தமிழ்நாடு
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் சார்பாக இலவச மணமாலை நிகழ்ச்சி.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிஎஸ்என்ஏ மஹாலில் மத்திய மண்டலம் ஏற்பாடு செய்துள்ள அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் இலவச மணமாலை விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன் பிள்ளை பொதுச்செயலாளர் ரகுராம் பொருளாளர் ரவி முதலியார் மத்திய மண்டல துணைத் தலைவர் குழந்தைவேலு தலைமையில் நடைபெற்றது. அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் மத்திய மண்டல ஒருங்கிணைப்பாளர் களான அமைப்பாளர் வேலம்மாள் மகளிர் அணி தலைவி திலகவதி மாநில மகளிர் அணி செயலாளர் உமாவாசன்…
உடுமலையில் புகழ்பெற்ற பிரசன்ன விநாயகர் கோவிலில் முருகனை சூரன் வதம் செய்யும் சூரசம்ஹகார விழா- ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்து சிறப்பு வழிபாடு.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள புகழ் பெற்ற பிரசன்ன விநாயகர் கோவிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி தங்களால் முடிந்த வகையில் பால்பழம் அருந்தியும்,ஒரு வேளை உணவும்,குறுமிளகு எடுத்துக் கொண்டும் பயபக்தியோடு விரதம் மேற்கொண்டு வந்தனர்.இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா உடுமலை பிரசன்ன விநாயகர்கோவிலில் வாண வேடிக்கை, கைலாச வாத்தியம், மங்கள வாத்தியம் முழங்க கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக இன்று மதியம் மூன்று மணியளவில்…
திருச்செந்தூர் முருகனுக்கு மயில் மாலை குஜராத்திலிருந்து வந்ததாக பொய்யான தகவல் ஹரி நாடார் மனைவி மஞ்சு வேதனை.!
அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது. முக்கிய நிகழ்வான இன்று சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர் கலந்து கொண்டனர். நடைபெற்ற நிகழ்ச்சியில் முருகனுக்கு மயில் இறகு மாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது முருகனுக்கு அணிவிக்கப்பட்ட மயில் இறகு மாலையை பற்றி அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கந்த சஷ்டி திருவிழாவின் தொடக்கத்திலிருந்து கடந்த ஒரு வார காலமாக சஷ்டி விரதம் மேற்கொண்டு முக்கிய…
பழனியில் கந்தசஷ்டி விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் கந்தசஷ்டி விழா நேற்று மாலை 3 மணி அளவில் துவங்கியது. கந்தசஷ்டி விழாவின் ஆறாம் திருநாளான நேற்று முக்கிய நிகழ்வாக பார்க்கப்படும் முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் தொடக்கமாக மலைக்கோயில் சின்ன குமாரசுவாமி மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கி வந்து அசுரர்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி கோயில் நிர்வாகம் சார்பாக இந்நிகழ்ச்சிக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சூரசம்ஹார நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர்…
ஆம்பூர் அருகே வங்கியில் தந்தை வாங்கிய கடனுக்காக வீட்டை ஜப்தி செய்ய வந்த வங்கி அதிகாரிகள், காவல்துறை மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் மகள் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.
வாணியம்பாடி,நவ.7- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கைலாசகிரி முருகன் கோயில் மலையடிவார பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி பாலாஜி. இவருக்கு இரண்டு மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளனர். முதல் மனைவிக்கு கவிதா என்ற மகளும், இரண்டாவது மனைவிக்கு நித்யா, சுகன்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் பாலாஜி கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு முன்பு ஆம்பூர் பைபாஸ் சாலையில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் வீடு கட்ட 33 லட்சம் கடன் வாங்கி…
வாணியம்பாடியில் நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் மற்றும் 10க்கும் மேற்பட்டோர் அக் கட்சியில் இருந்து விலகுவதாக பேட்டி.
இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட்டு 11500 வாக்குகளை பெற்று டெபாசிட்டை இழுந்தார். இவர் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் 10க்கும் மேற்பட்டோர், கட்சியில் இருந்து விலகுவதாக, வாணியம்பாடி சி.எல் சாலையில் உள்ள கடை ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாம் தமிழர் கட்சியில் நம்பிக்கை தன்மை இழந்து விட்டதாகவும், கட்சி யாரிடம் கூட்டு வைக்கவில்லை…
நீதிமன்ற உத்தரவு என்ன ஆனது? பிளக்ஸ் பேனர் வைப்பதில் பழனி நகராட்சிக்கு காவல்துறை உதவியா?
பழனி நகராட்சியின் முக்கிய இடங்களில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் சார்பாகவும், அரசியல் கட்சிகள், தனியார் பள்ளிகள் சார்பாக விளம்பர பிளக்ஸ் பேனர்கள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மயில் ரவுண்டானா, திண்டுக்கலில் இருந்து பழனி பேருந்துநிலையம் வரும் பிரதான சாலை, டிராவல்ஸ் பங்களா , EB கார்னர் போன்ற பல முக்கிய இடங்களில் அதிகமான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. விளம்பர பேனர்களை வைப்பதற்கு நகராட்சி அலுவலகத்தில் அனுமதி பெறுவதற்கு என சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது….
திருநெல்வேலியில், ஒரேநாளில் மொத்தம் 3 பள்ளிகளில், மாணவ- மாணவிகளுக்கு, விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய, சட்டமன்ற உறுப்பினர்!
திருநெல்வேலி,நவ.6:-நெல்லை மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ், மேலப்பாள்யத்தில் இயங்கி வரும், காயிதே மில்லத் மேல்நிலைப்பள்ளியில், 11-ஆம் [+1] வகுப்பு படித்து வரும் மாணவ- மாணவிகளுக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று [ நவ.6] காலையில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப், “சிறப்பு” அழைப்பாளராக பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், “மாணவச்செல்வங்கள் நன்றாக படித்து முன்னேறி, நாட்டுக்கும்- வீட்டுக்கும்…
கூடலூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் பந்தலூர் ஏரியா கமிட்டியின் சார்பாக கமிட்டிக்கு உட்பட்ட நாடு பகுதியில் உண்ணா நிலை போராட்டம் நடைபெற்றது.
முன்னதாக நாடுகாணி கடைவீதியில் ஊர்வலம் நடைபெற்றது அதன் பிறகு உண்டான நிலை போராட்டம் பந்தலூர் ஏரியா கமிட்டியின் செயலாளர் தோழர் ரமேஷ் அவர்களின் தலைமையில் தொடங்கியது. கட்சியின் மூத்த உறுப்பினரும் விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மாநகர தோழர் என் வாசு அவர்கள் தலைமை தாங்கி உண்ணா நிலை போராட்டத்தை தொடங்கி வைத்தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் எம்ஏ குஞ்சு முகமது அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள் தோழர் ஜி…
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நடைபெற்ற, மக்கள் குறை தீர்க்கும் முகாமில் நேரடியாக பங்கேற்று, மனுக்களை பெற்ற மாநகர காவல் ஆணையர்!
திருநெல்வேலி,நவ.6:- தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி, பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம், வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும், நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், இன்று [நவ.6] நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் முகாமில், மொத்தம் 12 பேர் கலந்து கொண்டு, மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனாவிடம், புகார் மனுக்களை அளித்தனர். ” பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது, சரியான நடவடிக்கை…
