Headlines

ஆம்பூர் அருகே கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட இருளர் குடும்பத்தை சேர்ந்த 7 மீட்பு. வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜித்தா பேகம் நடவடிக்கை.

ஆம்பூர் அருகே கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட இருளர் குடும்பத்தை சேர்ந்த 7 மீட்பு. வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜித்தா பேகம் நடவடிக்கை.

வாணியம்பாடி,ஜூலை.24- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாய்க்கனேரி ஊராட்சி காமனூர்தட்டு மலை கிராமத்தில் ராஜா என்பவருக்கு சொந்தமான நிலத்தை மகாவிஷ்ணு என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.

இவரிடம் வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் கிராமத்தை சேர்ந்த இருளர் குடும்பத்தினர் 10 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதற்காக அந்த குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 7 பேரை மகாவிஷ்ணு தனது நிலத்தில் விவசாய மற்றும் கால்நடை பராமரிப்பு பணி செய்ய அழைத்து சென்று கொத்தடிமைகளாக நடத்தி வந்துள்ளார்.

தகவலின் பேரில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜிதா பேகம் காமனூர் தட்டு மலை கிராமத்திற்கு நேரில் சென்று கொத்தடிமைகளாக நடத்தி வந்த 7 பேரை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *