தமிழ்நாடு
பழனியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் காந்தி ஜெயந்தி விழா மற்றும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மது இல்லா வாழ்வு என்ற நோக்கத்தின் அடிப்படையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மது ஒழிப்போம், தீண்டாமை ஒழிப்போம் போன்ற உறுதிமொழிகள் எடுக்கப்பட்டது. மேலும் மது அருந்துபவர்கள் கழகத்தின் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், மாவட்ட செயலாளர் வின்னர் மணி ,மாவட்டம் மகளிர் அணி பொறுப்பாளர் ஈஸ்வரி ,மாவட்ட வழக்கறிஞர் அணி பொறுப்பாளர் பாஸ்கரன்…
இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி.
இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு ரூ 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பரிசு வழங்கப் படுகிறது.எழுதுவதின் மகிழ்வு: டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம்’ என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய ஏதாவது ஒரு மொழியில் கடிதத்தை எழுதலாம்.கடிதங்கள் 18 வயதுக்குட்பட்ட நபர்கள் , 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும்….
பழங்குடியின பெண்ணை தாக்கிய நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது நடவடிக்கை எடுத்ததாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை வாழகிரி மல்லிகா நகரில் சுமார் 15க்கும் மேற்பட்ட ஆதிவாசி பழங்குடியின மக்கள் பல வருடமாக வாழ்ந்து வருகின்றனர் இப்பகுதியைச் சேர்ந்த மல்லிகா மற்றும் அவரது கணவர் ரமேஷ் ஆகியோர் இதே பகுதியில் உள்ள உதயசூரியன் என்பவர் எஸ்டேட்டில் வாஜ்பாயனாக வேலை பார்த்து வருகின்றனர் இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி அன்று இரவு 8 மணிக்கு மதுரையைச் சேர்ந்த பிரபு மற்றும் வெங்கடேஷ் மற்றும் 10க்கும் மேற்பட்ட நபர்கள் தோட்டத்திற்குள் வந்து…
இல்லம் தேடி இலவச கண் நோய் சிகிச்சை.
பழனி கீதா கண் மருத்துவமனை சார்பில் இல்லம் தேடி இலவச கண் நோய் சிகிச்சை அளிக்க முடிவு. பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்பு கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள மருத்துவமனை நிர்வாகம் வேண்டுகோள். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : ராஜ் மேலாளர், கீதா கண் மருத்துவமனை. பழனி. செல் : 8122271418
காந்தி ஜெயந்தி முன்னிட்டு மதுக்கடைகள் மூடல்.!
திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மதுபானம் (உரிமை மற்றும் அனுமதிச்சட்டம்) 1981-ன்கீழ் உரிமம் பெற்று இயங்கி வரும் மதுக்கடைகள் 2-ம் தேதி (புதன்கிழமை) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மூடப்பட்டிருக்கும். அன்று மதுபானங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது. மேலும் அன்றைய தினத்தில் விதிகளுக்கு மாறாக மது விற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார். பழனி செய்தியாளர் நா.ராஜாமணி
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் முன்கள பணியாளர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்தும் , கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் கோட்டை நோக்கி மாபெரும் பேரணி நடக்கப் போவதாக கௌரவ தலைவர் மருத்துவர் ரவீந்திரநாத் பேட்டி
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு பணியாளர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் ராஜகோபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மருத்துவ துறை பணியாளர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சாந்தி, கௌரவ தலைவர் ரவீந்திரநாத் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். திண்டுக்கல், ஈரோடு, மதுரை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் சில பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை எந்த ஒரு நிபந்தனையின்றி பணி வழங்க வேண்டும். திண்டுக்கல் பாளையம் பேரூராட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஐந்து பணியாளருக்கு…
பழனி அருகே திமுக சார்பில் துணை முதல்வர் பதவியேற்றதற்கு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்…
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி திமுக பேரூர் இளைஞர் அணி சார்பில் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் தமிழகத் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றதற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதமாக பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். மாவட்ட மாணவரணி செயலாளர் அஸ்வின் பிரபாகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கணேசன் ஒன்றிய செயலாளர் சுவாமிநாதன் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மகேந்திரன் ஆயக்குடி பேரூர் செயலாளர்…
அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்.!
திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது 103 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தை கொண்ட தமிழகத்தின் இரண்டாவது கோயிலாக மேட்டுப்பட்டியில் உள்ள ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திகழ்ந்து வருகிறது. கோயிலில் கொடிமரம் மற்றும் உண்டியல் கோவில் நிர்வாகத்தால் அமைக்கப்பட்டு அதிக வருவாய் ஈட்டும் சூழல் ஏற்பட்டுள்ளது. கோவிலுக்கு சொந்தமான கடைகள், திருமண மண்டபம், வீடுகள், மூலமாக வாடகையாக மாதந்தோறும் இரண்டு லட்சத்திற்கு…
பழனியில்பொதுவெளியில் மனித கழிவுகளை வெளியேற்றுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.!
திண்டுக்கல் மாவட்டம் பழனி பைபாஸ் சாலையில் உள்ள இடும்பன் கோவில் பின்புறம் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் TN20 CP. 7129 சாமி செப்டிக் டேங்க் என்ற பெயர் கொண்ட செப்டிக் டேங்க் லாரி மூலமாக கழிவுநீரை நகர்புறங்களில் உள்ள பொதுவெளியில் வெளியேற்றுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக வீடியோவில் உரையாடும் நபர் இது வெறும் கை கழுவும் தண்ணீர் தான் பழனி தேவஸ்தானம் மூலம் இந்த தண்ணீரை அகற்றி வருகிறோம் என்பதாக கூறியுள்ளார்….
பழனி அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வட மாநில வாலிபர் கைது, 2 கிலோ கஞ்சா பறிமுதல்
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த சாமிநாதபுரம் அருகே நல்லூரில் சதாசிவம் என்பவர் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து மில்லில் வேலை செய்து வந்த மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பாபுலால் மகன் சோனு (எ) ராஜ்சர்பா (29) என்பவர் வீட்டில் விற்பனைக்காக 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தார். இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சோனு (எ) ராஜ்சர்பாவை கைது செய்து அவரது வீட்டில் இருந்த விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து…
