திருநெல்வேலியில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், ‘மொழிஞாயிறு’ தேவநேய பாவாணரின், 45-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு! நெல்லை மாநகர் மையப்பகுதியில், தேவநேய பாவாணருக்கு, வெண்கலசிலை நிறுவ கோரிக்கை!
திருநெல்வேலி,ஜன.15:-‘மொழிஞாயிறு’ என்று போற்றப்படும், ஞா.தேவநேய பாவாணர் சிறந்த தமிழ் அறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநரும், பன்மொழி புலவரும் ஆவார். 27 மொழிகளில், பேசவும் எழுதவும் திறன் பெற்ற இவர், மிக-மிக அரிய சிறப்பு மிக்க சொல்லாராய்ச்சி தொடர்பான, நிறைய நூல்களை எழுதியுள்ளார். இத்தகைய பெருமை மிக்க, ‘தமிழ் அறிஞர்’ ஆன, ஞா.தேவநேய பாவாணரின் 45-வது வது ஆண்டு நினைவு தினம், இன்று {ஜனவரி. 15} தமிழகமெங்கும் கடைபிடிக்கப்படுகிறது.அதன் ஒருபகுதியாக, திருநெல்வேலி மாவட்ட ‘தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்’ சார்பாக,…
