தமிழ்நாடு
கோவை காந்திபுரம் சிறைச்சாலை மைதானம் அருகில் 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள செம்மொழிப்பூங்கா திறப்பு.
கோவையில் இன்று (25.11.25) மதியம் கோவையின் இன்னொரு அடையாளமான பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள செம்மாழி பூங்காவை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு, மு க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் செம்ம எபெக்ட் தொழில்துறை அமைச்சர்திரு, நேரு, முன்னாள் அமைச்சர் திரு வி செந்தில் பாலாஜி, கோவை வடக்குமாவட்ட செயலாளர் திரு A.ரவி, தெற்கு மாவட்ட செயலாளர்திரு, தளபதி,முருகேசன், மாநகர் மாவட்ட ம பொறுப்பாளர்,திரு,செந்தமிழ் செல்வன். கோவை மாவட்டம எம்.பி திரு, கணபதி ராஜ்குமார், அரசு அதிகாரிகள்,…
நாகர்கோவில் 39-வது வார்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தீவிரம் – துணை ஆணையர் ராகுல் குமார் நேரில் ஆய்வு.
நாகர்கோவில்; நவ.25 நாகர்கோவில் மாநகராட்சியின் 39-வது வார்டில் நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை (SIR) உதவி ஆட்சியர் திரு. ராகுல் குமார், ஐ.ஏ.எஸ் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். கோட்டார் தைக்கா பள்ளி அலுவலக வளாகத்தில் நடைபெறும் படிவங்கள் பெறுதல், பதிவுசெய்தல், விவரங்கள் சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளை அவர் தீவிரமாக கண்காணித்தார். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் போன்ற செயல்பாடுகள் துல்லியமாகவும் துரிதமாகவும் நடைபெற வேண்டும் என அவர்…
மதுரை மாநகராட்சிக்கு வருவாய் இழப்பீடு ஏற்படுத்தும் கம்யூனிஸ்ட் கட்சி சங்கத்தை சேர்ந்த செயலாளர் ஜெயபாரதி.
மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள தயிர் மார்க்கெட்டில் கம்யூனிஸ்ட் கட்சி சங்கத்தின் சேர்ந்த பொருளாளர் ஜெயபாரதி மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் வியாபாரிகளிடம் தினசரி ஐந்து ரூபாய் அடாவடியாக வசூல் செய்து வருகிறார் அதற்கு பேர் பிச்சையா? அல்லது மாமூலா? என்று வியாபாரிகள் குழப்பத்தில் உள்ளார்கள். மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வரும் தயிர் மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் வியாபாரிடம் தினசரி ஐந்து ரூபாய் வசூலித்து மதுரை மாநகராட்சிக்கு இழப்பீடு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் ஏற்கனவே…
திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில், திருநெல்வேலி- திருவனந்தபுரம் தேசிய நான்குவழி நெடுஞ்சாலையில், சென்டர் மீடியனில் மோதி விபத்துக் குள்ளான கார்! அதிர்ஷ்டவசமாக, காயம் எதுவுமின்றி, காரில் வந்தவர்கள் உயிர் தப்பினர்!
திருநெல்வேலி,நவ. 24:-திருநெல்வலி கிழக்கு மாவட்டம் பணகுடியில், திருநெல்வேலி- திருவனந்தபரம் தேசிய நான்குவழி நெடுஞ்சாலையில், இன்று (நவம்பர். 24) மாலையில், விபத்து ஏற்பட்டது. கன்னியாகுமரியில் இருந்து, திருநெல்வேலியை நோக்கி வந்து கொண்டிருந்த கார், பணகுடி “நெருஞ்சி காலனி” அருகே, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த, சென்டர் மீடியனில் மோதி, அதனை உடைத்துக்கொண்டு, எதிர் திசையில் பாய்ந்தது. இந்த விபத்து குறித்த செய்தி அறிந்தவுடன், பணகுடி காவல் உதவிஆய்வாளர் வினுகுமார் மற்றும் காவலர் சோமசுந்தரம் ஆகிய…
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்மழை! தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு! ஆற்றில் இறங்க, அருவியில் குளிக்க தடை! தயார் நிலையில், தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மாநில பேரிடர் மீட்பு படைகள்! சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் சுகுமார் கூட்டாக பேட்டி!
திருநெல்வேலி,நவ.24:- வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் இடைவிடாத தொடர்மழை நீடித்து வருகிறது. இம்மாவட்டத்தின் முக்கிய அணைகளான பாபனாசம், மணிமுத்தாறு அணைகளும், மாவட்டத்தின் பெரிய குளமான மானூர் குளமும், வேகமாக நிரம்பி வருகின்றன. வெள்ளப்பெருக்கு காரணமாக தாமிரபரணி ஆற்றில் இறங்குவதற்கும், மணிமுத்தாறு அருவி மற்றும் அகஸ்தியர் அருவி ஆகியவற்றில் குளிப்பதற்கும், மாவட்ட நிர்வாகம் “தடை” விதித்துள்ளது. இதற்கிடையே, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார்…
தென்காசி அருகே கோர விபத்து இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் ஆறு பேர் பலி 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.
தென்காசி நவம்பர் 24 தென்காசி அருகே உள்ள கடையநல்லூர் அடுத்துள்ள இடைகால் அருகே இன்று காலை 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 20 பேர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் தென்காசி அரசு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு காவல்துறை விரைந்து விசாரணை நடத்தி வருகிறது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே தென்காசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற…
உடுமலை மூணாறு சாலையில் கம்பீரமாக நடந்து வந்த ஒற்றை காட்டு யானையின் வீடியோ வைரல் – சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக செல்ல வேண்டுமென வனத்துறையினர் எச்சரிக்கை…!
உடுமலைநவம்பர் 22. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது சுற்றுலாத்தலமான மூணாறு இந்த பகுதிக்கு நாள்தோறும் வெளியூர் மற்றும் வெளி மாவட்டம் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த சுற்றுலா பயணிகள் உடுமலை மூணாறு செல்லும் சாலை அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ளதால் இந்த வனப் பகுதியில் இருந்து அடிக்கடி வனவிலங்குகள் வெளியேறி தண்ணீர் அருந்துவதற்காக சாலையை கடந்து செல்வது வழக்கம் குறிப்பாக யானைகளில்…
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிதிட்ட பணிபுரியும் பயனாயாளர்களுக்கு சமையல் எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்..
உடுமலைநவம்பர் 22. உடுமலை அருகே உள்ள குறுஞ்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி உடுமலை பாரத் கேஸ் ஏஜென்சீஸ் விநியோகஸ்தரான செல்வி கேஸ் சார்பில் குறுஞ்சேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பணியாற்றும் (100 நாள் வேலை) பயனாளர்களுக்கு கிராம விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் எரிவாயு விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பரமேஸ்வரி தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற செயலாளர்…
சுசீந்திரம் ஆஸ்ரமத்தில் சபரிமலை அன்னதான ஆரம்ப விழா முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் துவக்கி வைத்தார்…
சுசீந்திரம்; நவ.22:- அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சுசீந்திரம் ஆஸ்ரமத்தில் சபரிமலை விழாக்கால அன்னதான ஆரம்ப விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான திரு. என். தளவாய்சுந்தரம் அன்னதானத்தை துவக்கி வைத்தார். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த அன்னதானம், இவ்வருடம் நவம்பர் 21 முதல் ஜனவரி 15 வரை—தினமும் நடைபெற உள்ளது. ஐயப்ப பக்தர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதி வழங்கி வருவது பாராட்டத்தக்க தொண்டாக இருப்பதாக அவர் தெரிவித்தார்….
திருநெல்வேலி மாவட்ட கடலோர கிராமங்களின், மீனவ சங்கத்தினருக்கு 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான, டிராக்டர்கள் வழங்கிய, மாவட்ட ஆட்சித்தலைவர்!
திருநெல்வேலி,நவ.22:- நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், இன்று (நவம்பர்.22) காலையில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சி ஒன்றில், இம்மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களான, ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம், விஜயாபதி ஊராட்சி “தோமையர் புரம்” மீனவ சங்கத்தினருக்கும், வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம், செட்டிகுளம் ஊராட்சி, “பெருமணல்” மீனவ சங்கத்தினருக்கும், தலா 14 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2 டிராக்டர்களை, திருநெல்வேலி “நாடாளுமன்ற உறுப்பினர்” வழக்கறிஞர் செ. ராபர்ட் புரூஸ் முன்னிலையில், “மாவட்ட ஆட்சித்தலைவர்”…
