தமிழ்நாடு
திருநெல்வேலி ராதாபுரத்தில் தந்தை பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு! நேரில் பங்கேற்று, புகழ் அஞ்சலி செலுத்திய சபாநாயகர்!
திருநெல்வேலி,டிச.24:-சாதிக்கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வருணாசிரம தர்மம் மற்றும் பெண்ணடிமை ஆகியவற்றிற்கு எதிராக போராடிய சமூக சீர்திருத்த வாதியும், திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவருமான தந்தை பெரியாரின் 51-வது ஆண்டு நினைவு தினம் இன்று [டிச.24] தமிழகமெங்கும் அனுஷ்டிக்கப்பட்டது. அதன் ஒருபகுதியாக, திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் ராதாபுரத்தில் அமைந்துள்ள “தந்தை பெரியார்” நினைவு சமத்துவப்புரத்தில் நிறுவப்பட்டிருக்கும், தந்தை பெரியாரின் “மார்பளவு” சிலைக்கு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் [சபாநாயகர்] மு.அப்பாவு, “மலர் மாலை” அணிவித்தும், “மலர்” தூவியும், “புகழ் அஞ்சலி”…
உளுந்தூர்பேட்டை நகராட்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சியில் போட்டி தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கான அறிவு சார் மையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அறிவு சார் மையத்தில் தினந்தோறும் வருகை புரிபவர்கள் எண்ணிக்கை மற்றும் போட்டித் தேர்வுகளுக்காக வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் ஆன்லைன் முறையில் போட்டி தேர்வுக்கான வகுப்புகள் நடைபெறும் முறைகள் குறித்து கேட்டறிந்து அதற்கான கணினி உபயோக செயல்பாடுகளை ஆய்வு செய்தார். இதனைத்…
சென்னை, புழல் பகுதியில் அமைந்துள்ள டிரினிட்டி பூரண சுவிசேஷ சபையின் சார்பில் சிறுவர்களுக்கான கிருஸ்துமஸ் விழா
சென்னை, புழல் பகுதியில் அமைந்துள்ள டிரினிட்டி பூரண சுவிசேஷ சபையின் சார்பில் சிறுவர்களுக்கான கிருஸ்துமஸ் விழா புழல் ஜார்ஜ் நர்சரி பள்ளியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டிரினிட்டி பூரண சுவிசேஷ சபையின் தலைமைப் போதகர் தேவ அன்பு, போதகர் ஜெரேமியா தேவநேசன் தலைமையில் நடைபெற்ற மாபெரும் சிறுவர்களுக்கான கிருஸ்துமஸ் விழாவில் 100ற்கும் மேற்பட்ட சிறுவர்கள்,சிறுமிகள் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர். ஞாயிறு பள்ளி ஆசிரியர்களான இலக்கியா, ஜென்சி, சத்யப்ரியா, ப்ரீத்தி, மது, பியூலா, கிருபா, ஏஞ்சல், ஜாஸ்பர், காருண்யா, சந்தியா,…
விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட ஓலக்கூர் பகுதிக்குட்பட்ட அடையாள அட்டை பெறாத 100 மாற்றுத்திறனாளிகளுக்கு திண்டிவனம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட அடையாள அட்டை இல்லாத 100 மாற்றுத்திறனாளிகள் நபர்கள் அழைக்கப்பட்டு,51 மாற்றுத்திறனாளிகள் வந்தனர் அவர்களுக்கு மருத்துவ சான்று மற்றும் யுடிஐடி பதிவு எண்ணுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.க.சுப்பிரமணி மருத்துவ குழுவுடன் பேச்சு பயிற்சியாளர் திருமதி.அபிசேகா,,பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் திரு.நெல்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் : GB.குருசாமி
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
தென்காசி டிசம்பர் 24- தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் பெற்றுக் கொண்டார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் நலவாரியத்தின் கீழ் இயற்கை மரணம் அடைந்த மாற்றுத்திறனாளிகளின் 10 வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.17,000/- வீதம் மொத்தம் ரூ.1,70,000/- மதிப்பிலான காசோலைகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வாசுதேவநல்லூர், தென்காசி, செங்கோட்டை வட்டாரங்களைச் சேர்ந்த 05…
திருப்பத்தூர் அருகே காரில் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 6 செம்மரக்கட்டைகள் காருடன் பறிமுதல்.ஒருவரை கைது செய்து போலீசார் வனத்துறையிடம் ஒப்படைப்பு.
வாணியம்பாடி, டிச.23- திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கருப்பனூர் பகுதியில் செம்மரக்கட்டைகள் கடத்தி செல்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கருப்பனூர் பகுதியை சேர்ந்த சரவணன் மகன் சாரதி (வயது 20) என்பவர் போர்ட் காரில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 6 செம்மர கட்டைகள் இருந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து சாரதி என்பவரை கைது…
செங்கோட்டை காவல் ஆய்வாளரின் மனிதநேய மற்றும் ஒரு அடையாளம்
தென்காசி மாவட்டத்தில் பரவலாக பெய்த கனமழை செங்கோட்டை பகுதிகளில்.13.12.24 ம் தேதி மற்றும் 14.12.24 ம் தேதி பெய்த கன மழையினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .V.R. ஸ்ரீனிவாசன் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான அடிப்படை அத்தியாவசிய பொருட்களை வழங்க உத்தரவு கொடுத்ததின் பேரில் புளியரை கீழப்புதூர் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 16 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் 3 வகையான பருப்பு சீனி சேலை வேஷ்டி மற்றும் பெட்ஷீட் ஆகிய பொருட்களை…
வாணியம்பாடியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் சோதனையின் போது அதிகாரிகளை வணிகர்கள் சிறை பிடித்து வாக்குவாதம்.
வாணியம்பாடியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் சோதனையின் போது அதிகாரிகளை வணிகர்கள் சிறை பிடித்து வாக்குவாதம். அரசு அனுமதித்த பயோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்ததால் வாக்குவாதம். வாணியம்பாடி, டிச 20- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள உணவகங்கள், இனிப்பு கடைகளில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் ஆகியோர் இணைந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குறித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது…
சட்டமேதை அம்பேத்கர் குறித்து தவறான தகவலை . நாடாளுமன்ற சபையில் கூறிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து தென்காசி மேற்கு ஒன்றிய திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
தென்காசி மாவட்டம் தென்காசி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் சட்டமேதை அம்பேத்கர் குறித்து தவறான தகவலைக் கூறிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன இந்நிகழ்ச்சிக்குதென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வே ஜெயபாலன் அறிவுறுத்தலின்படி தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் திவான் ஒலி தலைமை தாங்கினார் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஷேக் அப்துல்லா பண்பொழி பேரூராட்சி மன்ற தலைவரும் பேரூர் செயலாளருமான ராஜராஜன் வடகரை பேரூர் செயலாளர்…
திருநெல்வேலி மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் நாடார் சங்க கல்லூரியில், 40 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து மகிழ்ந்த, முன்னாள் மாணவ- மாணவிகள்!
திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், வள்ளியூர் அருகேயுள்ள தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள தட்சணமாற நாடார் சங்கக் கல்லூரியில் 1984–ஆம் ஆண்டு B.COM படித்து முடித்த, முன்னாள் மாணவர்கள் 40 ஆண்டுகளுக்கு பிறகு, இன்று [டிச.18] நேரில் சந்தித்துக் கொண்ட நிகழ்ச்சி, கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், முன்னாள் மாணவர்கள் மொத்தம் 35 பேர், குடும்பத்துடன் வந்திருந்தனர் அவர்கள், “தங்களுடன் படித்த மாணவ நண்பர்களை, 40 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கின்றோமே!” என்று கூறி,…
