தமிழ்நாடு
கடலில் சடலமாக மிதந்த ஆண் – மீட்ட காவல்துறை !
செப் 6 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரம் கடல் பகுதியில் இன்று ஒருவரின் சடலம் கடலில் மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து கடலோர காவல் குழும போலீசார் படகில் சென்று உடலை கரைக்கு கொண்டு வந்தனர். இறந்தவர் ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த பெர்க்மான்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குமரி…
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர் சந்திப்பு :
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது அவசரப்பட்டு எடுத்த முடிவு அல்ல : நிதானமாக எடுத்த முடிவு 2026இல் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என கூறியதற்காக அவருடன் கூட்டணி என்பதா? – டிடிவி தினகரன் கூட்டணி குறித்து டிசம்பரில்தான் முடிவு அறிவிப்பேன் – டிடிவி தினகரன் ஓ.பன்னீர்செல்வத்தை பிரதமர் மோடி சந்திக்காத விவகாரத்தில் நயினார் பதில் ஆணவமானது – டிடிவி தினகரன் அண்ணாமலை தலைவராக இருந்தவரை கூட்டணியை நல்ல முறையில் கையாண்டார் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில்…
குளச்சல் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் !
செப்6, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் :கடந்த 60 ஆண்டுகளாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நடத்தப்பட்டு வந்த ஆயுத பூஜை விழா இந்த ஆண்டு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வரும் அக்டோபர் 1-ஆம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில், விழாவை நடத்த வேண்டும் என வலியுறுத்தி குளச்சல் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கம் மற்றும் பி.எம்.எஸ். சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள்…
கோவை மத்தியசிறையில் செக்கிழுத்தசெம்மல் வ.வு.சிதம்பரனாருக்கு மரியாதை :
இந்தியாவை அடிமைப்படுத்திய பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறைக்கு எதிராக விடுதலை கனலை மூட்டியவர் . தொழிலாளர்களின் உரிமைகளுக்காக சங்கம் அமைத்து போராடியவர், செக்கிழுத்த செம்மல் வ. உ. சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள செக்கிற்கு நேற்று (05-09-2025) தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் கோவை மாவட்டக் குழுவின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் கோவை மாவட்டச் செயலாளர் ப.பா. ரமணி, முன்னாள் மாமன்ற உறுப்பினர்…
கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் சுகந்தி ராஜகுமாரி அவர்களுக்கு பதவி உயர்வு :
செப் 5, கன்னியாகுமரி முன்னாள் குமரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராகப் பணியாற்றியதும், தற்போது திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக உள்ள சுகந்தி ராஜகுமாரி அவர்கள், தமிழ்நாடு மருத்துவ கல்லூரி இயக்குநரகம் மற்றும் ஆராய்ச்சி நிலைய இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இந்த உயர்வினை அப்பகுதி மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் வாழ்த்தியுள்ளனர். குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.
மாவேலி வேஷம் – ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு ஊர்வலம்.
செப் 5 கன்னியாகுமரி கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலை, இராமன்பறம்பு பகுதியில் மின்மினி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 24-வது ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இவ்விழாவின் ஒரு பகுதியாக, கேரளா பாரம்பரியத்தை நினைவு கூரும் வகையிலும், இருசக்கர வாகன விபத்தில் உயிரிழப்புகளை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மாவேலி வேஷமிட்டு தலையில் ஹெல்மெட் அணிந்து ஜெண்டை மேளத்துடன் ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் வரவேற்று பாராட்டினர். கேமராமேன் ஜெனீருடன் குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர்…
நாகர்கோவில் சுபிசன் நரம்பியல் மருத்துவமனை திறப்பு.
செப் 5 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கீழ கோணம் பகுதியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள சுபிசன் நரம்பியல் மருத்துவமனை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு சட்ட பேரவை தலைவர் திரு. அப்பாவு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் அவர்கள் கலந்துகொண்டு மருத்துவமனையை திறந்து வைத்தார். இத்துடன் கழக நிர்வாகிகள், மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும்…
செக்கிழுத்த செம்மல் வ உ சி சிதம்பரனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல் :
செக்கிழுத்த செம்மல் சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பரம் பிள்ளை 154 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவை அவிநாசி சாலையில் உள்ள வ உ சி பூங்கா மைதானத்தில் அமைந்துள்ள செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் திருவருவ சிலைக்கு மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நான் கார்த்திக் இ எக்ஸ் எம்எல்ஏ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் திமுக தீர்மானகுழு உறுப்பினர் மு இரா செல்வராஜ் கலை இலக்கிய பகுத்தறிவு…
நாகர்கோவில் அருகே ஜஸ் கேஸ் நிறுவனத்தில் பரபரப்பு – தீயணைப்பு படையினர் அவசர நடவடிக்கை.
செப் 5, கன்னியாகுமரி நாகர்கோவில் அருகே ஜஸ் கேஸ் நிறுவனத்தில் பரபரப்பு – தீயணைப்பு படையினர் அவசர நடவடிக்கை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பாலாஸ் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் ஜஸ் கேஸ் நிறுவனத்தில் இன்று அதிகாலை திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டது. துர்நாற்றம் பரவியதால் அருகிலுள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மக்கள் பீதி அடைந்தனர். தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர், கேஸ் கசிவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில்…
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் காவல் நிலையத்தில் ஓணம் கொண்டாட்டம்.
செப் 5 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் காவல் நிலைய வளாகத்தில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. காவல் நிலைய வளாகத்தில் பாரம்பரிய முறையில் அழகிய அத்தப் பூ கோலம் இடப்பட்டு விழா அலங்கரிக்கப்பட்டது. காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார் அனைவரும் இணைந்து கொண்டாடிய இந்நிகழ்வில், ஒற்றுமை, சகோதரத்துவம், மதச்சார்பற்ற தன்மை ஆகியவற்றை வலியுறுத்தி அனைவருக்கும் இனிய ஓணம் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
