Headlines
கூடன்குளம் முதல் உலையில் கோளாறு; 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

கூடன்குளம் முதல் உலையில் கோளாறு; 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு.

09 ஜூலை, நெல்லை நியூஸ் தொழில்நுட்பக் கோளாறால் உற்பத்தி நிறுத்தம்; ஆய்வு மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூடன்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கோளாறை சரிசெய்யும் பணிகளில் பொறியியல் குழுவினர் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடைமுறைகளின் அடிப்படையில் முதல் உலையின் செயல்பாடு நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கோளாறின் தன்மை…

Read More
குற்றாலம் அருவிகளில் சீரான நீர்வரத்து; சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

குற்றாலம் அருவிகளில் சீரான நீர்வரத்து; சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு.

மழை தொடர்ந்ததால் அருவிகளில் நீராட ஏற்ற சூழல்; பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன. தென்காசி மாவட்டத்தின் குற்றாலம் அருவிகளில் சீரான நீர்வரத்து நிலவி வருவதால், நீராட வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. முக்கிய அருவிகளில் நீரின் ஓட்டம் சீராக இருப்பதால், குடும்பங்களும் இளைஞர்களும் அதிக அளவில் வருகை தந்து இயற்கைச் சூழலை ரசித்து நீராடி மகிழ்ந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலம்…

Read More
300 ஆண்டுகள் பழமையான கோதண்டராமசாமி கோவில் மீட்பு! நீதிமன்ற உத்தரவுப்படி புதிய கமிட்டியிடம் சாவி ஒப்படைப்பு.!

300 ஆண்டுகள் பழமையான கோதண்டராமசாமி கோவில் மீட்பு!நீதிமன்ற உத்தரவுப்படி புதிய கமிட்டியிடம் சாவி ஒப்படைப்பு.!

கோவை தெற்கு வட்டம், உப்பார வீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு கோதண்டராமசாமி திருக்கோவில் கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. இக்கோவில் நிர்வாகம் தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வந்த சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, நீதிமன்ற உத்தரவுப்படி கோவில் சாவியானது புதிய கமிட்டியிடம் நேற்று (ஜூலை 2) முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறையின் 1972ஆம் ஆண்டு உத்தரவின்படி, இந்த சமூகத்தைச் சேர்ந்த ஐந்து நபர்கள் கொண்ட நிர்வாகக் குழுவே இக்கோவிலை நிர்வகிக்க…

Read More
நீட் ரத்து கோரி நாகர்கோவிலில் இடதுசாரி அமைப்புகள் ஆர்ப்பாட்டம். ஒன்றிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு; அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தல்.

நீட் ரத்து கோரி நாகர்கோவிலில் இடதுசாரி அமைப்புகள் ஆர்ப்பாட்டம். ஒன்றிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு; அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தல்.

நாகர்கோவில்: தமிழகத்தில் நீட் (NEET) தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி, இடதுசாரி கூட்டமைப்பின் சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு DYFI மாவட்ட செயலாளர் தோழர் விஷ்ணு தலைமை தாங்கினார். RYA அமைப்பைச் சேர்ந்த தோழர் அனிற்டா பிரின்ஸ் ஆர்ப்பாட்டத்தைத்…

Read More
பழனி கோட்டத்தில் 89,100 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்!

பழனி கோட்டத்தில் 89,100 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்!

பழனி : ஜூலை 02,தேசிய நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ், பழனி கோட்ட கால்நடை பராமரிப்புத் துறை சார்பாக ஒன்பதாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நேற்று (01-07-2026) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.பாலசமுத்திரம் குரும்பப்பட்டியில் நடைபெற்ற தொடக்க விழாவிற்கு, பழனி கோட்ட உதவி இயக்குனர் மருத்துவர் முத்துசாமி பாண்டியன் தலைமை தாங்கி, தடுப்பூசி பணியினைத் தொடங்கி வைத்தார். இம்முகாமில் கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் செந்தில்குமார் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் சத்யா ஆகியோர் அடங்கிய கால்நடை…

Read More
பழனி கூனகாளி அம்மன் கோவில் திருவிழா: 200-க்கும் மேற்பட்ட முளைப்பாரிகளுடன் கோலாகல ஊர்வலம்!

பழனி அருள்மிகு கூனக்காளியம்மன் கோவில் திருவிழா: 200-க்கும் மேற்பட்ட முளைப்பாரிகளுடன் கோலாகல ஊர்வலம்!

பழனி : ஜூலை 01 : திண்டுக்கல் மாவட்டம் பழனி கச்சேரி புதுதெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு கூனக்காளியம்மன் கோவில் திருவிழா தற்பொழுது வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவின் இரண்டாம் நாள் விழாவின் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படும் முளைப்பாரி ஊர்வலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கோவில் வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தை, பழனி சித்தநாதன் & சன்ஸ் உரிமையாளர் திரு. பழனிவேல் அவர்கள் முறைப்படி தொடங்கி வைத்தார். இவ்விழாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட…

Read More
கோவையில் முதலமைச்சர் பிறந்த நாளை ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

கோவையில் முதலமைச்சர் பிறந்த நாளை ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

முதலமைச்சர் திரு, ச. ஜோசப்விஜய் அவர்களின், 52- வது பிறந்த நாளை ஒட்டி கோவை மாவட்டம் 35-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் திரு. V. சம்பத்குமார் அவர்கள், பள்ளி குழந்தைகளுக்கான நோட் புத்தகங்களையும் துப்புறவு பணியாளர்களுகு, நலத்திட்ட உதவிகளும் வழங்கினார். உடன் வார்டு செயலாளர், திரு,நாராயணன், கட்சி நிர்வாகிகள், மற்றும்பொதுமக்கள்,கலந்து கொண்டனர். கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்

Read More
தமிழக வெற்றிக்கழக தலைவர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததானம்…

தமிழக வெற்றிக்கழக தலைவர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததானம்…

திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில் தமிழக வெற்றிக்கழக தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சர்ருமான ஜோசப் விஜயின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு தவெக நிர்வாகிகள் ரத்ததானம் செய்தனர். இந்த ரத்த தான நிகழ்வில் தவெக நிர்வாகிகள் ஆண்கள் பெண்கள் என 52 பேர் ரத்த தானம் செய்தனர். முன்னதாக மாவட்ட செயலாளர் கார்த்திக் ராஜா ரத்தம் மற்றும் பிரவீன் குமார் வழங்கி இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் தவெக நிர்வாகிகள் . பழனி பாலன்,…

Read More
சர்வதேச யோகா தினம்: கன்னியாகுமரி ஆயுதப்படை காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி

சர்வதேச யோகா தினம்: கன்னியாகுமரி ஆயுதப்படை காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி.

உடல், மனநலத்தை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட காவல்துறை முன்னெடுப்பு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜூன் 20) மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐபிஎஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், காவல்துறையினரின் உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு யோகாசனங்கள் மற்றும் சுவாசப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. தினசரி காவல் பணிகளில் நீண்ட…

Read More
உள்ளூர் வேலைவாய்ப்பு கோரி கூடங்குளத்தில் சாலை மறியல்

உள்ளூர் வேலைவாய்ப்பு கோரி கூடங்குளத்தில் சாலை மறியல்.

NPCIL ஆட்சேர்ப்பில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய நுழைவுவாயில் முன்பு, நிரந்தர பணியிடங்களில் உள்ளூர் பகுதி மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி, பொதுமக்கள் இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள், அணுமின் நிலையம் அமைந்துள்ள கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த தகுதியான இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு பதிலாக வட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். அணுமின் நிலையம் செயல்பட்டு…

Read More