தமிழ்நாடு
கோவை சிவானந்தா குடியிருப்பு உங்களுடன் ஸ்டாலின் முகாம்.
மாநகர் மாவட்ட திமுக, தெற்கு சட்டமன்றத் தொகுதி, சிவானந்தா குடியிருப்பு வியாச மந்திர் திருமணமண்டபத்தில் நடைபெற்ற, கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண் 68 க்கான, மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின், “எல்லோர்க்கும் எல்லாம்” 13+ அரசுத் துறைகள்,43+ சேவைகள், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்கள்,மருத்துவ முகாம்களுடன், “உங்களுடன் ஸ்டாலின் முகாமில்” மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ., அவர்கள் பங்கேற்று,பார்வையிட்டார். சிவானந்தா பகுதி திமுக பொறுப்பாளர் டெம்போ சிவா ,மத்திய…
அகில இந்திய மக்கள் உரிமை கழகத்தின் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
மதுரை யூ. சி. பள்ளியில் அகில இந்திய மக்கள் நல கழகத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மாநாடு மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் நடைபெறுகிறது. இந்த விழா அகில இந்திய மக்கள் நல கழகத்தின் தலைவர் டாக்டர். சிவக்குமார் தலைமையில் மாநில,மாவட்ட நிர்வாகிகள் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கிறார்கள்.
குன்னூர் நகராட்சி திட்டப் பணிகள் ஆய்வு.
நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சிக்குட்பட்ட 2வது வார்டு மவுண்ட் பிளசண்ட் பகுதியில் நகர கழக செயலாளரும் அப்பகுதி நகரமன்ற உறுப்பினருமான எம்.இராமசாமி, கழக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணை செயலாளரும், நகரமன்ற துணைத் தலைவருமான மு.வாசிம் ராஜா, குன்னூர் நகராட்சி ஆணையாளர் இளம்பருதி, மாவட்ட பிரதிநிதி எஸ்.மணிகண்டன் MC ஆகியோர் நகராட்சியின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளையும் இனி மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை ஆய்வு செய்தனர். பொறியாளர் வேலுசாமி, சுகாதார ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட…
வாணியம்பாடி அருகே ஓய்வு பெற்ற வழக்கறிஞர் வீட்டில் 39 சவரன் தங்க நகைகளை திருடிய பணிப்பெண் கைது.16 அரை சவரன் நகை நகை பறிமுதல்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வழக்கறிஞர் சண்முக கணேசன். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் பிள்ளைகள் உள்ளன. அவர்களுக்கு திருமணம் நடந்து குடும்பத்துடன் வெளியூரில் வாழ்ந்து வருகின்றனர். வீட்டில் வழக்கறிஞர் சண்முக கணேசன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தனியாக இருந்து வருகின்றனர். அவர்களுக்கு உதவியாக வீட்டில் பணி பெண்ணாக அதே பகுதியை சேர்ந்த லதா (வயது 50) என்பவர் கடந்த 11 மாதங்களாக வேலை செய்து வருகிறார்….
வாணியம்பாடி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு.ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை.
வாணியம்பாடி, சென்னையை சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கு கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த ரோகினி (வயது 30) என்பவருக்கு திருமணம் முடிந்து இரண்டரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. ராஜேஷ் கேரளாவில் பால் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சென்னையில் உள்ள ராஜேஷின் தந்தை பார்ப்பதற்காக திருச்சூரில் இருந்து கணவன் மனைவி இருவரும் திருவனந்தபுரம் விரைவு ரயிலில் நேற்று இரவு சென்னைக்கு புறப்பட்டனர். ரயில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது…
தென்காசி தினசரி சந்தை காய்கனி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்.
தென்காசி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதியதாக கட்டப்பட்ட மார்க்கெட் கட்டிடத்தில் ஏற்கனவே வியாபாரம் செய்த வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி தினசரி சந்தை காய்கனி வியாபாரிகள் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..
கோவை மாநகராட்சி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில்பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் தலைமையில் மாதாந்திர சாதாரண சுகாதார குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நகர் நல உதவி அலுவலர் மரு.பூபதி, கால்நடை மருத்துவர் சரவணன், மாமன்ற உறுப்பினர்கள் மணியன், சம்பத், கமலாவதி, சுமித்ரா, அம்சவேணி, குமுதம், மண்டல சுகாதார அலுவலர்கள் ராஜேந்திரன், வீரன், குணசேகரன், ஆண்டியப்பன், உதவி பொறியாளர் ஜீவராஜ், மற்றும் அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கோவை எஸ். ஐ. எச். எஸ். காலனி இரயில்வே உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானப் பணிகளை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex. எம்எல்ஏ.,அவர்கள் பார்வையிட்டார்.
ரூ 55.40 கோடியில் நடைபெறும் எஸ்.ஐ. ஹெச் எஸ் ரயில்வே கடவு மேம்பாலம் ஆகஸ்ட் மாதம் முடிவடையும். ஆய்விற்கு பின் மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக்Ex. எம்எல்ஏ., பேட்டி கோவை, ஒண்டிப்புதூரில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் சாலையில் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இந்த பாலம் அமைக்கும் பணிகளை இன்று 30-7-2025,புதன்கிழமை காலை 11.00 மணியளவில்,மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக்ex. எம்எல்ஏ.,.பார்வையிட்டார். அவருடன் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட…
வாணியம்பாடியில் வழக்கறிஞருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திரும்பபெறக்கோரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வாணியம்பாடி,ஜூலை.29- உயர்நீதி மன்ற மதுரை கிளையில் பணியாற்றி வரும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது தொடுத்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திரும்பபெற வலியுறுத்தி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் முன்பு தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் வாணியம்பாடி வழக்கறிஞர்கள் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் விசிக சார்பில் முப்பெரும் விழா மிக விமர்சையாக நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் மேதகு இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் மற்றும் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் ஆகத்த நாயகர் தொல். திருமாவளவன் அகவைத் திருவிழா என முப்பெரும் விழா மற்றும் மதசார்பின்மை காப்போம் பேரணியின் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் வேல். பழனியம்மாள் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பாக அமைப்பாளராக திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி கலந்து கொண்டு சிறப்பித்தார் மற்றும் கட்சியின் மாநில மாவட்ட ஒன்றிய முகாம்…
