்டு மாமன்ற உறுப்பினர் புழல் சேட்டு நேரில் சென்று ஆய்வு செய்து மாநகராட்சி ஊழியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

Read More
உடுமலை நாராயண கவிராயர் 125-வது பிறந்தநாள் விழா.!

உடுமலை நாராயண கவிராயர் 125-வது பிறந்தநாள் விழா.!

தமிழக அரசு சார்பில் மாவட்ட வருவாய் அதிகாரி கார்த்திகேயன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.! திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயண கவிராயரின் 125 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று குட்டைதிடல் பகுதியில் உடுமலை நாராயண கவிராயரின் மணிமண்டபத்தில் அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன் கலந்து கொண்டு திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில்பொள்ளாச்சி எம்.பி.ஈஸ்வரசாமி , மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன்…

Read More
நிதி நிர்வாக செயல்பாட்டில் குறைபாடு என குற்றச்சாட்டு.!

நிதி நிர்வாக செயல்பாட்டில் குறைபாடு என குற்றச்சாட்டு.!

போடிபட்டி ஊராட்சியில் தாசில்தார்தலைமையில் சிறப்பு கூட்டம் – தனித்தனியாக கருத்துப் பதிவு.! உடுமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட போடிபட்டி ஊராட்சியில் நிதி நிர்வாக செயல்பாட்டில் குறைபாடுகள் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் முடிவில் 6.1.2020 முதல் 31.3.2022 வரையிலான காலகட்டத்தில் செலவு சீட்டுகளை ஆய்வு செய்து குறைபாடுகள் இருப்பதாக அந்த குழு அறிக்கை அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உள்ளாட்சிகள் சட்டப்படி நடவடிக்கை…

Read More
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை

BREAKING | தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 6ம் தேதி வரை நீட்டிப்பு

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 6ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விடைத்தாள் திருத்த கூடுதல் அவகாசம் வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read More
ஹரியும் சிவனும் ஒன்னு

ஹரியும் சிவனும் ஒன்னு ! அறியாதவர்கள் வாயில் மண்ணு !

என பாமர மக்கள் கூட சொல்ல கேட்டிருப்போம்.சிவாலயத்தில் தீயில் வெந்த நீரும்.., விஷ்ணு ஆலயத்தில் குளிர்ந்த நீர் தீர்த்த துளசியும் தருகிறார்களே அது ஏன்.? என்றாவது நாம் சிந்தித்து உண்டா.?சிவனுக்கு வில்வம் சூடு , விஷ்ணுவுக்கு துளசி குளிர்ச்சி , நம் உடம்பில் கூட பாதிக்கும் மேல் நீர் அம்சம்தான் உடலை இயக்கும். சக்தியாகிய உயிரோ நெருப்பம்சம்.!அடுப்பிலே நெருப்பு! மேலே பானையில் நீர் ! நீருக்கும் நெருப்புக்கும் நேரடியாக தொடர்பு இல்லை. நீரும் , நெருப்பும் சேர்ந்தால்…

Read More
கள்ளக்குறிச்சி அருகே வேன் மரத்தில் மோதியதால் விபத்து.!

கள்ளக்குறிச்சி அருகே வேன் மரத்தில் மோதியதால் விபத்து.!

6 பேர் சம்பவ இடத்தில் பலி.! கள்ளக்குறிச்சி மாவட்டம், சென்னை – திருச்சி நெடுஞ்சாலை சித்தனுர் கிராமத்தில் வந்து கொண்டிருந்த போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியதில் வேனில் சென்ற 13 பேரில் சம்பவ இடத்திலேயே டிரைவர் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த திருநாவலூர் காவல்துறையினர் விபத்து நடந்த இடத்தில்…

Read More
உடுமலை அடுத்துள்ள மாவடப்பு மலை கிராமத்தில்

உடுமலை அடுத்துள்ள மாவடப்பு மலை கிராமத்தில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம் மாவடப்பு மலை கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு விழா ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டபணிகள் துறை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து நடத்தினர். விழாவில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ச.தீபா தலைமை தாங்கி துவக்கி வைத்தார். விழாவில் கண்காட்சி அமைக்கப்பட்டு இரும்பு சத்து உணவுகளை உண்ண வேண்டும் மற்றும் வீட்டு தோட்டம் அமைத்து அதன் மூலம் வரும் இயற்கையான ஆரோக்கியமான காய்கறிகள்,…

Read More