தமிழ்நாடு
நான் இருக்கும் போதே தென்பெண்ணை- பாலாறு இணைக்க வேண்டும் என்று ஆசை. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.
வாணியம்பாடியில் நீர்வளத்துறை சார்பில் கல்லாறு / சின்னப்பாலாற்றில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியினை துவக்கி வைத்து பேசினார். வாணியம்பாடி, மார்ச்.9 – திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கல்லாறு / சின்னப்பாலாற்றில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியினை துவங்கி வைத்தல் மற்றும் வேலூர் பாராளுமன்ற நிதி திட்டத்தில் 85 லட்சம் மதிப்பில் முடிவுற்ற பணிகளை பொது மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி வார சந்தை மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை…
ஆம்பூர் வனத்துறை அலுவலகம் சார்பில் நடைபெற்ற பசுமை போக்குவரத்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை வருவாய் கோட்டாட்சியர் அஜிதா பேகம் தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வனத்துறை அலுவலகம் சார்பில் வனச்சரக அலுவலர் பாபு தலைமையில் நடைபெற்ற பசுமை போக்குவரத்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜிதா பேகம் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆம்பூர் பைபாஸ் சாலையில் தொடங்கிய பேரணியில் கே.ஏ.ஆர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மற்றும், வனத்துறையினர் வருவாய்த்துறையினர், காவல் துறையினர் என 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேவலாபுரம், எல்.மாங்குப்பம், வானக்காரதோப்பு, பஜார் ,உமர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்று வாகன…
தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக உலக மகளிர் தின விழா திண்டுக்கல்லில் கொண்டாடப்பட்டது.
மார்ச் 08 திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத் தலைவர் தளபதி உத்தரவின் படி பொதுச் செயலாளர் ஆனந்த் Ex.MLA வாழ்த்துக்களுடனும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் எல் .தர்மா தலைமையிலும் திண்டுக்கல் மாநகரத் தலைவர் மற்றும் தளபதி விஜய் பயிலகத்தின் ஒருங்கிணைப்பாளர் சை.சையது அசாருதீன் சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு மாபெரும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான விருது வழங்கப்பட்டது இதில் கென்னடி மெட்ரிகுலேஷன் பள்ளி அருள் ஜோதி…
இயக்குனர் கனல் கண்ணனுக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கிய உயர் நீதிமன்ற மதுரை கிளை.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு – இந்து முன்னணி நிர்வாகியும் சண்டைப் பயிற்சி இயக்குநருமான கனல் கண்ணனுக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. தனது பேஸ்புக் மற்றும் X கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகாருக்குரிய பதிவு நீக்கப்பட்டுள்ளது என கனல் கண்ணன் தரப்பு தகவல் வாரந்தோறும் சனிக்கிழமை சென்னை மதுரவாயல் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கப்பட்டது. செய்தியாளர் சின்னதம்பி
ஊத்துமலைபாடலாசிரியர் ஊ.வ.கணேசன் எழுதிய ஆர்.சி.பள்ளி பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றாது.
மார்ச் ;-08 தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் ஊத்து மலை ஊரைச் சேர்ந்த பாடலாசிரியரும் ஆர்.சி. நடுநிலைப்பள்ளியின் முன்னாள் மாணவருமாகிய ஊ.வ.கணேசன் எழுதிய “RC School Anthem – ஆர்.சி.பள்ளி பாடல்” ஊத்துமலை ஆர்.சி. நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் பீட்டர் அல்போன்ஸ் வெளியிட அப்பள்ளியின் தாளாளர் அருள் மரியநாதன் பெற்றுக் கொண்டார். ஆர்.சி. நடுநிலைப்பள்ளி ஆண்டு விழாவின் போது மாணவர்களின் நடனத்தோடு அரங்கேற்றப்பட்ட இந்த பாடல் வெளியீடு நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள்…
உதகையில் பார்சன்ஸ் வேலி குடிநீரை நகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது.
உதகை நான்காவது வார்டு மற்றும் ஆறாவது வார்டு பகுதிக்கு உட்பட்ட ஆட்லிசாலை பகுதி கிளன்ராக் பகுதி வண்டி சோலை பகுதிக்கு ஆட்லிசாலை வழியாக பார்சன்ஸ் வேலி குடிநீர் நகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது. 6..இன்ச் குழாய் மூலம் செல்லும் இந்த குடிநீர் குழாய் மூலம் தனிப்பட்ட ஒருவரின் ஓட்டலுக்கு சட்டத்திற்கு புறம்பாக 2 இன்ச் குழாய் தார் சாலை வெட்டி குடிநீர் இணைப்பு கொடுக்க நகராட்சி அதிகாரிகள் முயற்சி செய்து வந்தனர் கடந்த மாதம் இரண்டு முறை…
நீலகிரி மாவட்டத்தில் திமுக ஆலோசனை கூட்டம் ஒக்கலிகர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா எம்.பி. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நீலகிரி மாவட்ட திமுக கூட்டம் உதகை ஒக்கலிகர் திருமண மண்டபத்தில் மாவட்ட கழக அவை தலைவர் போஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அனைவரையும் வரவேற்றார். தமிழக அரசின் தலைமை கொறடா கா.ராமசந்திரன் திமுக உயர்நிலை செயல்டதிட்டக்குழு உறுப்பினர் பா.மு.முபாரக், சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் பரமேஸ்குமார் (கூடலூர்), கோவை திராவிடமணி (குன்னூர்) ஆகியோர்…
ஆலங்குளம் அருகே திருநங்கையின் ஆணுறுப்பை அறுத்து கொலை! இரண்டு திருநங்கைகள் கைது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே திருநங்கையின் ஆணுறுப்பை அறுத்ததால் ஒரு திருநங்கை உயிரிழந்தார். இது தொடர்பாக இரண்டு திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பறும்புநகர் பகுதியில் சுமார் 15 திருநங்கைகள் ஒரே வாடகை வீட்டில் தங்கி வருகின்றனர். இன்று காலையில் அந்த வீட்டில் ரத்தவெள்ளத்தில் ஒரு திருநங்கை இறந்து கிடப்பதாக ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்து விரைந்து சென்ற ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை…
ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் மேல் பக்கத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் சார்பில் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டுமான பணியை மாண்புமிகு வனம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் மேல் பார்வையில் தமிழ்நாடு சட்டமன் பேரவை பொது நிறுவனங்கள் குழு த் தலைவர்..திரு.A.P. நந்தகுமார் அவர்கள் மற்றும் குழு உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்.திரு.ழு.பெ.கி.ரி. அவர்கள் செங்கம்.திரு. துரை. சந்திரசேகரன் அவர்கள் பொன்னேரி.திரு.ம. சிந்தனைச் செல்வன் அவர்கள்…
நீலகிரி மாவட்டத்திற்கு ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வருகை தருவதை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்திற்கு ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வருகை தருவதை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆ இராசா மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது நீலகிரி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பல்வேறு புதிய அறிவிப்புகளை அறிவிக்கவும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைக்கவும், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் உதகைக்கு வருகை…
