தமிழ்நாடு
உடுமலையில் மதுபான கடையை இடமாற்றம் செய்யக்கோரி இந்து எழுச்சி பேரவை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை ராஜேந்திரா சாலையில் அமைந்துள்ள அரசு மதுபான கடையை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யக்கோரி உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகே இந்து எழுச்சி பேரவை சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உடுமலை ராஜேந்திரா சாலையில் பள்ளிகள் கோயில்கள் வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு மிக அருகாமையில் 50 மீட்டர் தொலைவில் 2016;என்ற எண் கொண்டஅரசு மதுபான கடை அமைந்துள்ளது பொதுமக்களுக்கும்.வாகன ஒட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த கடையை…
உடுமலை செல்வி கேஸ் ஏஜென்சீஸ் சார்பில் இலவச கேஸ் ஸ்டவ் சர்வீஸ் முகாம்.
உடுமலை பாரத் கேஸ் விநியோகஸ்தரான உடுமலை செல்வி கேஸ் ஏஜென்சி சார்பில் கேஸ் அடுப்பு பழுது நீக்கம் இலவச சர்வீஸ் முகாம் அலுவலக வளாகத்தில் நடந்தது. கோவை மண்டல பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மண்டல மேலாளர் ஷாஷாங் சர்மா மற்றும் சேல்ஸ்எக்ஸ்குட்டிவ் நிஷாங்கா ஆகியோர் அறிவுரையின்படி உடுமலை செல்வி கேஸ் ஏஜென்சிஸ் உரிமையாளர் எம்பி அய்யப்பன் கேஸ் அடுப்பை பயன்படுத்தும் விதம் கேஸ் சிலிண்டரை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி பயன்படுத்தும் போது என்னென்ன பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க…
பழனியருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிகள் விற்பனை நடைபெற்று வருவதாக பழனி நகர் காவல் துணை கண்காணிப்பாளர் தனஜெயத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது . .எனவே ஆயக்குடி காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் சார்பு ஆய்வாளர் ஆனந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது. முன்னதாக ஆயக்குடி பகுதியில் நடைபெற்ற சோதனையில் திண்டுக்கல்லில் இருந்து கேரளா மாநிலகள்ள லாட்டரிகள் ஆயக்குடிக்கும் மற்றும் பழனி பகுதிகளுக்கும்…
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் உளுந்தூர்பேட்டை பகுதி வழக்கறிஞர்களின் வாகனங்கள் கட்டணமின்றி செல்ல அனுமதிக்காததால் வழக்கறிஞர்கள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் உளுந்தூர்பேட்டை பகுதி வழக்கறிஞர்கள் கட்டணமின்றி செல்ல ஏற்காததால் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்பொழுது நாங்கள் உள்ளூரை சேர்ந்தவர்கள் ஒரு நாளைக்கு இந்த சுங்கச்சாவடியை பலமுறை சென்று வருகிறோம் எங்கள் வாகனங்களில் இருந்து கட்டணம் எடுக்காமல் அனுமதிக்க வேண்டும் எனக் கூறி தொடர்ந்து முற்றுகையிட்டனர் இதனால் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தை…
உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் கனமழை எதிரொலி பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மழையில் பஞ்சலிங்க அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குருமலை குழிப்பட்டி ,துணியால் பகுதியில் கனமழை பெய்த காரணத்தால் இன்று இரவு 7:30 மணி பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால் அடிவாரம் பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலை காற்றாற்று வெள்ளம் சூழ்ந்தது இதற்கிடையில் இரவு நேரம் என்பதால் பக்தர்கள் யாரும் கோவிலில் இல்லை எனவும், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கோவில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் கோவில் பணியாளர்கள்…
விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த, வங்கி அதிகாரியின் உடல் உறுப்புகள், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தானமாக பெறப்பட்டன! குடும்பத்தாருக்கு நன்றி தெரிவித்த, மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி!
திருநெல்வேலி,நவ.17:-தநிவேதா பிரியதர்ஷினி [வயது. 32].திருமணம் ஆன இவர், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள, பாளையங்கோட்டை உள்ள ஏனாதி நைனார் தெருவில், குடும்பத்துடன் வசித்துவருகிறார். இவருடைய கணவர், தனியார் கல்லூரி ஒன்றில் பணியற்றி வருக்கிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர், நெல்லை மாவட்டம் “வீரவநல்லூர்” பகுதியில் உள்ள, “தமிழ்நாடு கிராம வங்கி” யில், அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் பணிக்காக, கடந்த 12.11. 2024 அன்று, தனது இருசக்கர வாகனத்தில் வீரவநல்லூருக்கு, சென்று கொண்டிருந்தார். அப்போது,…
உளுந்தூர்பேட்டை அருகே நாச்சியார்பேட்டை கிராமத்தில் தமிழக விலசாயிகள் பாதுகாப்பு சங்கம் நிர்வாகிகள் கிளை அறிமுக கூட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியம் நாச்சியார்பேட்டை ஊராட்சியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் அறிமுக கூட்டமும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.இளையராஜா , கடலூர் மாவட்ட தலைவர் டி.மனோகரன் , கடலூர் மாவட்ட செயலாளர் எஸ்.அருள்செல்வன் , கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் எஸ்.அழகேசன் , கடலூர் கிழக்கு மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் குஞ்சிதபாதம் , அண்ணா கிராம ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஹரிதாஸ் , மேலும்…
உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஆனால் முறையான அறிவிப்பு இல்லாததால் மாற்றுத் திறனாளிகள் முகாமை பயன்படுத்தி அரசு வழங்கும் உதவிகளை பெற இயலாத நிலை ஏற்பட்டது.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 21 வகையாக பிரிக்கப்பட்டு தேசிய அடையாள அட்டையுடன் கூடிய 20 வகையான உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதை பெறுவதற்காக மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த மாதத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்டம் முழுவதும் முகாம்கள் நடத்தப்படுகிறது.அந்த வகையில்…
தமிழக முதல்வரின் மகிழ் முற்றம் அரசு பள்ளிகளில் கோலகல துவக்க விழா.
மாண்புமிகு தமிழக முதல்வர். மு.க.ஸ்டாலின்” அவர்கள் அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் மாணவ மாணவியர்களின் தலைமைப் பண்பினை வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் சட்டமன்ற பட்ஜெட்க் கூட்டத் தொடரில் வெளியிட்ட அறிவிப்பின் படி நவம்பர் 14ம் நாள் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு பள்ளியிலும் ” மகிழ்முற்றம் ” துவங்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு இணங்க கடையநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நவம்பர் 14 அன்று மகிழ் முற்றம் அமைப்பானது பள்ளியின் தலைமையாசிரியை பிரேமலதா அவர்களின்…
திருநங்கைகளுக்கு அறிவுரை வழங்கிய தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
தென்காசியில் பேருந்து நிலையம், சுற்றுலாத்தலங்கள் போன்ற அதிக பொதுமக்கள் கூடும் பகுதிகளில் திருநங்கைகள் தங்களிடம் பிரச்சனை செய்வதாகவும், மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதாகவும் அசிங்கமாக பேசுவதாகவும் தொடர் புகார்கள் வந்த நிலையில் இதை தடுக்கும் பொருட்டு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன் தலைமையில் தென்காசி பகுதியில் உள்ள திருநங்கைகளை அழைத்து அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. திருநங்கைகள் மீது காவல்நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் புகார் கொடுத்து உள்ளனர் எனவும், ஒரு சில திருநங்கைகள் செய்யும்…
