தமிழ்நாடு
அதிமுகவையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட குன்னூர்_சட்டமன்றத்தொகுதி, மேலூர் ஒன்றியத்தில் கழக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் பா.மு.முபாரக் அவர்கள் தலைமையில் – 100 நாள் வேலை திட்டத்தை முற்றிலுமாக முடக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசு, அதற்கு ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் மேலூர் ஒன்றிய கழக செயலாளர் A.T.லாரன்ஸ், குன்னூர் நகர கழக செயலாளர் எம்.இராமசாமி M.C., கழக விளையாட்டு மேம்பாட்டு அணி…
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தை முடக்க நினைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ஐஎன்டிஏ கூட்டணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தென்காசி டிசம்பர் 24 தென்காசி மாவட்டம் தென்காசி மேற்கு ஒன்றிய திமுகவிற்கு உட்பட்ட பிரானுர் பார்டரில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை முடக்க நினைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து இந்தியா கூட்டணி அனைத்து கட்சிகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மத்தியில் ஆளும் ஒன்றிய பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிக்கும் நோக்கத்தோடு கொண்டு வந்துள்ள விக்சித் பாரத் ஜி ராம் ஜி இந்த சட்டமானது தமிழக மக்களை வஞ்சிக்கும் நோக்கத்தோடு கொண்டு வந்துள்ளதாகவும் கடந்த 2005…
திருப்பரங்குன்றத்தில் மாவட்ட செயலாளர் மருது பாண்டியன் பிறந்தநாள் விழாதமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நலத்திட்டங்கள்- பிரம்மாண்ட அன்னதானம்2026 வெற்றியை தளபதி விஜய்க்கு பரிசாக அளிப்போம்
திருப்பரங்குன்றம் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் மருது பாண்டியன் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தொகுதி முழுவதும் பல்வேறு மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதையொட்டி பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்ட அன்னதான நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. பெண்கள், இளைஞர்கள், முதியோர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் நிகழ்ச்சியில் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மருது பாண்டியன், “மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும்…
விழுப்புரம் மாவட்ட காவல்துறை அரகண்டநல்லூர் காவல் நிலையம் வாகனத் தணிக்கையில் சிக்கிய 220 கிலோ குட்கா பறிமுதல் மூவர் கைது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன் IPS., அவர்களின் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் திரு.பிரேம்ஆனந்த் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.சண்முகம் மற்றும் காவலர்கள் தலைமையில் மணம்பூண்டி கூட்ரோடு அருகே வாகனத் தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் குட்கா பொருட்கள் இருந்ததை கண்டறிந்து எதிரியை நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் திருக்கோவிலூர் தேவியகரம் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகன் திருமால் (27) என தெரியவந்தது மேலும் எங்கிருந்து…
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ்–புத்தாண்டு பாதுகாப்பு வைராக்கியம்!1500 போலீசார் பணியில் — 78 சிறப்பு சோதனை அணிகள்; சட்ட மீறல்களுக்கு கடும் நடவடிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பைப் பாதுகாக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக முழு மாவட்டத்திலும் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், 78 சிறப்பு சோதனை அணிகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன. Highway Patrol, Crime Control Patrol, Emergency Response Patrol, Tourist Patrol, Mobile Patrol போன்ற பல்வேறு பிரிவுகள் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றன. மதுவில் மிதந்து வாகனம் ஓட்டுதல், உரிமம் இல்லாமல் ஓட்டுதல், குறைந்த வயதுடையவர்கள் வாகனம்…
திருநெல்வேலி, முன்னீர்பள்ளம் காவல் நிலையம் இரண்டாக பிரிக்கப்பட்டு, புதிய காவல் நிலையம் மேலச்செவல் திறப்பு! காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்!
திருநெல்வேலி,டிச.22:- திருநெல்வேலி புறநகர் மாவட்டம், சேரன்மகாதேவி உட்கோட்டம், “மேலச்செவல்” பகுதியில், சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கான புதிய காவல்நிலையத்தை, இன்று (டிசம்பர். 22) காலையில், “முதலமைச்சர்” மு.க. ஸ்டாலின், “காணொளி காட்சி” ( VIDEO CONFERENCING) மூலம், திறந்து வைத்தார். அதே நேரத்தில்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன், மேலச்செவல் காவல் நிலையம் செயல்படும் கடடிடத்தினை திறந்து வைத்து, “குத்து விளக்கு” ஏற்றி, காவல் நிவலையத்தினை முழுமையாக பார்வையிட்டு, புதிதாக பொறுப்பேற்றுள்ள காவலர்களுக்கு, அறிவுரைகள் வழங்கினனார். மாவட்டத்தில் சட்டம்-…
நீதிமன்றத்தை பிரசார மேடையாக பயன்படுத்த வேண்டாம்” – நீதிபதி
திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் உள்ள சிவன் கோயில் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் காட்டம். பக்தர்கள் நலன் கருதி மேற்கூரை வசதிகள் செய்து தரக் கோரி மனு தாக்கல். கோயிலில் தற்போது சிவன் உள்ள பகுதியில் மேற்கூரை வசதி செய்து தரப்பட்டு விட்டது – அரசுத் தரப்பு. தற்போது செய்யப்பட்டுள்ள வசதிகள் போதாது என மனுதாரர் வாதிட்டபோது நீதிமன்றம் கண்டிப்பு. மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாம் என வழக்கு வந்த போது நான் பதவியில் இருந்திருந்தால் தீபம் ஏற்ற அனுமதித்திருப்பேன்: பொன்.மாணிக்கவேல் பேட்டி.
தீர்ப்பு வந்தபோது இந்த இடத்தில் நான் இருந்திருந்தால், ‘நான் சட்டத்தின் வேலைக்காரன். அரசாங்கத்தின் வாய்மொழி அறிவுறுத்தல்கள் சட்டவிரோதமாக இருக்கும் வரை அரசாங்கத்தின் வேலைக்காரன் அல்ல’ என, நீதிமன்ற உத்தரவு கிடைத்தவுடன், முதல்வர், உள்துறை அமைச்சருக்கு மெயில் அனுப்பியிருப்பேன். உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காதவர்கள் போலீசே கிடையாது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், எனக்கு எதிராக ஒன்னே முக்கால் மணி நேரம் வழக்கறிஞராக வாதாடியவர். எனினும், அவரது நேர்மையான பணிக்கு, அவருக்கு ஆதரவாக 2,000 கையெழுத்து என்றாலும் போடுவேன். பிரதமர் மோடி,…
புதிய பொறுப்பாளர்கள் கோவை வடக்குமாவட்ட செயலாளரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்..
இன்று காலை(20.12.25) 9.00 மணி அளவில் கோவை வடக்கு மாவட்ட கழக செயலாளர்திரு,தொ. அ. ரவிஅவர்களை, கழக கோவை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் திரு,இளங்கோ அவர்கள் தலைமையில், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளராக தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட வழக்கறிஞர் திரு,ம. வெற்றி திரு,ஆர்.ராஜேஷ்குமார், மற்றும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளராக தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் திரு,முருகானந்தம் அவர்களும்சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பில் வழக்கறிஞர் அணி தொண்டர்களும் உடன் இருந்தனர். கோவை மாவட்ட…
மதுரை ரயில் நிலையம் அருகே தீ விபத்து.
மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தின் 2-வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது எல்.ஐ.சி. கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்புதுறையினர் போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தில் பெண் மேலாளர் கல்யாணி என்பவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
