தமிழ்நாடு
கன்னியாகுமரி வெள்ளமோடியில் அதிர்ச்சி: லேபிள் இல்லாமல், மார்க்கரால் எழுதி பேக்கரி தின்பண்டங்கள் விற்பனை! உறங்குகிறதா உணவுப் பாதுகாப்புத் துறை?
வெள்ளமோடி, ஆக. 27: கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமோடி பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பேக்கரியில், மக்களின் உடல்நலனோடு விளையாடும் வகையில் எவ்வித முறையான லேபிளும், காலாவதி தேதியும் இன்றி தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு விற்பனைக்காக அடுக்கப்பட்டுள்ள பல பிளாஸ்டிக் கண்டெய்னர்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, எடை அல்லது FSSAI உரிம எண் என எந்தவொரு அடிப்படைத் தகவலும் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவில்லை. சில டப்பாக்களில் மட்டும் பெயரளவுக்கு மார்க்கர் (Marker)…
தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் : ஓணம் கொண்டாட்டத்துடன் த.வெ.க. அரசின் 100 நாள் சாதனை நிகழ்ச்சி.
நாகர்கோவில் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில், ஓணம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. த.வெ.க. அரசின் 100 நாட்கள் சாதனைகளை கொண்டாடும் வகையிலும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. த.வெ.க. முக்கிய நிர்வாகியும் தொழிலதிபருமான பால்ராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட இணைச் செயலாளர் பிரேம் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். விழாவில் தொழிலதிபர் பால்ராஜ் மற்றும் மாவட்ட செயலாளர் மாதவன்…
பழனியில் கள்ளச்சந்தையில் அமோகமாக நடைபெறும் மது விற்பனை: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
பழனி, ஆக. 26: திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கணக்கன்பட்டி, ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, பெத்தநாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில் கோயில்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் அரசு கட்டிடங்கள் அருகே சட்டவிரோதமாகக் கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அரசு விடுமுறை தினங்களில் பெட்டி பெட்டியாக மது பாட்டில்களை வைத்துக்கொண்டு கூவி கூவி விற்பனை செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. விடுமுறை நாட்களைப் பயன்படுத்தி, ஒரு மது பாட்டிலுக்கு மூன்று மடங்கு வரை கூடுதல் விலை…
மின்வயர் மாற்றும் பணியில் விபத்து: மின்வாரிய ஊழியர் தீவிர சிகிச்சையில்.
தேரோட்டத்தையொட்டி மின்பாதையை மாற்றியமைத்தபோது சம்பவம்; தவெக நிர்வாகிகள் நேரில் சென்று ஆறுதல் நாகர்கோவில் கோட்டார் ஏழகர பெருமாள் கோவில் தேரோட்டத்தையொட்டி, தெருவீதிகளில் உள்ள மின்வயர்களை பாதுகாப்பாக மாற்றியமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர் ஒருவர் எதிர்பாராத மின்விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தேரோட்டம் நடைபெற்ற பகுதியில் நேற்று காலை மின்வயர்களை மாற்றியமைக்கும் பணியில், தெங்கம்புதூர் பகுதியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் அரவிந்த் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக உயர் அழுத்த மின்கம்பி மீது மற்றொரு…
பழனியில் ‘ஓஜஸ் கஃபே’ பிரம்மாண்ட திறப்பு விழா!
பழனியில் பிரபல ‘பாப்புலர் மெடிக்கல்ஸ்’ நிர்வாகத்தின் புதிய முயற்சியாக “ஓஜஸ் கஃபே எனும் புதிய உணவகம் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டுள்ளது. பழனி அரசு மருத்துவமனைக்கு எதிரில் அமைந்துள்ள இவ்வுணவகத்தின் திறப்பு விழாவில், சிறப்பு அழைப்பாளர்கள் திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் கார்த்திக் ராஜா, பழனி நகர செயலாளர் மிதுன் குமார் மற்றும் பழனி சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர் பிரவீன் குமார் ஆகியோர் கலந்துகொண்டு உணவகத்தைத் திறந்து வைத்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பாப்புலர் மெடிக்கல்ஸ் மற்றும் ஓஜஸ் கஃபே உரிமையாளர்…
பழனியில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன…
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதி மையத்தில் முற்போக்கு திராவிடர் கழகத்தின் நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் 74 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டுமேற்கு ஒன்றிய செயலாளர் துரைராஜ் தலைமையில் விஜயகாந்த் திருவுருவு படத்திற்கு மலர் தூவி சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டன. தொடர்ந்து இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக தேமுதிக மாவட்ட செயலாளர் சிவக்குமார் கலந்து கொண்டு வீடற்றோர் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் அசைவ உணவுகள் வழங்கப்பட்டன.. மேலும் அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு…
கோட்டார் பெருமாள் கோவில் தேரோட்டம் தொடக்கம்.
திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்த தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். மாதவன் நாகர்கோவில் கோட்டார் ஏழகரம் வாகையடி தெருவில் உள்ள பெருமாள் கோவில் தேர்த் திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற தேரோட்டத்தை, தமிழக வெற்றிக் கழகத்தின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். மாதவன், திருத்தேர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். நிகழ்வில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவிற்கு ஆதரவு…
இருசக்கர வாகன ஓட்டுநர், பின்னால் பயணிப்பவர் இருவரும் தலைக்கவசம் அணிய வேண்டும்: கன்னியாகுமரியில் விழிப்புணர்வு பேரணி.
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி காவல் துறை சார்பில் நடைபெற்ற மெகா இருசக்கர வாகன பேரணி கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தியும், இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்லும் நபர் என இருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை எடுத்துரைத்தும் மெகா விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணி, நாகர்கோவில் வடசேரி ஜங்ஷனில் தொடங்கியது. சாலைப்…
பழனி அரசு மகளிர் பள்ளியில் 13-வது புத்தகத் திருவிழா போட்டிகள் தொடக்கம்: திரளான மாணவர்கள் பங்கேற்பு!
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் திண்டுக்கல் இலக்கிய களம் ஆகியவை இணைந்து நடத்தும் 13-வது மாபெரும் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்காகப் பேச்சு, கட்டுரை, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகள் ஐந்து மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டன. இதன்படி, பழனி கல்வி மாவட்ட அலுவலர் திருமதி பரிமளா அவர்களின் உத்தரவின் பேரில், பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மையத்தில் காலை 10.00 மணியளவில்…
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சின்ன புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த சிவபாலன்(வயது 35) மானாமதுரை சட்டக்கல்லூரி மாணவன் படுகொலை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சின்ன புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிவபாலன் வயது 35 மானாமதுரை சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினர் முருகேசன் வயது அம்பது இன்பர்களின் மகளை காதலித்து வந்தார் ஒரே ஊர் என்பதால் பெண்ணின் குடும்பத்தினருக்கும் காதல் விவகாரம் தெரியவந்தது இவர்கள் காதல் எதிர்ப்பு தெரிவித்தனர் ஆனால் இருவரும் காதலை கைவிடவில்லை மேலும் விண்ணின் தம்பி அருண் ராஜா வயது 19 இவர்கள் காதலுக்கு எதிராக…
