தமிழ்நாடு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வாசவி ஜெயந்தி விழா நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் அமைந்துள்ள வாசவி அம்மன் ஜெயந்தியை முன்னிட்டு அம்மனுக்கு யாகம் வளர்த்து பால்குடம் எடுத்து அபிஷேகம் அலங்காரம் ஆராதனை நடைபெற்றது. அம்மனுக்கு 102 கோத்திரம் பதிந்த வெள்ளி காசு மாலை அணிவிக்கப்பட்டது இதில் சிறப்பு விருந்தினராக LVN பிரசாத் சேலம் அவர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு காசு மாலையை செலுத்தினார் இந்நிகழ்ச்சிக்கு சங்கராபுரம் ஆரிய வைசிய மகா சபா தலைவர் பால்ராஜ் செட்டியார். இளைஞர் சங்கத் தலைவர் KG.சீனிவாசன். செயலாளர் PAR ரவிசங்கர்….
நீலகிரி மாவட்டம் எமரால்டு காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சான்றிதழ் வழங்கி பாராட்டு.
நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட எமரால்டு காவல் நிலையத்தில் போதைப் பொருட்களை தடுக்கும் வகையில் கடந்த மாதம் நீலகிரியில் தடை செய்யப்பட்டுள்ள ஹான்ஸ் குட்கா போன்ற போதை பொருட்களை அத்துமீறி விற்பனை செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறப்பாக செயல் பட்டதால் எமரால்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திக் அவர்களுக்கு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். நீலகிரி மாவட்ட செய்தியாளர் : அருள்தாஸ்
நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் இ-பாஸ் இருக்கிறதா என சோதனை.
நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட கெத்தை சோதனை சாவடியில் பிற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இருக்கிறதா என்றும் இ பாஸ் இருக்கிறதா என்றும் சோதனை நடைபெற்றது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பிற மாவட்டங்களில் இருந்து கொண்டு வருகிறார்களா என்று வாகனங்களில் உதகை கோட்டாட்சியர் சதீஷ் சோதனை செய்தார், அப்போது குந்தா வட்டாட்சியர் சுமதி, வருவாய் ஆய்வாளர் அனுராதா, மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உமா பிரியா ஆகியோர் உடனிருந்தனர்.நீலகிரி…
வாணியம்பாடியில் தந்தை தாக்கியதில் மகன் உயிரிழப்பு.
வாணியம்பாடியில் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்த மகனை கரண்டியால் தந்தை குத்தியதில் மகன் உயிரிழப்பு. நகர போலீஸார் தந்தையை கைது செய்து விசாரணை. வாணியம்பாடி,மே.4- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சாந்தி நகர் பகுதியை சேர்ந்த முருகேசன். இவர் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஸ்ரீதர்(27). இவர் கடந்த சில தினங்களாக வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததால் ஆத்திரமடைந்த முருகேசன் ஸ்ரீதரை வீட்டில் இருந்த கரண்டியால் நெஞ்சுப் பகுதியில் குத்தியுள்ளார். இதில் ஶ்ரீதர்…
நாட்றம்பள்ளி அருகே ஊருக்குள் புகுந்த கரடியை நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர் வனத்துறையினர் கரடியை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.
வாணியம்பாடி,மே.1- திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் அருகே உள்ள செத்தமலை பகுதியில் இருந்து இரண்டு குட்டி கரடிகளுடன் தாய் கரடி என நாண்கு கரடிகள் மேல்மாமுடி மானப்பள்ளி பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் புகுந்தது. அப்போது அங்கு விவசாய நிலத்தில் பருத்தி பறித்துக்கொண்டு இருந்த மணிமேகலை என்ற பெண்ணை வலது கையில் கரடி தாக்கியது. அப்போது அங்கு உடன் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும்…
மோட்டார் வாகன பழுது பார்க்கும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம் உதகையில் நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட மோட்டார் வாகன பழுது பார்க்கும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம்.இன்று மே தினத்தை முன்னிட்டு மாவட்ட மோட்டார் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் உதகை கிரீன் ஃபீல்ட் பிலோமினா துவக்கப் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் தொடக்கத்தில் ஜெல் மெமோரியல் பள்ளி மாணவியின் சிலம்பாட்டத்துடன் தொடங்கப்பட்டது. இதில் பி வினோத்குமார்,எச் ஜார்ஜ்,எல் மைக்கேல் தலைமையில் சங்கத்தின் வரவு செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டன இந்த நிகழ்வில் மோட்டார் வாகன பழுது பார்க்கும்…
மகளிருக்கான விடியல் பயணம் திட்டம்.
அதிகராட்டி கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான மகளிருக்கான விடியல் பயணத்தை புதிய வழி தடத்தில், தலைமை அரசு கொறடா- கழகத் தேர்தல் பணி குழு செயலாளர் கா. ராமச்சந்திரன் அவர்கள் சிறப்புரையாற்றி துவக்கி வைத்தார். உடன் மாவட்ட அவைத் தலைவர் கே. போஜன், மாவட்டத் துணைச் செயலாளர் லட்சுமி, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் பரமேஷ் குமார், ஒன்றிய கழகச் செயலாளர்கள் A.T. லாரன்ஸ், பிரேம்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் வீரபத்திரன், கா. செல்வம், காளிதாசன்,…
தென்காசி அரசு போக்குவரத்து கழக பணிமனை தொமுச சார்பாக உழைப்பாளர்கள் தின கொண்டாட்டம்.
தென்காசி மே 1 தென்காசி மாவட்டம் தென்காசி அரசு போக்குவரத்து கழக பணிமனை தொமுச சார்பாக தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தொழிற்சங்க தென்காசி பணிமனை செயலாளர் வல்லம் திவான் ஒலி தலைமையில் தென்காசி பணிமனை தொமுச தலைவர் மணிகண்டன்பொருளாளர் ஜோசப் ஆகியோர் முன்னிலை வகிக்க மே தின விழா இனிப்புகள் வழங்கி கோஷங்கள் எழுப்பப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தொமுசா சங்க உறுப்பினர்கள்கருப்பையா முருகையா வெங்கடாசலம் மகேஷ் சுப்பையா முருகேசன் மாரி கிருஷ்ணன் அருணாச்சலம் கருப்பசாமி…
வன்னியபுதூர் பகுதியில் பார்வையற்ற தம்பதியினர் மீது மோதிய காளை!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வன்னியபுதூர் பகுதியில் எருதுவிடும் விழா நடைப்பெற்று வரும் நிலையில், விழாவில் பங்கேற்ற காளை ஒன்று வழி தவறி வாணியம்பாடியில் உள்ள சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓடிய போது, அங்கு சாலையில் நடந்து சென்ற பார்வையற்ற தம்பதியினர் மீது மோதியதில் நாகராஜ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதி. திருப்பத்தூர் மாவட்டம் நிருபர் அப்சர் மர்வான்
கள்ளக்குறிச்சி மாவட்டம் பழையனூர் ஊராட்சியில் அக்கிரமிப்பு அகற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பழையனூர் ஊராட்சியில் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி குடி இருந்தார்கள். அதை அகற்ற சொல்லி ஊராட்சி மன்ற தலைவர் பலமுறை வலியுறுத்தியும் அதை அகற்றாமல் இருந்ததால் பலமுறை புகார் அளித்தும் அதை கண்டு கொள்ளாமல் இருந்ததால் காவல்துறை ஆய்வாளர் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் முன்னிலையில் அந்த நீர் நிலையை பழையனூர் ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் வீட்டை இடித்து சரி செய்தார்கள்.வீட்டை இடிக்க வந்த வாகனத்தையும் காவலர்களையும்…
